Wednesday, January 29, 2020

கல்லூரி படிப்பும் உண்மை நிலையும்

டைம்ஸ் ஆப் இண்டியா நாளிதழில், தமிழ்நாட்டு பிஹெடி தொழிற்சாலைகள் என்ற தலைப்பில் கட்டுரை வந்தது. இது ஒன்றும் புதிதல்ல!!! உயர் கல்வி துறையில் சிறந்த மாநிலம் என தமிழ்நாடு என்று பறைசாற்றி கொண்டிருக்கிறோம்!! ஆனால் தரமான கல்வி தருகிறமோ?? என்று கேள்வி வரும் போது ஏமாற்றமே மிஞ்சுகிறது.

பள்ளி கல்வியை முடித்து, உயர்கல்வி பெறும் மாணக்கர்களின் எண்ணிக்கை 49 % உள்ளது. சுமார் 20-30 மருத்துவ கல்லூரிகளும், 550 பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. இந்த கல்லூரிகள் அனைத்தும், சுமார் 20-30 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்தது.

தமிழகத்தில் தகவல் தொழிற்நுட்ப துறையை போல், அதீத வளர்ச்சி பெற்ற துறைகளில், உயர் கல்வி துறையும் ஒன்று!!!!(தனியார் பள்ளிகளின் வளர்ச்சியும் அப்படி தான்) ஒரு துறை வளர்ச்சி அடையும் போது.. .அத்துறைக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவது அவசியம்!!! அதில் முக்கியமாக பார்க்கும் போது, தனியார் கல்லூரிகளின் பேராசிரியர்கள்!!!

உண்மையை உடைத்து பேசுவோமானால்...... கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணியாற்றி கொண்டிருப்பவர்களில்.... ஆசிரிய பணியை விரும்பி தேர்ந்தெடுத்தவர்கள் வெகு சிலரே!!! (பள்ளிகளில் இதே நிலை உண்டு) . பள்ளிகளில் கூட B.Ed என்ற அடிப்படை தகுதியை வைத்திருக்கார்கள் .ஆனால் கல்லூரிகளில் M.Phil அல்லது P.hD என்பவை தகுதிகளாக வைத்திருக்கிறார்கள்.

ஒரு துறை சார்ந்த கல்வியை கற்பது/சார்ந்த அறிவை பெற்றிருப்பது ஒரு புறம்!!! அதை கற்பித்தல் என்பது மற்றொரு புறம்!!! இக்கருத்தில் பலபேருக்கு மாற்று கருத்து இருக்கலாம். இதில் உள்ள பிரச்சனையை, நான் பலதருணங்களில் அனுபவித்து இருக்கிறேன். இதனால் தான்... எனக்கு ஆசிரியர் தொழில் மீது வெறுப்பு வந்து விட்டது !!!

ஆசிரியர்/பேராசிரியர்களுக்கு வைக்கப்படும் தேர்வுகளும் மானப்பாடம் செய்து ஒப்புவிப்பதை போன்று அமைகின்றன. மாணவர்களுக்கு கற்பிக்கும் திறனை ஆய்வு செய்வதே கிடையாது!! அதையும் போட்டி தேர்வுகளில் சேர்க்க வேண்டும்.

என் புரிதலில்....... ஆசிரியர் என்பவர்..... ஒரு துறை சார்ந்த அறிவை மாணவர்களுக்கு புரியும்படி போதிக்க வேண்டும்!!! துறை சார்ந்த ஆர்வத்தை துண்ட வேண்டும்!!! துறை சார் ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும்!!! ஆனால் நிஜத்தில் நடப்பது நேர் எதிரான நிலை!!! போலி பிம்பங்களுக்கு கைத்தட்டி ஆராதனை செய்து கொண்டிருப்பவர் அதிகம்!!!

பில்டிங் ஸ்ட்ராங்கு... பேஸ்மெட் வீக்என்ற வடிவேல் காமெடி உண்டு. ஒரு கட்டத்தின் அஸ்திவாரம் நன்றாக இல்லையென்றால்... அக்கட்டத்தின் நிலைத்தன்மை கேள்வி குறியே!!! அது போல்... ஒரு துறையின் அடிப்படை அறிவை தரும் கல்வி நிறுவனங்கள் கற்பிக்க தவறும் போது.... துறையின் வீழ்ச்சியை யாராலும் தடுக்க இயலாது. இது சித்த மருத்துவத்திற்கு பொருந்தும்

 

உங்களில் ஒருவன்

உங்களை போல் ஒருவன்

வேதை குமார்


Monday, January 13, 2020

சித்த மருத்துவமும் தமிழ் மருத்துவமும்

” சித்த மருத்துவம் என்றால் சித்தர்களால் உருவாக்கப்பட்ட மருத்துவம் ” என்பது பொது சொல்லாடல்!!! இது உண்மையா?? என்ற கேள்வி அடிக்கடி வந்து மறைகிறது.

இதெல்லாம் ஒரு கேள்வியா?? என்று கூட தோன்றலாம். சித்தர்களை சந்தேக்கிறாயா?? என்று கூட நினைத்து கொள்ளுங்கள்!!! தவறில்லை!!!

சித்தர்கள் அனைவரும், சித்த மருத்துவத்திற்கு பங்களிப்பு செய்யவில்லை. சிலர் யோகம், ஞானம், வாதம் என்ற நிலையில் மட்டும் இருந்தவர்களும் உண்டு!!! அதற்கு அவர்கள் எழுதிய செய்யுளே ஆதாரம்!! அது போல்....... சித்த மருத்துவத்தினை சித்தர் மட்டுமே உருவாக்கினார் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை!!

அப்படியென்றால்...சித்த மருத்துவத்தில் சித்தர் பங்கில்லையா?? என்று நீங்கள் கேட்கலாம். சித்த மருத்துவத்தில் சித்தர்களின் பங்கும் அளப்பரியது என்பது என்னுடைய புரிதல்!!!

சித்த மருத்துவத்தின் வரலாற்றை பேசும் போது...... தமிழின் வரலாற்றை ஒப்பிட்டே பேசி வருகிறோம்!!! ஆனால் சித்தர்களின் கால வரையறையை வைத்து பேசும் போது.... சித்த மருத்துவத்தின் காலம் .....மிகவும் பின்னோக்கி (7 -14 நூற்றாண்டு வரை) செல்கிறது.

இது ஓருபுறம் இருக்க... சங்க கால நூல்களில் எதேனும் சித்த மருத்துவ சொற்கள் / கருத்துகள் இருக்கிறதா?? என்று தேடி பிடித்து கொண்டிருக்கிறோம்?? அதற்கு குறித்து பல ஆய்வு நூல்கள் வெளிவந்து விட்டது.

சரி..... உண்மையிலேயே 7 நூற்றாண்டு முன்பு.... சித்த மருத்துவமே இல்லையா??? என்று கேட்கலாம். அதற்கு முன்பு மருத்துவம் இருந்தது. அது சித்த மருத்துவம் என்று பெயரிடபடாமல் இருந்திருக்கலாம்!! அவ்வளவு தான்!!!

மனிதன் உயிர் வாழ தொடங்கிய காலம் முதல்.... மருத்துவ அறிவும் சேர்ந்தே வளர தொடங்கிற்று!! புரியும் படி சொல்லவேண்டுமானால்..... மூலிகை மருத்துவம், பாட்டி வைத்தியம், நாட்டு வைத்தியம் என்று பல பெயரிட்டு அழைத்து கொள்ளலலாம்!!! (பராம்பரிய மருத்துவ அறிவு)

இத்தகைய பராம்பரிய மருத்துவ அறிவு, அனைத்தும் சமூகங்களிலும் இருக்கவே செய்கின்றன. அவற்றில் சிலவை மட்டுமே... மருத்துவ முறையாக வளர்ந்து மரமாக நிற்கிறது. சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, சீன மருத்துவம் போன்றவை சில எடுத்துக்காட்டுகள்!!!

இது எவ்வாறின்...... பராம்பரிய மருத்துவ அறிவோடு.... மொழி வளமும்...... நாகரிக பலமும் இணையும் போது புதிய மருத்துவ முறையின் உருவாக்கத்தை தவிர்க்க முடியாதாகி விடுகிறது.

தமிழ் மொழி, தமிழர் நாகரிகம், நிலம் சார்ந்த பராம்பரிய மருத்துவ அறிவு, சித்தர்களின் கொடை என அனைத்தும் இணைந்து சித்த மருத்துவமாக உயர்ந்து நிற்கிறது. இதுவே எந்தன் புரிதல்!

Wednesday, January 1, 2020

மீளாய்வு 2019

2019 ஆண்டில் மட்டும்........ சுமார் 12000 கிமீ தூரம் இருசக்கர வாகனத்தில் கடந்திருக்கிறேன். இது மட்டுமல்லாமல் வெளியூர் பயணங்களும் அதிகம்!!! ஆனால் நடைபயிற்சியோ !!! உடலுழைப்போ குறைவு தான்!!! பெரும்பாலான பொழுதுகள்....... உடலுழைப்பு குறைந்து, மன உழைப்பு அதிகமாகியே கடந்தது!!! யோகா செய்து மாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

2019 ஆம் ஆண்டில்..... மற்ற ஆண்டினை போல் சராசரி ஆண்டாகவே கடந்தது. கஜா புயலின் தாக்கத்திலிருந்து மீள்வதற்குள், 2019 பிறந்து விட்டது. கால சக்கரம்.... வேகமாக உருண்டோடி 2019 முடிந்து விட்டது.

வேதாரண்யம் அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவ பிரிவினை, சுமார் 4.25 லட்சம் செலவில் புத்தாக்கம் செய்யப்பட்டது. ஆண்டில் தொடக்கத்தில் நடந்த முக்கியமான நிகழ்வு!!! வேதாரண்யம் மற்றும் கரியாப்பட்டிணம் ஆகிய இரு பிரிவுகளிலும் , நோயாளர் வருகை சற்று அதிகமாகி உள்ளது. தனி பயிற்சி மந்த நிலை ஏற்பட்டு, இமயம் சித்தா கிளினிக்கினை பூட்டு போட்டாச்சு!!! பிரபு மெடிக்கல்ஸில் வாரம் இருமுறை வருகையாக மாறி விட்டது.

இந்த வருடம் வெளியூர் பயணங்கள் அதிகம்!!! மதுரை மெட்டிசா ஹாலில் நடந்த மருத்துவ கண்காட்சிக்கும், சங்க வருடாந்திர கூட்டத்திற்கு நண்பர்களோடு சென்று வந்தேன்!!! இம்பகாம்ஸ் கூட்டத்திற்கு நான்கு சக்கர வாகனத்தில் சென்று, சூட்கோஸோடு திரும்பினோம்!!! அம்மா மகப்பேறு திட்ட பயிற்சி, வர்ம பயிற்சி, நோயாளர் பதிவை இணையத்தில் பதிவிடுதல் பயிற்சி என அலுவல் ரீதியாகவும் சென்னை பயணம் அமைந்தது.

சாய்ராம் கல்லூரியில் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பிற்கு சென்று.... வளர்ச்சியை கண்டு வியந்தும்..... நண்பர்களை கண்டும் உளம் களிந்து வந்தேன். அம்பேத்கார் நந்தராஜா திருமணத்திற்காக கள்ளக்குறிச்சி கூட சென்று வந்தேன்.

புதிதாக கம்யூட்டர் மற்றும் பிரிண்டர் மட்டும் வாங்கினேன். செல்போன் டிஸ்பிலே ரிப்பேரான போதும்... .சரிசெய்து இந்த வருடத்தினை ஒட்டி விட்டேன். புத்தகங்கள் வாங்குவது கூட குறைந்து விட்டது( வாங்கிய புத்தகத்தை முதல்ல படி... பிறகு வாங்கிகலாம் என்று மனசாட்சி உறுத்தியதால்).

புத்தகம் வாசிப்பு முழுவதும் குறைந்து விட்டது. மீண்டும் அதிகப்படுத்த வேண்டும். அதே சமயத்தில்.... போட்டி தேர்வுகளுக்கு நடத்துவதற்காக... இன்னும் ஆழமாய் படிக்க ஆரம்பித்து விட்டேன்.

போட்டி தேர்வுகளுக்கு வகுப்புகள் எடுப்பது தொடர்கிறது. அதோடு மாதிரி நேர்முக தேர்வும் நடத்தினோம்!!!!!!! போட்டி தேர்வுகளுக்கு பாடம் எடுப்பதிலிருந்து விடுதலை அளிக்கலாம் என்றால் காலம் விடவில்லை!! சில மாதங்களில் இறுதி விழா நடத்தி விட வேண்டும்!!! பார்ப்போம்!!

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்விற்காக... சுமார் 30 க்கு மேற்பட்ட இடங்களில் நிலவேம்பு வழங்கும் பணியும் நடைபெற்றது. வேதாரண்யம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தகட்டூர் அரசு மேனிலை பள்ளி ஆகிய இரண்டிலும், நாட்டு நலப்பணி திட்ட முகாம் சிறப்புரை ஆற்றினேன். தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக, தோப்புத்துறை அரசு மேல்நிலை பள்ளியிலும் சிறப்புரை யாற்றினேன். சீதாலெட்சுமி உதவி உயர்நிலை பள்ளியில், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரூரைக்கு வாய்ப்பு கிட்டியது.

முகநூலில் எழுதுவது குறைந்து விடுகிறது. நேரமின்மையும் முழுமையற்ற எழுத்து சிறப்பாக இருக்காதே என்ற எண்ணம் தான்!!! வேறொன்றுமில்லை!!!

வருடத்தின் பல வார இறுதிகள்... விடுமுறை களற்றே கடந்தது. அதை குறித்த கவலையில்லை!!! இன்னும் சாதிக்க வேண்டியதும் கற்ற வேண்டியதும் அதிகம் என்பதை மட்டும்... ஒவ்வொரு ஆண்டும் சொல்லி கொண்டே இருக்கிறது.

 

உங்களில் ஒருவன்

உங்களை போல் ஒருவன்

வேதை குமார்