Friday, January 29, 2016

சித்த மருந்துகளோடு ஆங்கில மருந்துகளை கொடுக்கலாமா

      நேற்று இரவு, ஒர் பெண்மணி கிளினிக்கிற்கு வந்தார். தான் சென்னையில் உள்ள மருத்துவமனையில், வெண் புள்ளிக்காக நாட்டு மருந்து எடுத்து கொண்டிருப்பதாகவும், தற்போது நடுக்கலோடு கூடிய சுரம் இருப்பதாகவும் கூறினார்.

சென்னையில் உள்ள மருத்துவரை தொடர்பு கொண்ட போது, ” நாட்டு மருந்து கடையில் போய் போன் பண்ணுங்கள், அங்குள்ள கடைக்காரிடம் சில மருந்துகளை செல்லுகிறேன்… நீங்கள் சாப்பிடுங்கள்… எக்காரணத்தை கொண்டு ஆங்கில மருத்துவத்தை நாடி விடாதீர்கள்” என்று சொல்லி இருக்கிறார்.

என்னிடம் போனை கொடுத்து பேச சொன்ன போது, அவர் ஹோமியோபதி மருத்துவர் என்று தெரிந்து கொண்டேன். அருகில் உள்ள ஹோமியோ மெடிக்கலுக்கு அனுப்பி வைத்தேன்.

சரி… நான் விஷயத்திற்கு வருகிறேன்.. இந்த மாதிரியான சூழ்நிலைகளை பல தடவை கண்டாகி விட்டது. இந்த இடத்தில் முக்கியமான கேள்வி எழுகிறது. ஒரு நோயிற்கு ஒரு மருத்துவ முறையில் மருந்து எடுத்து கொள்ளும் போது, சாதாரண/ அசாதாரண சூழ்நிலைகளில் வேறொரு மருத்துவ முறையை கையாள கூடாதா?? அல்லது எடுத்து கொள்ளலாமா??

இந்த செயல்முறை, சித்த மருத்துவம்/ஆயுர்வேதம்/யுனானி மற்றும் ஆங்கில மருத்துவம் என்ற வேறுபாடெல்லாம் இல்லை. எல்லா மருத்துவர்களும், இதே செயல்முறையை, சில மருத்துவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். இது சரியா நடைமுறையா அல்லது தவறா என்று கேள்வி என்னுள் எழுகிறது.

என்னுடைய அனுபவத்தில், பட்ட மேற்படிப்பு முதல் இன்றைய கால கட்டம் வரை, தேவைப்பட்டால், மாற்று மருத்துவத்தை பரிந்துரைக்க செய்கிறேன். அதிலும் குறிப்பாக அசாதாரண சூழ்நிலைகளில், ஆங்கில மருத்துவத்தை பிரயோகம் செய்யுங்கள் என்றே சொல்லி வருகிறேன். இது வரை எந்த பக்க விளைவுகளை கண்டதில்லை. ஆங்கில மருந்துகளின் செயல்படும் தன்மையை புரிந்து கொண்டதால், சிலவற்றை சேர்த்தே அனுமதித்து இருக்கிறேன்.

மருந்துகளின் சேர்ந்து கொடுப்பதால் உள்ள பாதிப்புகள பற்றிய கள ஆய்வுகள் இல்லாத போது, இதனை கையாள்வது கடினமான காரியம் என்பதை, என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆங்கில மருந்துகளை (drug-drug interactions)சேர்த்து உபயோகிப்பதை ஏற்படும் பாதிப்புகளை விட, மூலிகை மருந்துகள் மற்றும் ஆங்கில மருத்துவத்தை(herbal-drug interactions) சேர்த்து உபயோகம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறைவு என்பதை அறிவியல் இதழ் கூறுகின்றன.

மருத்துவ முறைகளின் ஒருகிணைப்பை பேச வேண்டி தருணத்தில், ஒவ்வொரு மருத்துவ முறையினரும், மற்றைய மருத்துவ முறையினரை விரோத போக்கோடு பார்ப்பது எவ்வகையில் சிறந்ததாகும்??
எந்தவொரு மருத்துவ முறையும், எந்தவொரு நோயினை முழுமையாக குண்ப்படுத்த இயலாது என்று நினைக்கிறேன். அந்த நேரத்தில், மருத்துவ முறையின் ஒருக்கிணைப்பு அவசியமாகிறது. நோயிற்காகவே மருந்தே தவிர, மருந்திற்காக நோயாளியோ/நோயோ அல்ல.

நோயின் சூழ்நிலையினை வைத்து முடிவு செய்யாமல், தட்டையான மனநிலையோடு, ஒரு மருத்துவத்தை பின்பற்றி இருக்கும் போது, மாற்று மருத்துவத்தை அணுக கூடாது என்பது  நியாயமா???

நீண்ட நாட்களாக, என் மனதில் உள்ள கேள்வி. என்னுடைய மருத்துவ பயிற்சி அனுபவ காலம் என்பது மிகக் குறைவு. மருத்துவ மாமேதைகளிடமிருந்து பதிலை எதிர்ப்பார்க்கிறேன்….நன்றி

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



Wednesday, January 27, 2016

எதிர்ப்பார்ப்பில் உள்ளது வாழ்க்கை

என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில், எனக்கு யாராவது டைரி கொடுக்க மாட்டார்களா??? என்று ஏங்கியது உண்டு. எனக்கு டைரியை கொடுக்க வேண்டிய அவசியம் மற்றவருக்கு இருந்ததில்லை. எனக்கும் டைரியை எதற்காக பயன்படுத்த வேண்டும் என்ற புரிதலும், இளம் பருவத்தில் இருந்ததும் இல்லை.

கிளினிக் ஆரம்பித்த பிறகு, புத்தாண்டிற்கு பிறகு சில டைரிகள் கிடைப்பது வழக்கம். அதனை முழுமையாக பயன்படுத்தவில்லை என்றாலும், அதனை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்று முயற்சித்து இருக்கிறேன். ஆனால், டைரியை பெற வேண்டும் என்ற ஆர்வம் இப்போது குறைந்துள்ளது.

இது டைரியை பெறுவதில் மட்டுமல்ல. வாழ்க்கையில் எல்லா விஷயங்களும், இத்தகைய நிகழ்வுகள் நடைபெறுவது உண்டு.
ஒன்றை பெறுவதில் உள்ள ஆர்வம், அது கிடைத்த பிறகு ஆர்வம் குறைந்து விடுகிறது அல்லது வேறென்றின் மீது ஆர்வம் அதிகமாகி விடுகிறது.

காதல், திருமணம், அன்பு, பணம் இப்படியாக எல்லா வாழ்க்கை நிந்தைகளிலும், இல்லாத போது உள்ள ஏற்படும் ஆர்வம், அதை பெற்ற பின் குறைந்து விடுகிறது.

அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்ன ஆர்வத்திலும், நமக்கு கிடைக்காத ஒன்றை நோக்கிய பயணமே வாழ்க்கையின் சுவரசியத்தை அதிகமாக்கின்றன!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



குரு- மாணக்கர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்

ஆசிரியர்(குரு) எப்படிப் பட்டவராக இருக்க வேண்டும்?? மாணவன் எப்படிப் பட்டவனாக இருக்க வேண்டும்???

சற்று ஒரு நிமிடம் சிந்தியுங்கள்!!!

தான் தெரிந்த விஷயங்களை, மாணவனுக்கு கற்று கொடுப்பவர் ஆசிரியர் என்று நீங்கள் நினைத்தால், தவறு என்று கருதுகிறேன் . அதைப் போல், மாணவனும், ஆசிரியருக்கு தெரிந்ததை கற்று கொள்பவனல்ல.

சற்று ஆழமாய் சிந்தித்தால், இன்னொரு விஷயம் புலப்படும்.....

ஒவ்வொருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். அதனை மாணவ பருவத்திலே கண்டறிந்து, அதனை முறையாக வெளிக்கொண்ர வேண்டிய கடமை, ஒவ்வொரு குருவிற்கு உண்டு. அதை போல், மாணவனும் தனக்குள் உள்ள திறமையை அறிந்து, அதில் சிறந்தவனாக தேர்ச்சி பெற குருவை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவை இரண்டும், இப்போதும் நடைபெறுவதில்லை.

மகா பாரதத்தில்,தூரோணச்சாரியர் இதை தெளிவாக கையாண்டார். நாடாளுவதற்கு உதிஷ்டனே சிறந்தவன் என்று கண்டறிந்து, அதற்கான குணநலன்களை மேம்படுத்தினார். அர்சுனனும், தன்னுள் உள்ள திறமையை கண்டறிந்து, குரு மூலமாக அதனை மேம்படுத்தினான்.

முடிந்தவரை நல்ல மாணவனை உருவாக்க முயற்சிப்போம்/ நல்ல மாணவனாய் இருக்க முயற்சிப்போம்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



Tuesday, January 12, 2016

வாழ்வியலில் எதிர்ப்பார்ப்புகள்!!!!

ஒரு ஆண்/பெண், மற்றொரு பாலினத்தை காணும் போது, அவர்கள் அறியாமலே மற்றவரின் மீது ஈர்ப்பு வந்து விடுகிறது. (அதற்கு காரணம் என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும்). காதல் மலர்ந்ததும், ” மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும். பேச வேண்டும்என்று மனம் பதப்பதைக்கிறது.

காதல் திருமணம் நடந்து, பல காலம் கடந்து பிறகு, ஈர்ப்பு குறைந்து மற்றொரு பாலினத்தின் வெறுப்பு தன்மையே அதிகமாகிறது. ஆரம்ப காலத்தில் ஈர்ப்பு கொண்ட மனமே, வெறுப்பை நோக்கி பயணிக்கிறது(இது நிச்சயம் செய்யப்பட்ட திருமணத்திலும்).

ஏன் இந்த வேறுபாடு??? அதற்கு விடை மனமே!!!! காதலிக்கும் போது, தன்னை விட்டு காதல்பிரிந்து போய்விடுமோ என்ற பயம், அதீத ஈர்ப்பை உண்டு பண்ணுகிறது. திருமணத்திற்கு பின், தனக்கனாவள்/ன் தான் என்ற பிறகு ஈர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதாக தோணுகிறது.
மற்றொரு காரணம், இளமைக் காலம் எதிர்ப்பார்ப்புகள் நிரம்பியவை. 

காலம் கடந்து செல்ல, செல்ல, எதிர்ப்பார்ப்புகள் குறைந்து, எதர்த்தாத்தை புரிந்து கொள்ளும் காலம் வரும். இதனால் ஈர்ப்பு தன்மை குறையலாம் அல்லது குறைந்தது மாறி கானல் நீராக மாறலாம்.

மோடி/ அரவிந்த் கெஜரிவால் போன்றயை அரசியல்வாதிகள், வருவதற்கு முன்னர், நிறைய எதிர்ப்பார்ப்புகள் இருந்தது. அவர்களது செயல்பாடுகள் , மக்கள் எதிர்ப்பார்த்தை விட குறைந்ததால், அவர்கள் மீது வெறுப்பு வந்தது மாதிரி தோன்றியது. இதே மாதிரி, பெரிய எதிர்ப்பார்ப்புகளில் எடுக்கப்பட்ட படங்கள், பெரும்பாலும் தோல்வியிலே முடிந்தது.

எதிர்ப்பார்ப்புகள் நிறைந்த மனதால், இத்தகைய வேறுபாடுகளும், முரண்பாடுகளும் தோன்றுகிறது. எதிர்ப்பார்ப்புகளை சிறிதளவு குறைந்து பயணித்தால், வாழ்க்கையில் தோல்விகளை குறைக்கலாம். வாழ்க்கை பயணம் சுகமாகும்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



Monday, January 11, 2016

அதிஷ்டம்

அதிஷ்டம் என்ற பதத்தை, பல இடங்களில் உபயோகித்து வருகிறோம். அதன் இலக்கணத்தை புரிந்து கொள்ளவும் இயலவில்லை.

ஒரு செயலில் வெற்றியை பெற வேண்டுமானால், உழைப்போடு அதிஷ்டமும் வேண்டும் என்பது பெரியோர் வாக்கு.

ஒருவனுடைய வெற்றி, அவனை பொறுத்து மட்டும் நிர்ணயம் செய்யப்படுவதில்லை. அது மற்றவர்களும் சேர்ந்தே நிர்ணயம் செய்கின்றன. அதனால் வெற்றியை பெற்றவன், கர்வம் கொள்ள தேவையில்லை.

உன்னை தவிர, மற்றவர்களால் நிர்ணயம் செய்யக்கூடிய வெற்றியை அதிஷ்டம் என்றும், உன்னால் நிர்ணயம் செய்யக்கூடிய வெற்றியை உழைப்பு என்றும் பெயரிட்டும் கொள்ளலாம். அவ்வளவு தான் வித்தியாசம்.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



Saturday, January 9, 2016

மகிழ்ச்சி எதை சார்ந்தது

மகிழ்ச்சி என்பது உள்ளம் சார்ந்தது. ஆனால் மகிழ்ச்சி ஏற்படுத்துவதற்கான காரணங்களை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று அக காரணங்கள். மற்றொன்று புறக் காரணங்கள்.

மக்களின் பெரும்பாலானோர், புறத்திலிருந்து மட்டும், மகிழ்ச்சி கிடைப்பதாக நினைக்கின்றனர். அதாவது பணம் சாம்பாதிப்பது, பகட்டாக வாழ்வது, அதிகாரமாக வாழ்வது போன்றவற்றை சந்தோஷத்தின் எல்லைகளாக நினைத்து கொண்டிருக்கிறோம். அதனால் தான் பணத்தை நோக்கி ஒடி கொண்டிருக்கிறோம்.

மனிதர்களில் சிலர் மட்டுமே, அக காரணத்தை நோக்கி பயண ஒடத்தை செலுத்துகின்றனர். அதாவது ஆன்மிகம், தத்துவியல் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர்கள், அக காரணியால் மகிழ்ச்சி அடைகின்றனர்.

பெரும்பாலான மக்கள், இதில் ஒன்றும் மட்டுமே சந்தோஷத்தின் இடமாக கருதுகின்றனர். இது தவறான அணுகுமுறை ஆகும். இரண்டும் கலந்த மையப்புள்ளியில் பயணிப்பது சால சிறந்தது.

பணத்தை பெற்றவன் அன்பை நோக்கி பயணிப்பதும், அன்பை பெற்றவன் பணத்தை நோக்கி பயணிப்பதும் இதனால் தான் நடக்கிறது. நீங்கள் மாற்றி கொள்ள வேண்டிய இடத்தை, இப்போதே தேர்ந்தெடுங்க நண்பர்களே!!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



Tuesday, January 5, 2016

விமர்சனம் எத்தகையது

விமர்சனங்கள் இருவகையானவை. ஒன்று தனிமனிதன்(நடை, உடை, பாவனை) சார்ந்தது. இன்னொன்று அவனது கருத்தியல் சார்ந்தது.

இவற்றில், நாம் தனிமனித சார்ந்த விமர்சனங்களை அதிகமாக முன்வைக்கிறோம். இது கொஞ்சம் கீழ்த்தரமானது. பெரும்பாலும் உணர்ச்சி பூர்வமாக வெளிப்படும்.எ.கா விஜய்காந்த் தண்ணீர் அடிக்கிற மாதிரி பேசுறார்.

கருத்தியல் சார்ந்த விமர்சனங்கள், மிகவும் ஆரோக்கியமானவை. அதை நமக்கு சாதகமாக, பல நேரங்களில் மறந்து விடுகிறோம்.இவை அறிவு பூர்வமாக வெளிப்படும். எ.கா. பாஜகவின் இந்துத்துவ கொள்கை என்பது கருத்தியல் சார்ந்த விமர்சனம்.

கருத்தியல் சார்ந்த விமர்சனங்கள், நம்முடைய வளர்ச்சிக்கு உதவும். அதை நாம் மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். ஆனால், தனிமனித தாக்குதல் கண்டும் காணாமல் விடுவது நல்லது.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்