Saturday, October 25, 2014

தீபாவளி திருநாள்

வடகிழக்கு பருவமழை தொடக்கம், விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு தீபாவளியும் வந்து விட்டது. தீபாவளிக்கு புதன் கிழமை மட்டும் தான் விடுமுறை இருக்கும் என்று வருத்தப்பட்ட மாணவர்களுக்கு, மழை அதிகமான விடுமுறை தந்து இருக்கிறது. அம்மாவின் விடுதலையும் அதிமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை தந்து இருக்கும். அரசு ஊழியர்களுக்கும், 7 சதவீத அகவிலைப்படி உயர்வு, போன வாரம் தான் அறிவிக்கப்பட்டது. இப்படியாக,. அனைவருக்கும் இந்த தீபாவளி சந்தோஷமாக அமைந்துள்ளது.

ஆனால் வியபாரிகள், மழையினால் சற்று பாதிப்பட்டுள்ளனர். அதிலும் வெடி விற்பனை செய்பவர்களுக்கு கொஞ்சம் பாதிப்பு அதிகம்.

நரசுரனை கொன்ற தினத்தை, தீபாவளியாக கொண்டாடுகிறோம் என்கிறது புராண வரலாறு. ராமன் வனவாசம் முடிந்து, நாடு திரும்புகையில் தீபம் ஏற்றி விளக்கேற்றினர் என்பது மற்றொரு வரலாறு எது எப்படியோ, நமக்கு ஸ்விட் கொடுத்தா…. சரி…….

தீபாவளி என்றவுடன் சற்றொன்று நினைவில் வருவது மூன்று விஷயங்கள். புதுத்துணி, இனிப்பு வகைகள் மற்றும் பட்டாசு வகைகள். இவற்றில், எது குறைந்தாலும் நம் மனம் மகிழ்ச்சி கொள்ளாது.

பத்து வருடத்திற்கு முன்னர் , பெரும்பாலும் புது புதிதாக துணிகள் எடுப்பது என்பது, பெரும்பாலும் தீபாவளி திருநாளிற்கே இருக்கும். அதை அடுத்த நாள், பள்ளிக்கு போட்டுகிட்டு போய், “ இது தான்  என்னுடைய தீபாவளி ட்ரெஸ் என்று தற்பெருமை கொள்ளும் சந்தோஷமான தருணங்கள், இன்னும் மறக்க இயலவில்லை. உன்னோடு எவ்வளவுடாஎன்னோடது இவ்வளவு டா…..” என்பதும், அதில் நம்முடைய துணியின் விலை அதிகமாக இருந்தால், காலரை தூக்கி விட்டு நடப்பதும் நெஞ்சில் நிற்கும் தருணங்கள்.. அதெல்லாம், இப்போது இருக்கிறதா? என்று தெரியவில்லை. இன்றெல்லாம், நினைத்து உடனே, ஷாப்பிங் கிளம்பி போய், ட்ரெஸ் எடுத்து விடலாமே!!!! இதனால், தீபாவளிக்கு எடுக்கப்படும் , புதுத்துணியின் மீதான நிச்சயம் ஆர்வம் குறைந்து விடும்.

 முருக்கு, அதிரேசம், கெட்டி உருண்டை, வடை என்று பலவகையான ஸ்விட் வகைகளை நினைக்கும் போது, நாக்கில் எச்சில் ஊரும். முன்பெல்லாம், பத்து நாளைக்கு முன்பே, அதற்கான பொருட்களை வாங்கி, மிஷினில் அரைத்து, ஐந்து நாட்களுக்குள் பலகாரங்களை சுட ஆரம்பித்து விடுகிறார்கள். அது ஒரு திருவிழா கோலம் தான். ஆனால், இப்போது சுவீட் கடையில் தான் கூட்டத்தை  பார்க்க முடிகிறது. சுவையாக செய்யக்கூடிய பக்குவம் வராத தாலும், அதற்கான நேரம் செலவு செய்யவும் யாரும் தயாராக இல்லை. காசு இருந்தால், எந்த வித பலகாரமும் எளிதாக வாங்கி விடலாம்.

தீபாவளி என்றால், என்றுமே மாறாமல் இருப்பது என்றால் பட்டாசு மட்டுமே. வெடியின் வகைகள் அதிகரித்து விட்டதால், பிள்ளைகளுக்கு சந்தோஷத்திற்கு குறைவில்லை.

அமைதிக்கான நோபல் பெற்ற கைலாஷ், ஒரு கருத்தை முன் வைத்தார். வெடி தயாரித்தலில் குழந்தை தொழிலாளர்கள்  பயன்படுத்தப்படுகின்றார்கள். எனவே, வெடிப்பதை குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதோ போல்வெடிப்பதினால் காற்று மாசுப்படுகிறது என்ற கருத்தும் சமூக ஆர்வலர்களால் முன் வைக்கப்படுகிறது. தீயனைப்பு துறையினரும், பாதுகாப்புக்காக வெடிக்க உபயோகம் செய்யுங்கள் என்று கூறுகின்றனர். இதையெல்லாம், மனதில் கொண்டு, பாதுகாப்பாக வெடி வெடிப்பது நல்லது.

ஒவ்வொரு டிவியிலும், எத்தனை படம் போடுறாங்கஎப்படி எல்லாவற்றையும் ஒண்ண பார்க்க முடியும் …… இதுக்கு முதல்ல ஒரு முடிவு கட்டணும்

அதே மாதிரி தீபாவளி அன்றைக்கு போன, நிறைய ஸ்விட் கொடுப்பாங்க… .ஆனால், நம்மள சாப்பிட முடியாது…. ஒரு மாசம் கழித்து போனஎதுவும் இருக்காது…. இன்னுமே, தீபாவளி ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு மாதம் மாத்தி வைச்சுடுவோமா?????

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


வேஷ்டி விளம்பரங்கள்

சென்னை கிரிக்கெட் கிளப்பில் வேஷ்டி அணிந்து வந்த நீதிபதிகளை அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு பல தரப்பிலிருந்து, கண்டனம் தெரிவிக்கப்பட்டது. உடனே, தமிழக அரசும் பராம்பரிய உடையான வேஷ்டி அணிந்து வருவதை யாரும் தடை செய்யக்கூடாது என்று சட்டம் கொண்டு வரப்பட்டது.

இதனால் தழிகத்தின் பராம்பரியமும் பண்பாடும் நிலை நிறுத்தப்பட்டது என்று நாமும் மன நிம்மதி கொண்டோம். பண்பாடு என்பது வேஷ்டி அணிந்து வருவது மட்டுமில்லாது, என்பதை மறந்து விடலாகாது.

இதெல்லாம் யாருக்கும் உதவியதோ இல்லையோ, வேஷ்டி உற்பத்தி செய்யும் கம்பெனிகளுக்கு, நன்றாக உதவியது என்றே கூறலாம். அதற்கு பிறகு, தமிழர்களின் அடையாளம் வேஷ்டி என்று விளம்பரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு அண்ணா, காமராஜர் போன்ற அரசியல் தலைவர்களை எடுத்து கொண்டார்கள்.

இதையெல்லாம் மிஞ்சிய மற்றொமொரு விளம்பரம். வேஷ்டி கட்டிகிட்டு, வாக்கிங் போகலாம், ஸ்க்கிப் பண்ணலாம்…. இப்படி பல செயல்களை, வேஷ்டி அணிந்தால் எளிதாக செய்ய முடியுமாம்??? என்ன கொடுமை சார்….இது …… சிரிப்பை தாண்டி கோபம் தான் வருகிறது……..

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


வியபார உத்திகளும் இலவசங்களும்

நான் கடைத்தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். தீபாவளி வியபாரம் ஒவ்வொரு கடையிலும், விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. ஒரு மளிகை கடையின் வாசலில், நிறைய பிளாஸ்டிக் வாளிகள் தொங்க விடப்பட்டிருந்தது.

என்ன பிளாஸ்டிக் வாளியை சேர்த்து விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டார்களா? என்ற மன கேள்வியோடு, விசாரித்து பார்த்தேன். தீபாவளி ஆபராக, அதிகமாக சமையல் எண்ணெய் வாங்குபவர்களுக்கும், அதிக மாளிகை சாமான்  வாங்குபவர்களுக்கும் இலவசமாக பிளாஸ்டிக் வாளி வழங்கப்படுகிறதாம்.

விற்பனை அதிகப்படுத்த, துணிக்கடை போல, மாளிகை கடையிலும் இலவசமாக தர அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்த அளவிற்கு, இலவசம் என்ற வார்த்தை நம் மனதில் ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இலாப சதவீதம் குறைவான மளிகை கடையில், இவ்வளவு அன்பளிப்புகளையும், இலவசங்களையும் வழங்குவது கடினம். அதனால், அந்த பிளாஸ்டிக் வாளியின் விலையை, வாங்குகிற சாமான்களின் மீதே வைக்க வேண்டிய அவசியம் வருகிறது. விலை சற்று அதிகமாகும். அதை, நாம் சிறிது யோசிப்பதில்லை. இலவசம் என்ற வார்த்தையுடனே அடங்கி விடுகிறோம் என்று நினைக்கிறேன்.

இந்த விஷயத்தில், உங்களுக்கும் கடைக்காரருக்கும் எந்தவோரு நட்டமும் இல்லை. லாபம் இல்லை. ஆனால், வியபார உத்தி என்ற பெயரில் சிறிய ஏமாற்ற தந்திரம்அவ்வளவு தான்……    
    
|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


மலக்கட்டை போக்குவது எப்படி

கால சக்கரத்தில் அடிப்பட்டு வீழும் மனிதன், தன்னுடைய அன்றாட செயல்களை  கூட செய்ய முடியாமல் தவிப்பது, காலத்தின் கட்டாயமாகி விட்டது. சாப்பிடுவதில் தொடங்கி மலம் கழிப்பது வரை, ஏதே ஒரு கடமையை போல செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதிலும், மலம், சிறுநீர், வியர்வை போன்ற உடலின் கழிவு பொருட்களை முறையாக வெளியேற்றாத தால், பல நோய்களுக்கு காரணமாகி விடுகிறது.

மலம், சிறுநீர், கொட்டாவி, பசி, தூக்கம் போன்ற பதினாங்கை, இயற்கை வேகங்கள் என்று சித்தர்கள் வகுத்துள்ளனர். அவைகளை முறையாக வெளியேற்ற வேண்டும் அல்லது கடைபிடிக்க வேண்டும். இல்லையேல், பல உடல் உபாதைகள் உண்டாகும்.

அதில் முக்கியமான ஒன்று மலம். மலம் குறைவாக வெளியேற்றப்படுவது அல்லது தடை ஏற்படுவது மலக்கட்டு அல்லது மல பந்தம் என்கிறோம். மலக்கட்டு என்பது குறிகுணமே தவிர, நோயல்ல

மலம் எவ்வாறு வெளியேற்றப்படுகிறது?

உண்ட உணவு சிறுகுடல் வழியாக உட்கிரக்கப்பட்டு, மீதி கழிவு பொருட்கள் பெருங்குடலில் வந்து சேருகிறது. அவ்வாறு சேகரிக்கப்பட்ட கழிவு பொருள், மலக்குடலினை அடையும் போது நரம்பு துண்டலின் மூலமாக., நமக்கு மலம் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. இவ்வாறு தினமும் ஒரு முறை அல்லது இரு முறை வெளியேற்றப்படுகிறது.

அபானன் வாயுவின் செயல்களினால், மலமானது வெளியேற்றப் படுகின்றன என்று சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றது.

மலம் கழிக்க முறை?

இந்திய கழிவறை(squatting toilet posture) முறையே சிறந்தது. Anorectal angle (the angle formed by the junction of the rectum with the anus) இந்திய கழிவறை முறையில் நேரடியாக(900) இருப்பதால், மலம் வெளியேற்றப்படுவது எளிதாகிறது. இந்த மதிப்பு மேற்கத்திய(sitting toilet posture)  முறையில் மாற்றம் ஏற்படுவதால், சில தடைகளை ஏற்படுத்துகிறது.

மலம் நீர் கழிக்கையில், முதலில் சிறுநீரும் ,பின்னர் மலமும் கழிக்க வேண்டும். இந்த முறை மாறுமானால், நோய் வர வாய்ப்புள்ளது என்று எடுத்து கொள்ளலாம்.

மலம் கழிக்கையில், வலது கையினால், இடப்பக்கத்து அடிவயிற்றை பிடித்திருக்கும் போது எளிதாக மலத்தை வெளியேற்ற முடியும்.

மலக்கட்டு என்றால் என்ன?

முறையான வரைமுறை இல்லை. இருந்தாலும், வாரத்திற்கு மூன்றோ அல்லது அதற்கு குறைவான தடவை மலம் கழிப்பதும், மலத்தை முறையாக வெளியேற்றாத தன்மை, முயற்சி செய்து மலத்தை வெளியேற்றதல் போன்ற தன்மைகளை மலக்கட்டு என்று கூறலாம்.

எவ்வளவு பேர் உள்ளனர்?

உலக அளவில் சுமார் 12 சதவீத மக்கள் மலக்கட்டு பிரச்சனையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் சுமார் 5 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக  அறிக்கைகள் கூறுகின்றன. ஆண்களை விட பெண்கள் அதிகமாக பிரச்சனைக்கு உள்ளாகின்றனர். மலக்கட்டு பிரச்சனை, முதியோர்களிடம் அதிகமாக காணப்படுகிறது.

எவ்வாறு உண்டாகிறது?

நார் சத்து மிக்க உணவு பொருட்களை குறைத்து எடுத்தல், குறைந்தளவு நீர் அருந்துதல், உடல் உழைப்பு இன்மை, மன அழுத்தம் மற்றும் பிரசவ காலங்களில் ஏற்படலாம்.

மூலம், ஆசன வாய் வெடிப்பு, தைராய்டு சுரப்பு குறைந்த நிலை, தசை வாதம், சர்க்கரை வியாதி, நடுக்கு வாதம் மற்றும் மன அழுத்தத்திற்கான மருந்துகளினாலும் ஏற்படலாம்.

மேற்கண்ட காரணங்களினால், பெருங்குடலின் இயக்க தன்மை குறைந்தும், நீர் சத்து அதிகமாக உட்கிரக்கப் படுவதாலும் மல பந்தம் ஏற்படுகிறது. கழிவறைக்கு செல்லும் எண்ணம் ஏற்பட்டு, அடக்க முயற்சிக்கும் போது, அதிக படியான நீர் உறிஞ்சப்பட்டு மலம் கடின தன்மை அடைகிறது. தற்போதைய சூழலில், இந்த நிலை தான் பெரும்பாலும் உண்டாகிறது.

எவ்வகையான பாதிப்புகளை உண்டாக்கும்?

மலமதை யடக்கினலே
மலந்தனை வாயு தள்ளும்
சல தோட முழங்காலின் கீழ்
தன்மையாய் நோவுண்டாகும்
தலைவலி மிக வுண்டாகும்
சத்தமா மபான வாயு
பெலமது குறையும் வந்து
பெருத்திடும் வியாதி தானே…”
     என்று வியாச பகவான் சரீர சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளன. தலைவலி, உடல் வலி, உடல் பலக்குறைவு, வயிற்று வலி போன்றவை ஏற்படும். மேலும் பசியின்மை, வயிறு உப்பிசம், வாந்தி போன்றவையும் ஏற்படலாம்.

மலக்கட்டு தொடர்ந்து கவனிக்கப்படாமல் இருந்தால், மூலம், மலக்குடல் வெளித்தள்ளப்படல், ஆசன வாயிலிருந்து இரத்தம் வருதல், ஆசன வாய் வெடிப்பு போன்ற நோய்கள் ஏற்படலாம்.

மலக்கட்டை தடுக்கும் முறைகள்:

கீரை வகைகள் மற்றும் நார் சத்துள்ள உணவு பொருட்களை எடுத்து கொள்ள வேண்டும்.

நீர் அதிகளவு(குறைந்த பட்சம் 2 லிட்டர்) எடுத்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக, காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் எடுத்து கொள்ளவும்

காரமான, எண்ணெய் உணவு பொருட்களை தவிர்க்கவும்.  காபி, டீ, மது மற்றும் புகையிலை பொருட்களை நீக்க வேண்டும்.

நடை பயிற்சி போன்ற எளிய உடற்பயிற்சி முறைகளை மேற் கொள்ள வேண்டும்.

இரவு படுக்கைக்கு போகும் முன் திராட்சை, வாழைப்பழம், பால் போன்ற உணவு பொருட்களை எடுத்து கொள்ளலாம்.

மூலிகை மருந்துகள்:

ஆரம்ப நிலைகளில், மேற்கண்ட எளிய முறைகளை பயன்படுத்தலாம். மலக்கட்டை நீக்க முடியவில்லையெனில், மருந்துகளை எடுக்க ஆரம்பிக்கலாம்.

மலமிளக்கி மருந்துகளை செயல்படும் முறைகளின் அடிப்படையில் இரண்டாக பிரிக்கலாம்.
1.   Stimulative laxative
2.   Bulk forming laxative

Stimulative laxative:
இது குடலின் சுவரில் செயல்பட்டு, நரம்பு தூண்டலை ஏற்பத்தி மலத்தை வெளியேற்ற பயன்படுகிறது. இதனால், குடலின் வெளியேற்றும் தன்மையும், அலைவு தன்மையும் அதிகப்படுத்துகிறது. நீர் உட்கிரகிக்கப்படுவதை தவிர்த்து, கழிவு பொருட்களை நீர் தன்மையாக வெளியேற்றுகிறது. இது சுமார் 4-6 மணி நேரத்தில் செயல்பட கூடியது. இந்த வகை மூலிகைகளை தொடர்ந்து உபயோகப்படுத்தி வரும் போது சில பின்விளைவுகளை ஏற்படுத்தலாம். (.கா) திருநெல்வேலி சென்னா(நிலவாகை), ஆமணக்கு எண்ணெய்

நிலவாகையில் உள்ள senna glycoside பெருங்குடலில் 6-8 மணி நேரத்தில் செயல்பட்டு, மலத்தை வெளியேற்ற கூடியது. Anthroquinine glycoside கற்றாழையில் உள்ளது. இதுவும் 8-10 மணி நேரத்தில் பெருங்குடலில் செயல்பட்டு மலத்தை வெளியேற்றுகிறது.  

ஆமணக்கு எண்ணெயில், ricinoleic acid(triglyceride) என்ற வேதிப்பொருள் உள்ளது. இது சிறுகுடலில் செயல்பட்டு, அலைவு இயக்கத்தை அதிகப்படுத்தி கழிவு பொருட்களை வெளியேற்ற கூடியது. இது 2-6 மணி நேரத்தில் வேலை செய்ய கூடியது.

Bulk forming laxative:


இது பெருங்குடலில் செயல்பட்டு, நீர் உட்கிரகிக்கும் தன்மையை மாற்றி, பெருங்குடலில் அதிகளவு நீரை அதிகப்படுத்தி, கழிவு பொருட்களின் அளவினை அதிகப்படுத்துகிறது. இது மெதுவாக செயல்பட கூடியது(2-3 நாட்கள்). மலமிளக்கியாக நீண்ட காலம் பயன்படுத்தலாம். மேற்கண்ட முதல் வகை மலமிளக்கியை விட சிறந்தது. (.கா) இசப்புகோல் விதை. நார்ச்சத்துள்ள உணவு பொருட்கள் பெரும்பாலும் இந்த வகையை சேர்ந்தது.

இசப்பு கோலை நீருடன் கலந்து எடுத்து கொள்ள வேண்டும். அதிலுள்ள  mucilage என்ற பொருள், நீரினை உறிஞ்சி கழிவு பொருட்களின் கடின தன்மையை குறைத்து, எளிதாக வெளியேற்றுகிறது.

இதை தவிர, திரிபலா சூரணம், கடுக்காய் இலேகியம், வெந்தையம், திராட்சை, கடுகுரோகிணி மற்றும் வில்வம் போன்ற மருந்துகளையும் எடுத்து கொள்ளலாம்.

வஜ்ர ஆசனம், பவள முத்தாசனம், தனுராசனம், யோக முத்ரா, சலபாசனம் மற்றும் புஜங்காசனம் போன்ற ஆசன நிலைகளையும், பஸ்தீரிகா மற்றும் கபால பாத்தி போன்ற பிராணாயம பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம்.

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


அமைதிக்கான நோபல் பரிசு

இந்தியாவினை சேர்ந்த கைலாஷ் வித்யார்த்திக்கும், பாகிஸ்தானை சேர்ந்த மாலாலாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவருக்கும் வாழ்த்துகள். இந்தியாவிற்கு பாகிஸ்தானுக்கும் காஷ்மீரில் தாக்குதல் நடந்து வரும் வேளையில், இந்த பரிசு முக்கியத்துவம் வாய்ந்தது. அதுவும் குழந்தைகளின் கல்விக்கும் முன்னேற்றிதிற்காகவும் இந்த கெளரவம் கிடைந்துள்ளது.

பாகிஸ்தானுக்கு முதல் நோபல் பரிசாகவும், மிக குறைந்த வயதில் பெற்ற பரிசாகவும் மாலாலாவிற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. சுதந்திரம் கிடைத்தப்பிறகு, இந்தியாவிற்கு பாகிஸ்தானுக்கும் உள்ள பிரச்சனைகள் தீர்ந்த பாடில்லை.

பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியிலிருந்து, தலிபான்களின் மீதான எதிர்ப்பு குரலை பல நேரங்களில் பதிவு செய்தவர். அதற்காக பல வேதனைகளையும் அடைந்து, பெண்களின் கல்விக்காகவும் முன்னேற்றிகாகவும் உழைப்பது பாராட்டப்பட வேண்டிய தான். அதுவும் மிக குறைந்த வயதில் என்பது மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்று தான்.

இந்தியாவினை சேர்ந்த கைலாஷ் வித்யார்த்தியும் குழந்தை தொழிலாளர்கள் பலரை மீட்டு, குழந்தைகளின் படிப்பிற்கு வழிவகை செய்தவர். இதற்காக, பல உலக விருதுகளையும் பெற்றவர். ஆனால், இந்தியாவில் போற்றக்கூடிய நபராக இருந்த்தில்லை என்பது வருத்தமான விஷயம். நோபல் பரிசு கிடைத்தப்பிறகு தான் வீக்கிப்பிடியாவில் தேட கூடிய நிலையில் உள்ளது.

எது எப்படியோஇது அமைதிக்கான நோபல் பரிசு, இந்தியா-பாகிஸ்தான் அமைதிக்கு வித்திட்டால் நல்லது.

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||