Friday, November 2, 2018

ஆடை தேர்வும் பெண்களும்


தீபாவளி நெருங்கி விட்டது. புத்தம் புது ஆடைகள் வாங்குதல், பலகாரங்கள் தயாரிப்பு என அனைவரும் மும்முரமாகி விட்டனர். அதிலும் புத்தம் புது ஆடைகள் வாங்குவதற்கு, ஐவுளி கடைகள் நிரம்பி வழிகின்றன.

பெண்கள் ஆடை தேர்வு செய்வதில், அதிக நேரம் எடுத்து கொள்கின்றனர்என்ற பொது சமூக கருத்தாக்கம் அதிகமாக இருக்கிறது. அது சார்ந்த புரிதல் உண்மையா? என்று ஆராய்வோம்.

பெண்களின் மனநிலை பற்றி ஆராய்வதற்கு முன்னர்..... ஆடைகளின் வியாபாரம் பற்றி ஆராய்வது அவசியம்.

பன்னெடும் காலமாக... பெண்கள் அழகு பதுமைகளாக சமூகம் கருதி வந்தது. ஆதலால், பெண்களின் அழகினை மேம்படுத்துவதற்கு ஆடை, அணிகலன் ஆகியவற்றிற்கு முக்கியம் தரப்படுகிறது. இதனால் பெண்களுக்கான துணி வகைகளும், துணி நிற வகைகளும் இயற்கையே அதிகமாகி இருக்கிறது.

சமூகத்தில்.... இன்றளவும் பொருளாதாரத்தில் பெண்கள் முன்னேறியவர்களாகவும் இருந்தாலும், பொருளாதார சுதந்திரமும் இருந்ததில்லை!!!! ஆண்களை சார்ந்திருப்பவர்களாகவே உள்ளனர்.
ஆதலால், வியாபார நிறுவனங்களும் பெண்களை குறிவைத்து வியாபாரத்தில் அதிக மாடல்களை அறிமுகம் செய்கின்றனர்.

மேற்கண்ட காரணங்களினால்..... ஆண்களை விட, பெண்களை அதிக துணி வகைகளும் உள்ளன. ஆதலால், அதிக துணிகளில் ஒன்றை தேர்ந்தெடுப்பதில், இயற்கையாகவே பிரச்சனைகள் உள்ளது. அடுத்து உளவியல்!!!

காலம் காலமாக...... ஆண்களை ஒப்பிடும் போது , முடிவு செய்யும் இடத்தில்,பெண்கள் குறைவாகவே இருந்தனர். இதனால்...... முடிவு எடுக்கும் அனுபவம் குறைவாகவே இருக்கும். ஆகையால், ஆரம்ப காலங்களில் குழப்பங்கள் இருக்க தான் செய்யும். அது போக போக சரியாகவும் வாய்ப்பு உள்ளது.

மேலும் பெண்களுக்கு ஆடை வாங்கி தரும் உரிமை.... கடந்த காலங்களில் ஆண்களுக்கே இருந்து வந்தது. இதுவும் மற்றொருமொரு பிரச்சனை!!! இதையெல்லாம் தாண்டி, புதிய மனநிலைக்கு வருவதற்கு பரிணாம வளர்ச்சிபடி நோக்கினால், 50- 100 வருடங்களும் ஆகலாம்.

ஆண்கள் துணி எடுப்பதற்கு, குறைவான நேரம் எடுத்து கொள்வதில்லையா??? அவர்களிலும், அதிக நேரம் எடுத்து கொள்பவர்களும் உண்டு. ஆனால், ஒப்பிடும் போது குறைவு!!! அவ்வளவு தான்!!!

பின்குறிப்பு: என் புரிதலில், சித்த மருத்துவ தத்துவ அடிப்படையில் நோக்கில், கப உடலினர் துணிகளை தேர்வு செய்வதில் அதிக நேரம் எடுத்து கொள்கின்றனர்.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Thursday, November 1, 2018

சம கால புரிதலும், தற்காப்பு கலைகளும்


சமீப காலங்களில், சில செயல்களை அதிகமாக காண முடிகிறது. அதில் ஒன்று தான் காரத்தே வகுப்புகள்!!!! ஞாயிற்று கிழமைகளில் காலையிலே காரத்தே வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்கள், காரத்தேவில் பரிசு பெற்றதாக காணப்படும் சுவரெட்டிகள் என பல தருணங்களில், காரத்தே கண்டிருக்கிறேன்.

காரத்தே, நிச்சல், சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளை கற்று கொள்வது அவசியம்!!! அதில் தவறில்லை. ஆனால், அது ஒரு பேஷனாக மாறி வருகிறதோ என்று தோன்றுகிறது.

முன்னரெல்லாம், மியூசிக் கிளாஸ், பரதநாட்டியம் கிளாஸ் போன்று, இன்றைய தற்காப்பு கலை சார்ந்து வகுப்புகள், பேஷனாகவும் வணிகமாகவும் மாறி வருகிறதோ என்று தோன்றுகிறது.

இதையெல்லாம் தாண்டி.... தற்காப்பு பயிற்சிகளை செயல்படுத்துவதற்கு அளவிற்கான மன புரிதல்.... நமக்கு இருக்கிறதா??? என்ற கேள்வி எழுகிறது.

எதாவது பிரச்சனைகள் நடக்கும் போது, அந்த பிரச்சனைகளிலிருந்து ஒதுங்கி செல்லவே, பெற்றோர்கள் அறிவுரை கூறுகிறார் , ” நமக்கு எதுக்கு தேவையில்லாத வேலை, பெரிய இடத்து பொல்லாப்பு எதுக்குஎன்ற அறிவுரைகளே அதிகமாக இருக்கும்.

இன்றைய திரைப்படங்களும், சிறுகதைகளும் .... மனிதர்களுக்கு அநியாயத்தினை எதிர்க்கும் தன்மையை உருவாக்குவதில்லை!!!

சமூகம் சார்ந்த அறசீற்றத்தினை, இன்றைய கல்விமுறையும், வழி காட்டும் நெறிமுறைகளையும் உருவாக்குவதில்லை. அப்படி இருக்கும் போது, மேற்கண்ட தற்காப்பு பயிற்சிகள் ...... போட்டிகளில் பரிசு வெல்வதற்கு மட்டும் பயன்படும்!!!! நிஜ வாழ்க்கையில் அல்ல!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்