”உங்கள் காலில் விழுந்து வணங்குகிறேன், படத்தை
திருட்டு விசிடியில பார்க்கதிங்க… தயவு செய்து தியேட்டர் போய் படம் பாருங்க……”
என்று இரண்டு நாளைக்கு முன்னர், அஞ்சான்
வெளியிட்டு விழாவில் நடிகர் சூர்யா கூறிய வார்த்தைகள் இவை. ஒவ்வொரு நடிகரும், ஒவ்வொரு
தயாரிப்பாளரும் படத்தை வெளியிடும் போது கூறும் வார்த்தைகள் இவை. இந்த திருட்டு
விசிடியை ஒழிப்பதற்கு, தமிழக அரசும், திரை துறையும்
பல முயற்சிகளை எடுத்தும் எந்த பலனுமில்லை.
கடந்த வருடத்தில், நடிகர்
கமல் அவர்கள், தான் நடித்த திரைப்படத்தை நேரடியாக DTH
முறையில் ஒளிப்பரப்ப திட்டமிட்டார். இதற்கு தியேட்டர் உரிமையாளர் சங்கம்
கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க, கடைசி நேரத்தில் மீண்டும் தியேட்டரில் திரையிட பட்டது.
இதே மாதிரியான மற்றொரு முயற்சியை சேரன் முயல்வதாக கடந்த வாரம் தெரிவித்தார். சேரன்
தன்னுடைய படத்தை C 2 H என்ற புது முறையை பின்பற்றுகிறார். C 2 H முறையில்
நேரடியாக, வீட்டிற்கு ஒரினல் டிவிடி பணத்திற்காக விற்பனை
செய்யப்படும். இதற்கும் தியேட்டர் உரிமையாளர் சங்கத்தில் இருந்து கடுமையான
எதிர்ப்பு கிளம்பி உள்ளது
கடந்த வாரம், நடிகர்
விஷாலும் உள்ளூர் கேபிள் டிவிகளில் புது படங்கள் திரையிட்ட நபர்களை போலிஸில்
கண்டுபிடித்து ஒப்படைத்தார். இவ்வாறு திரை துறையின் ஒவ்வொரு நபரும் ஏதாவது ஒரு
வகையில் திருட்டு விசிடியை ஒழிக்க முயல்கிறார்கள். ஆனால் விடிவு தான்
கிடைக்கவில்லை.
இதற்கு மக்களை மட்டுமோ அல்லது திருட்டி விசிடி கும்பலை
மட்டும் தவறு செய்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. திரை துறையினரும் தியேட்டர்
உரிமையாளர்களும், மறைமுகமாக
காரணம் என்று நான் நினைக்கிறேன்.
பெரிய நடிகர் திரைப்படம் என்றால், குறைந்த
பட்சம் 50 கோடியிலிருந்து 100 கோடி வரை தொடலாம். அதில் நடிகர் நடிகைக்கு பாதி பணம்
சம்பளமாக தரப்படுகிறது. சம்பளத்தினாலே படத்தின் பட்ஜெட் கூடுகிறது என்பது பல
தாயாரிப்பாளர்களின் வாதம். இதனால் தான், சூப்பர் ஸ்டார்
பாபா, குசேலன் தோல்வி அடைந்த போது, தன்
சம்பளத்தை அளித்தார்.
படத்தின் பட்ஜெட் அதிகமாகும் போது, அதிக
விலைக்கு தியேட்டர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அவர்களும் டிக்கெட் விலையை
ஏற்ற வேண்டிய உள்ளது. அதோடு மட்டுமில்லாமல், அங்கு
விற்கப்படும் நொறுக்கு தீனிகள் விலைகளையும் ஏற்றி விடுகின்றனர்.
அதிகப்படியான விலையை சாமாளிக்க, தியேட்டர்
உரிமையாளர்களே ப்ளாக்கில் டிக்கெட் விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.
கடந்த பத்தாண்டுகளில், பல தியேட்டர்கள் கல்யாண மண்டபங்களாக மாறி உள்ளது.
சராசரி நான்கு பேர் கொண்ட குடும்பத்தில், ஒரு
படம் தியேட்டரில் காண வேண்டுமானால், குறைந்த பட்சம்
1000 ரூபாய் தேவைப்படுகிறது. அவனுடைய மொத்த வருமானத்தில் 5% வது, ஒரு திரைப்படத்திற்கு செலவிட வேண்டி வரும். அப்படியானால்
அவன் எப்படி தியேட்டருக்கு செல்ல யோசிப்பான். திருட்டு டிவிடி வாங்கி, வீட்டில்
உள்ள ஹோம் தியேட்டர்ல, மொத்த குடும்பமே 50 ரூபாய் படம் பார்த்து விடுவார்கள்.
இல்லையேல், ஒரு மாதத்திலே ஒரு வருடத்திலோ ஒளிப்பரப்பாகும் சின்ன
திரையில் பார்த்து விடுவார்கள்.
தமிழ் சினிமாவில் வருடத்திற்கு குறைந்த பட்சம் 200
படங்களாவது வெளிவருகின்றது. அதாவது வாரத்திற்கு 4 முதல் 5 படங்களாவது வெளி வந்து விடுகிறது. அதுவும்
பெரிய பட்ஜெட் படம், ஸ்டார் நடிகர் படம் என்றால் இரண்டு அல்லது மூன்று தான்
வெளிவரும். அத்தனை படங்களையும் தியேட்டருக்கு போய் பார்ப்பது எப்படி சாத்தியம்.
தற்போது பாக்ஸ் ஆபிஸ் படம் என்பது குறைந்த படசம் மூன்று
வாரம் ஒடினால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 50 நாள், 100
நாள் என்பதெல்லாம் எப்போதோ மறைந்து விட்டது. படம் வெளி வந்த ஒரு வாரத்திலே சக்ஸஸ்
மீட் வைக்கிறார்கள். அதோடு மட்டுமில்லாமல், இன்றும்
100 படங்களாவது முடிக்கப்பட்ட நிலையில் தியேட்டர் கிடைக்காமல், சிறு
தயாரிப்பாளர்கள் புலம்பி கொண்டிருக்கிறார்கள்.
இண்டர்நெட்
பற்றிய முறையான சட்ட வரைவு வரையறுக்க முடியாததால், இணையம்
வழியான பதிவிறக்கத்தை தடுக்க முடியாமல் போகிறது. வெளி நாடுகளில் இருந்து திருட்டு
விசிடி இந்தியாவிற்கு எளிதாக நுழைந்து விடுகிறது.
பட்ஜெட்டை குறைக்காமல், டிக்கெட்
விலையை குறைக்காமல், இணைய வழி பதிவிறக்கத்தை தடுக்கமால் திருட்டு விசிடியை
குறைக்க முடியாது என்பது எனது திண்ணம்.
|||||||உங்களை
போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||

No comments:
Post a Comment