Thursday, December 31, 2015

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்



2015 ஆம் ஆண்டு இன்றோடு முடிவடைந்து, நாளைய தினம் புதிய வருடமாய் புத்துயிர் பெற இருக்கிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களில், எனக்கு பெரிய உடன்பாடு கிடையாது. இருந்தாலும், நண்பர்களுக்கு ஆங்கில் புத்தாண்டு வாழ்த்துகள்!!! 2016 ஆம் ஆண்டு, எல்லா சிறப்பையும் பெற வாழ்த்துகள்.
2015 ஆம் ஆண்டில் அதிகமாக பிரயோகம் செய்யப்பட்ட வார்த்தை ‘சகப்பின்மை’ என்றால் மிகையாது. அது உண்மையா ?? என்பதெல்லாம் தாண்டி, காங்கிரஸ் கையிலெடுத்த வார்த்தையை, எழுத்தாளர், கலைத்துறை சார்ந்தவர்கள் என்று பெரிய பட்டாளமே கையில் எடுத்து, தன்னையும் முன்னிறுத்தி கொண்டனர்.
இப்படியாக அரசியல் நிலவரம், ஆண்டு முழுவதும் வியாபித்திருக்க, இயற்கைக்கு, இந்த பதத்தின் மீது சகப்பின்மை இல்லாமல் போய் விட்டது போலும். வருட இறுதியில் சென்னையில் வெள்ளத்தை ஏற்படுத்தி, சகப்பின்மை என்கிற வாதத்தை, தவிடு பொடியாக மாற்றி விட்டது.
வளர்ச்சி என்ற கானல் நீருக்கு, மனிதன் கொடுக்கும் இழப்புகள் ஏராளம். அதனை புரிந்து கொள்ளமாலே, மீண்டும் மீண்டும் நாம் இயற்கையை சிதைந்து கொண்டிருக்கிறோம். ஆனால், ஒரு குறிப்பிட்ட நிலை வரை தான் இயற்கை பொறுத்து கொள்ளும். அதன் பிறகு, தன்னுடைய சுய ரூபத்தை காண்டி, தன்னை தானே சீர்படுத்தி கொள்ளும்.
அப்படி சமீபத்தில் நடந்த இரு நிகழ்வுகள் 1. 2013 ஆம் ஆண்டில் நடந்த உத்ரகாண்ட் வெள்ளம். 2. 2015 ஆம் ஆண்டில் நடந்த சென்னை பெருவெள்ளம். இன்னும் நாம் இயற்கையை புரிந்து கொள்ளாமல் இருப்போமானால், மீண்டும் நிறைய இழப்புகளை சந்திக்க நேரிடலாம்.
கடந்த கால நிகழ்வுகளிலிருந்து, நாம் பாடம் கற்று கொண்டு, செயல்பட துவங்கினால், வருகின்ற 2016 ஆம் ஆண்டில், ஜனவரி 1 மட்டுமல்ல. ஒவ்வொரு தினமும் புது வருடம் தான்…..
.
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment