Thursday, December 31, 2015

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்



2015 ஆம் ஆண்டு இன்றோடு முடிவடைந்து, நாளைய தினம் புதிய வருடமாய் புத்துயிர் பெற இருக்கிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களில், எனக்கு பெரிய உடன்பாடு கிடையாது. இருந்தாலும், நண்பர்களுக்கு ஆங்கில் புத்தாண்டு வாழ்த்துகள்!!! 2016 ஆம் ஆண்டு, எல்லா சிறப்பையும் பெற வாழ்த்துகள்.
2015 ஆம் ஆண்டில் அதிகமாக பிரயோகம் செய்யப்பட்ட வார்த்தை ‘சகப்பின்மை’ என்றால் மிகையாது. அது உண்மையா ?? என்பதெல்லாம் தாண்டி, காங்கிரஸ் கையிலெடுத்த வார்த்தையை, எழுத்தாளர், கலைத்துறை சார்ந்தவர்கள் என்று பெரிய பட்டாளமே கையில் எடுத்து, தன்னையும் முன்னிறுத்தி கொண்டனர்.
இப்படியாக அரசியல் நிலவரம், ஆண்டு முழுவதும் வியாபித்திருக்க, இயற்கைக்கு, இந்த பதத்தின் மீது சகப்பின்மை இல்லாமல் போய் விட்டது போலும். வருட இறுதியில் சென்னையில் வெள்ளத்தை ஏற்படுத்தி, சகப்பின்மை என்கிற வாதத்தை, தவிடு பொடியாக மாற்றி விட்டது.
வளர்ச்சி என்ற கானல் நீருக்கு, மனிதன் கொடுக்கும் இழப்புகள் ஏராளம். அதனை புரிந்து கொள்ளமாலே, மீண்டும் மீண்டும் நாம் இயற்கையை சிதைந்து கொண்டிருக்கிறோம். ஆனால், ஒரு குறிப்பிட்ட நிலை வரை தான் இயற்கை பொறுத்து கொள்ளும். அதன் பிறகு, தன்னுடைய சுய ரூபத்தை காண்டி, தன்னை தானே சீர்படுத்தி கொள்ளும்.
அப்படி சமீபத்தில் நடந்த இரு நிகழ்வுகள் 1. 2013 ஆம் ஆண்டில் நடந்த உத்ரகாண்ட் வெள்ளம். 2. 2015 ஆம் ஆண்டில் நடந்த சென்னை பெருவெள்ளம். இன்னும் நாம் இயற்கையை புரிந்து கொள்ளாமல் இருப்போமானால், மீண்டும் நிறைய இழப்புகளை சந்திக்க நேரிடலாம்.
கடந்த கால நிகழ்வுகளிலிருந்து, நாம் பாடம் கற்று கொண்டு, செயல்பட துவங்கினால், வருகின்ற 2016 ஆம் ஆண்டில், ஜனவரி 1 மட்டுமல்ல. ஒவ்வொரு தினமும் புது வருடம் தான்…..
.
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

பயணங்களும் வாழ்க்கை பயணங்களும்

மாம்பலம் இரயில் நிலையம்..

தாம்பரம் செல்லக் கூடிய மின்சார ரயில் ப்ளாட்பாரத்தை வந்தடைந்தது. காலியான இருக்கைகளில் அமர, படிக்கட்டுகளில் கவனம் செலுத்தி பயணிகள் ஏற முயற்சி செய்தனர். ஆனால் படிக்கட்டுகளில் அருகிலேயே, ஒருவர் கால்நீட்டி உறங்கி கொண்டிருக்கிறார். தூக்க மாத்திரை கொடுத்தால் கூட, நாம்மால் அப்படி தூங்க இயலாது என்று நினைக்கிறேன். அவரின் உடலினை தாண்டி, எதோ ஒட்ட பந்தயத்தில் உலக சாதனை புரிந்த்து போல், இருக்கைகள் நிரப்பப்படுகின்றன. இவையெல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விடுகின்றன.

இவனுக்கு அறிவு இருக்கா??? முட்ட பயலா…. பீப்….பீப்பீப் …” என்றெல்லாம் மனத்திற்குள் தீட்டி கொண்டே, அவரவர் இருக்கையை ஆக்கிரமிப்பு செய்திருக்க வேண்டும். எனக்கும் முதலில் கோபம் வந்தது உண்மை என்றாலும், பிறகு  அந்த நபரினை செய்கை எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. இந்த மாதிரியான ஆச்சரியமான பல விஷயங்களை , வாழ்க்கையில் பயணங்கள் வழியே பெற்று கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் ரூசி பார்ப்பது தான் கிடையாது.

பழங்கால நடைப்பயணம் முதல் இன்றைய செவ்வாய் கிரகம் பயணம், ஏதேனும் ஒர் வகையான உள களிப்பை தாண்டி, அனுபவத்தையும், அறிவினையும், பண்பினையும் தந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அவற்றில் சில மட்டுமே, நங்கூரமாய் மனதில் பதிகிறது. மற்றவையெல்லாம் காலை நேர பனி போல் நொடி பொழுதில் மறைகிறது.

பேருந்திகளிலும் புகை வண்டியிலும் காதில் கெண்ட் செட்டை மாட்டி, பாடல் கேட்டு ரசிப்பவர்களும், செல்போனை உலகமாக கருதுபவர்களும்  தான், இன்றைய உலகில் அதிகம். அதை தாண்டி, புற உலகில் வாழ்க்கையை தேடுபவர்கள் வெகு சிலரே.

பொருளாதாரம் சார்ந்து வாழும் சமூக நிலையில், பயணங்களை பொருளீட்டுதல் அடிப்படையில் களம் கண்பது இயற்கையே. ஆனால், அதை தாண்டி, வாழ்வியலை செம்மைப்படுத்துவதற்கான பாடமாக எடுத்து கொள்பவர்கள் சிலரே. அந்த படிப்பினை சதுரகிரி மலைப்பயணம், எனக்கு தந்தது என்றால் மிகையல்ல. (http://adakonjamnillupa.blogspot.in/2014/11/blog-post_65.html )

வாழ்வியல் தத்துவங்களை புரிந்து கொள்வதற்கு புத்தகங்கள் மட்டுமல்லாது, வெளி உலக தேடுதலும் முக்கியம். அதில் பயணமும் ஒன்று. “ நடிப்பு என்பது காசு கொடுத்து கற்று கொள்வதல்ல…. வெளியே நிறைய கொட்டி கிடக்கு… நாம தான் தேவையான அளவு எடுத்துகணும் “ என்று நடிகர் சந்தானம் ,ஜெய்யிடம் சொல்வார். அதை போல், பயணங்களிலிருந்து பெற்று கொள்ள கூடிய வாழ்வியல் புரிதல் தனி மனிதனை பொறுத்தது.


பயணங்கள் ஆத்மார்த்தமானவை: அலுவலகங்களிலும், இல்லங்களிலும் மனதை திறந்து யோசிப்பதற்கு நேரம் இருப்பதில்லை. பயணங்களிலாவது, சிறிது நேரம் மனதினை திறந்து வையுங்களேன்!!!!  

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார் 

Friday, December 25, 2015

கிரிக்கெட்டும் போலி பெண்ணடிமைவாதியும்

கிரிக்கெட்டில் இந்தியா வென்றால், கேட்பன் தோனியையோ அல்லது கங்குலியையோ புகழ்ந்து தள்ளுவோம்... அதற்கு பின்னால் உழைத்த பேட்ஸ்மேனையோ அல்லது பவுலரையோ நினைத்து பார்க்க மறந்து விடுவோம். அதை போல்...

தோற்றால், தோனி அல்லது கங்குலியை மட்டுமே விமர்சிப்போம். அதற்கு பின்னால் இருந்தவர்களை, நமக்கு வசதியாக மறந்து விடுவோம்.....
இதே மனநிலை, எல்லா நிலைகளிலும், எல்லா காலங்களிலும் நீக்கமற நிறைந்தே இருக்கிறது. அதற்கு சமீப கால உதாரணம் சிம்புவின் பீப் பாடல்!!!! நிர்பயா பாலியல் தொல்லையும்!!!

வேத காலம் தொடங்கி, இன்று வரை பெண்களின் மீதான வன்முறைகளின் வடிவங்கள் மாறுகிறதே தவிர தன்மைகள் மாறவில்லை.

ஒர் தமிழ் பதத்திற்காக, சிம்புவை மட்டும் குற்றவாளி கூண்டில் நிறுத்துவது, நான் பெண்ணடிமைத்தனத்திற்கு ஏதிரானவன் என்ற போலித்தனத்தை தவிர வேறு எதுவும் இல்லை!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்