Wednesday, April 25, 2018

பொருளாதார வளர்ச்சியும், உளவியல் வீழ்ச்சியும்


எந்தளவிற்கு மனித சமூகம், பொருளாதார ரீதியாக முன்னேறி கொண்டிருக்கிறது என்று நினைத்து கொண்டிருக்கிறமோ...... அதே அளவில் உளவியல் ரீதியாக வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது!!!!

போட்டி, பகைமை, வஞ்சகம் போன்றவை எல்லா காலங்களிலும் நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால், வடிவங்கள் மாறுகின்றதே தவிர, குணங்கள் மாறவில்லை என்றே தோன்றுகிறது.

சமூகவியல் நெருக்கடிகள், மனிதனை இந்த நிலைக்கு ஆட்படுத்துகின்றது என்பது உண்மை. அந்த உண்மையை வைத்து, நம்மை நாமே ஏமாற்றி கொண்டிருப்பதும் எவ்வளவு நாட்களுக்கு!!!!

சமீப காலமாக நடக்கும், தனிமனித தாக்குதல்கள், அதனை மெய்பிக்கும் விதமாகவே உள்ளது. அதற்கான எதிர் வினைகளும், தாக்குதல்களை விட பயங்காரமாக உள்ளது.

தமிழ் பண்பாடு உயர்ந்தது “ , “ திராவிட பராம்பரியம் பகுத்தறிவு சார்ந்ததுபோன்ற வீர முழுக்கங்களை கேட்டு, காது செவிடது தான் மிச்சம் போலும்!!!!

சுயமரியாதை கற்று கொடுத்த பெரியாளர் வழி வந்தவர்கள் கூட, செயலளவில் பெரியார் கருத்திற்கு எதிராக செயல்படுவர்களாக தெரிகின்றனர். உதட்டளவில், பெரியார் கருத்துகளை ஏற்று கொள்வதோடு முடிந்து விடுகிறதோ!!! என்னவோ!!!!

பல தருணங்களில் புறக்கணிப்பு என்பது மிகச் சிறந்த ஆயுதம் தான்!!! ஆனால், அதை IPL மேட்ச்சை மாற்றுவதோடு மட்டும், நம்முடைய பகுத்தறிவை நிறுத்தி விட்டோமே!!!! எத்தனையே தருணங்களை புறக்கணிப்பு செய்ந்திருந்தால், பல பிரச்சனைகளின் தீர்வுக்கு முயன்றிருக்கலமே!!!

எல்லை தகராறுக்காக தாத்தாவை பழித்த சமூகம், சாதிய கெளரவ கொலைக்களுக்காக தந்தையை பழித்த சமூகம், சம காலத்தில், அதை விட கேவலமான செயல்களை செய்து கொண்டிருக்கிறதே!!! இதற்கு யாரை கையை காட்டி,
நீங்கள் தப்பித்து கொள்ள போகிறீர்கள்!?!?!?1?

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Monday, April 23, 2018

புத்தகத்தின் தேவையும், வீழ்ச்சியும்


மனிதன் அறிவை பெற கூடிய வழிகள் ஏராளம். அதில் ஒன்று புத்தகம்!!! பேப்பர் கண்டுபிடிப்பிற்கு பின்பு, புத்தகம் மெல்ல மெல்ல வளர்ந்து, இன்று இமயமலை ஒத்ததாக வளர்ந்து நிற்கிறது. பேப்பருக்காக மரங்கள் வெட்டுவதல் அதிகமாகும் போது சுற்றுபுற சூழல் பாதிக்கப்படுவது அதிகமாகிறது. ஆதலால், புத்தகங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து, மின்னூல் வடிவில் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்!!!!

புத்தக தோற்றத்திற்கு முன்னரும், மனிதன் அறிவை பெற்றுக் கொண்டு தான் இருந்தான். அது போல், எதிர்காலத்திலும் வேறொரு ஊடகம் வழியாக அறிவை பெறத்தான் போகிறான். இவ்வாறு எல்லா கால கட்டத்திலும், மனித சமூகம் அறிவை பெற்று கொண்டு தான் இருக்கும்.. அவ்வாறு இடைக்காலத்தில், அந்த இடத்தினை புத்தகங்கள் நிரப்பின என்பதில் ஐயமில்லை!!!

கண்டல், கேட்டல் மூலம் மனித அறிவை பெற முடியும்!!! இருந்த போதிலும், அவற்றின் உண்மை தன்மை குறித்த கேள்வி எழுப்பப்படும். ஆனால், புத்தகத்தை ஒரு துறையின் வல்லுநரே எழுதுவதால், அக்கருத்தின் நம்பக தன்மை அதிகம் எனபது மட்டும் உண்மை. அத்தகைய நம்பிக்கை தன்மையிலும், இன்றைய சூழ்நிலையில், விரிசல் விழுந்திருக்கிறது என்பது உண்மை.

இன்றைய சூழ்நிலையில், 100 புத்தகங்கள் வெளிவருகிறது என்றால், சுமார் 30 புத்தகங்கள் கூட தரமாக இல்லை!!! அப்படியே இருந்தாலும், அந்த புத்தகத்தின் கருத்தும், முழுமையாக ஏற்று கொள்ள கூடியதாக இல்லை என்பது ஒருபுறம்!!! புத்தகத்தை முழுமையாக படிக்காமல், நுனி புல் மேய்வதை கடக்கும் வாசகன் மறுபுறம்!!!!

இவ்வறாக…… புத்தகத்தை தேவையும் மதிப்பும் வெகுவாக குறைந்துள்ளது. வருங்காலங்களில் இன்னும் வீழ்ச்சி அடையுமே தவிர, உயர வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.

ஆனால், பொது சமூகத்தில், ” புத்தக படிப்பவன் புத்திசாலிஎன்ற பார்வை இருக்கிறது. இக்கருத்தினை முழுமையாக மறுக்கிறேன். புத்தக வாசிப்பு என்பது, ஒரு வகையில் அறிவை பெறக்கூடிய தவிர, முழுமையான அறிவை புத்தக வாசிப்பின் மூலம் பெற முடியாது. கண்டல், உற்று நோக்கல், ஒப்பிடுதல் போன்று பல்வகை திறன்கள் மூலம் அறிவை பெறலாம்.

உண்மையிலே…… புத்தக படித்தவன் எல்லாம் புத்திசாலி என்றால், கல்லூரி மற்றும் பள்ளி பாடங்களை படித்தவர்கள் எல்லாம், ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று யோசித்து பாருங்கள்.

என்னை பொறுத்த வரை, “ படிக்காத அறிவாளிகளை விட, படித்த முட்டாளே அதிகம்என்பேன்.

அப்புறம் முக்கியமான விஷயம்….. உலக புத்தக தினம் வாழ்த்துங்கள்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Tuesday, April 17, 2018

சமூக பிரச்சனைகளும், சமூக புரிதல்களும்


ஆடியோ டேப் விவகாரத்தில்.......... இந்த பாலியல் வற்புறுத்தல் என்பது சமூகத்திற்கு புதியதா? என்றால் , “ இல்லைஎன்பார்கள் விவரம் அறிந்தவர்கள்!!!! நடிகைகள் வாய்ப்பிற்காக..... படுக்கைக்கு அழைக்கும் விவகாரத்திற்கு, மேற்கண்ட விவகாரத்திற்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றுமில்லை.

இரண்டுமே, சமூகத்திற்கு முன் தன்னை பெரிய ஆளாக நிலைநிறுத்தி கொள்வதற்காக, சமூகத்தின் பார்வைக்கு அப்பால் நடைபெறும் பாலியல் அவலங்கள்!!!

இன்றைய தொழிற்நுட்ப வளர்ச்சியினால், சிலவைகள் மட்டும் பொது சமூகத்தின் பார்வைக்கு வரும்!!! இரண்டு நாட்களுக்கு பொது சமூகம் அற சீற்றம் கொள்ளும்!!! ஒளி, அச்சு ஊடகங்களுக்கு தீனியாக எடுத்து கொள்ளும்!!! இரண்டு நாட்கள் கழித்து, அடுத்த பிரச்சனைக்கு தாவி, பொது சமூகம் தன்னை தானே திருப்தி பட்டு கொள்ளும்!!!

இது மாதிரியான உண்மைகளை வெளியே சொன்னாலும், அந்த பெண்ணின் மீதான அவல பார்வை மட்டுமே மிஞ்சும்!!! பாலியல் சீண்டல் செய்த ஆணை, ஆண்மையின் அடையாளமாகவே பறை சாற்றும்!!! அப்படியே வெளிவந்தாலும், எத்தனை ஆண்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பதை சேர்த்தே பார்க்க வேண்டும்.

இவ்வகையாக சமூக எண்ணத்தினாலும், சமூக அச்சத்தினாலும், பெண்கள் தனக்குள்ளே புழுங்கி வெளி சொல்லாமலே, கடந்து விடுகின்றனர்!!!

இத்தகைய பாலியல் சீண்டல்கள் என்பது இந்தியா போன்ற மத்திய தர நாடுகளை தாண்டி, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற முதன்மை நாடுகளிலும் அதிகம் தான்!!!!

இந்தியாவில் பாலியல் குறித்த புரிதல்களும், அறிவும் மிக குறைவே!!! அதே சமயத்தில், பாலியல் வறட்சியும் மிக அதிகம்!!!! இந்த இடைவெளிகள் வன்மமாகவே நிரப்பப்படுகின்றன.

சமூகத்தில் தன்னை நியாயமாக முன்னிறுத்தி கொள்ளவும் வாய்ப்புகள் குறைவாகி கொண்டே வருகின்றன!!!!

சமூகத்தின் பலவீனம், அதிகார வர்க்கத்தின் பலமாக மாறி விடுவது இயற்கையே!!! பெண்ணின் சமூக அச்சம், ஆணின் சுதந்திரமாக மாறி விடுகிறது!!!! இதன் ஒரு எச்சமே, பாலியல் சீண்டலுக்கு ஆளாகி, கொலை செய்யப்படும் சிறுமிகள்!!!!

ஆனால் ஒன்று....... இவ்வாறாக பாலியல் சார்ந்த பிரச்சனைகளை வெளி கொணர்வதன் மூலம், பல சமூக பிரச்சனைகளை அணைத்து விடுவதில் உள்ள அரசியல், எந்த புத்தகத்திலும் சொல்லப்படாத பாடம்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

கருத்துகளை விமர்சனங்களோடு ஏற்று கொள்ளுங்கள்


அம்பேத்கர், காந்தி, பெரியார் போன்ற முக்கிய தலைவர்களின் கருத்துகளையும் , விமர்சனங்களோடு ஏற்று கொள்வது எனது புரிதல்!!!!

அவர்களை முழுமுதற் தலைவனாய், எந்த நேரத்திலும் என்னால் ஏற்று கொள்ள முடியாது; அப்படியே ஏற்று கொண்டு விட்டால், என்னுடைய சுயத்தை அடமானம் வைத்து விட்டதாகவே எடுத்து கொள்ள முடியும்!!!!

அவர்கள் பல்வேறு வகையான கருத்தியல்களை முன் வைத்து சமூகத்தை சீர்திருத்தியவர்கள்!!! அந்த கருத்துகள், அந்த கால கட்டத்திற்கானவை!!! பல நூற்றாண்டுகளுக்கு பொருந்த கூடியவை யல்ல!!! திருக்குறளும் இதே வகையில் அடங்கும்!!!

எப்போதும் சமூகத்தின் கருத்துகளையும், விழுமியங்களையும் சூழ்நிலையே முடிவு செய்ய வேண்டுமே தவிர, 100 வருடங்களுக்கு முன் வைத்த கருத்தாக்கங்கள் கிடையாது!!!! பல இடங்களில் கருத்துகள் ஒத்து போக வாய்ப்புகள் உண்டே தவிர, 100 சதவீதம் அல்ல!!!

ஆனால்.... பெரியார் சொன்னது போல், “ நான் சொல்கிற கருத்தாக இருந்தாலும் சரி, அதை பகுத்தறிவோடு ஏற்று கொள்என்பதை மட்டும் 100 சதவீதம் ஒத்து கொள்கிறேன்.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Thursday, April 12, 2018

சித்தம்- இலவச மின்னூல்


சித்த மருத்துவ நண்பர்களுக்கு வணக்கம்!!!

மருத்துவ தேர்வு வாரியத்தின் மூலம், சித்த மருத்துவ அலுவலருக்கான தேர்வு, 2017 ஆம் ஆண்டு நடந்தது. இத்தேர்விற்காக, இலவச வினா-விடை தொகுப்பினை தயாரித்து வெளியிட்டு இருந்தேன். இதில் உள்ள சில பிழைகளை நீக்கி, முழு மின்னூலாக மாற்றி இருக்கிறேன். இனிவரும் காலங்களில் வருகின்ற AMO, PG NEET போன்ற தேர்வுகளுக்கு, பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

தேர்வு என்றவுடன் சற்று படப்படப்பு தோன்றி விடுகிறது!!! அதிலும் போட்டி தேர்வுகள் என்றால் சொல்லவே தேவையில்லை!!! ” வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்க போகிறதுஎனும் போது, இதயத்துடிப்புகள் அதிகமாவதை தவிர்க்க இயலாது. இருந்த போதிலும்…. இத்தடைகளை யெல்லாம் உடைத்தெறிந்து வெற்றியை பெற வேண்டும்!!! காலத்தின் கட்டாயம்!!!!

தேர்வை அணுவது எப்படி??? போட்டி தேர்வுகளுக்கு படிப்பது எப்படி???? படிக்கும் போது செய்ய வேண்டியது என்ன??? வினாத்தாளை அணுகுவது எப்படி???? பயிற்சி மையங்கள் அவசியமா/இல்லையா??? என்பது போன்ற பல வினாக்களுக்கு விடைகளை காண முயல்கிறேன்!!!

சித்த மருத்துவ தேர்வுகள் குறித்த பயமும், அது சார்ந்த மிகை பிரதிபலிப்புகளை உடைக்கவும், வணிகம் சார்ந்த அரசியலை தடுக்கவும், இப்படைப்புகள் காலத்தின் கட்டாயம் என்று எண்ணுகிறேன்!!! எனது நோக்கம் முழுமையடையுமா?? என்று தெரியாது. ஆனால் தொடக்க புள்ளியாக அமைவது நிச்சயம்!!!

இந்த மின்னூலை...... https://drive.google.com/…/fol…/0B5w2UPmrNSHRUXZlZmV1QkxPWXM
என்ற Google Drive இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலலாம். மேலும் MRB AMO SIDDHA 2017 என்ற முகநூல் குரூப்பிலிருந்து தரவிறக்கி கொள்ளலாம்.

சித்த மருத்துவத்தின் வளர்ச்சி பாதையில், என்னால் முடிந்த சிறிய பங்காளிப்பாகவே, இதை நினைக்கிறேன். வாழ்க சித்த மருத்துவ மருத்துவம்!!! வளர்க!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Monday, April 9, 2018

இனவாதமும் அரசியலும்


சில புரிதல்கள்..... எனக்கு குழப்பத்தையே எற்படுத்துவதாக அமைகிறது. தமிழன் என்ற உணர்வு எனக்குள் உண்டு. ஆனால், அது தற்பெருமையாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என்று எண்ணுகிறேன்.

மதம், இனம், மொழி, பாலினம், பொருளாதார நிலை என பல்வேறு குறியீட்டு நிலைகள், மனிதனை பிரித்து விடுகிறது. இன்றைய நிலையில், இவையெல்லாம் தேவையா??? பெரும்பாலான சீர்த்திருத்த வாதிகளின் நிலை!!!! ஆனாலும், சிலர் இன்னும் மொழி, இனம் சார்ந்தும் தற்பெருமைகளை பிடித்து தொங்குவதாக உணர்கிறேன்.

அரசு தேர்வுகளில், மற்ற மாநில தேர்வர்கள் தடுக்க வேண்டும் என்பதில் நியாயம் உள்ளது. நம்முடைய இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு இல்லாமல் போகும் போது, பல்வேறு சமூக பிரச்சனைகள் வரவே செய்யும். அதற்காக, தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் அனைவரும் தமிழர்கள் மட்டும் இருக்க வேண்டும் என்பது எங்ஙனம் ???

உலக மயமாக்கலுக்கு பிறகு, பல செயல்கள் எற்று கொண்டது தான் ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்!!! இதனால் தான், அமெரிக்காவில் ஹச்பி 1 விசாவிற்கான கட்டுபாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனிலிருந்து, இங்கிலாந்து வெளிவருதற்கு இது தான்!!! உலகமயமாக்கலின் விளைவினால் உண்டான வேலைவாய்ப்பின்மை நிலை!!!

இவ்வாறான....... வேலைவாய்ப்பின்மை நிலை உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறது. இதே புரிதலினை, அமெரிக்கா முன்னரே நினைத்திருந்தால், தென் இந்தியர்க்கான வேலைவாய்ப்பு குறைந்திருக்கும்!!! மத்திய கிழக்கு ஆசிய நாடுகளினை வேலை தேடி படையெடுத்திருக்க முடியாது!!! அஸ்ஸாம், பீகார் இருந்து குறைந்த கூலிக்கு வேலை ஆள் கிடைத்திருக்காது!!! இப்படியே அடுக்கி கொண்டே போகலாம்!!! உங்களை போல், உலகமும் என்ன தொடங்கியதன் விளைவு தான்!!! இன்றைய வலது சாரி சிந்தனையின் மெல்லிய எழுச்சி!!!

பொது நீரோட்டத்தில், இனத்தின் வரலாறு அழிக்கப்படும் போது எதிர்ப்பதில் தவறில்லை!!! தன்னுடைய உரிமை நிலைநாட்டப்படாத போது, எதிர் குரல் இடுவதில் தவறில்லை!!!! அரசியல் சுய லாபத்திற்காக, இன வாதம் பேசுவது அபத்தமாகவே தெரிகிறது;

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

செல்போனும், எனது அனுபவங்களும்


முதுநிலை சித்த மருத்துவம் படித்து கொண்டிருந்த தருணம் அது!!!! ஆன்லைனில் மைக்ரோமெக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் ஒன்றினை வாங்கி இருந்தேன். சிம் போட்டு பார்த்தால், வேலை செய்யவில்லை!!! கஷ்டப்பட்டு, தேடி கண்டுபிடித்து சர்வீஸ் செண்டருக்கு போனால், “ புது போனு தானே சார், பிரிக்க வேண்டாம், ரிபிஸ்மெண்ட் பண்ணிடுங்க சார் !!! என்றார்செல்போனை பேக் பண்ணி, கம்பெனிக்கு அனுப்பி, புது போன் கேட்ட, “ அந்த மைக்ரோமேக்ஸ் மொபைல் முடிஞ்சுட்டு சார், வேறு எதாவது வாங்கிங்கங்க சார்!!!” என்றார் மெல்லிய குரலோடு, இளம்பெண் ஒருவர். சரின்னு ஸ்பைஸ் போன் வாங்கி பயன்படுத்தி கொண்டு இருந்தேன்.

இரண்டு ஆண்டுகளாக, ஸ்பைஸ் போனை பயன்படுத்தி கொண்டிருந்த போது, திடீரென ஒரு நாள், ட்ச் போடு வேலை செய்யவில்லை. சர்வீஸ் செண்டருக்கு எடுத்துகிட்டு போனேன். “ இந்த மாடல் க்கு ட்ச் பேடு கிடைக்காது சார்!! புது போன் வாங்குங்க சார்!!!!!” என்றார் ஒருவாறு முறைத்தவாறு!!! இதெல்லாம் ஒரு போனு…. தூக்கிட்டு வந்துடங்க சரி பண்றதுக்கு ……. என்று அவரது மனவோட்டமாக இருந்திருக்கும்.

சரி!!! போன தடவை, ஆன்லைனில் ஆர்டர் போட்டு பிரச்சனையாகிச்சு!!! இந்த தடவை, நேரடியாகவே கடையிலே வாங்கலாம் முடிவு பண்ணி, மைக்ரோம்மேக்ஸ் ஸ்மார்ட் போன் வாங்கிட்டேன்!!! போனை சார்சு போட்டு, போன் பண்ணா…… எதிர்தரப்பில் பேசுவது கேட்கவில்லை!!! கேட்டா மைக் ரிப்பேர்ன்னு சொன்னாங்க!!!! என்ன கொடுமை சார் இது!!! என்ற பஞ்ச டயலாக் கூட பேச முடியாத தூர்ப்பாக்கிய நிலை!!! ஆனால், செல்போன் ஷோரூம் வைத்திருப்பவர் நல்லவருன்னு நினைக்கிறேன்!!!! உடனே மாற்றி கொடுத்திட்டாரு!!!! ஏதோ இரண்டு வருசம் ஒடிச்சு!!!!

அதற்கிடையில், அக்காவிற்கு ஒரு போன் வாங்கினேன்!!! அதுவும் ரிப்பேர்!!! மறுபடியும் சர்வீஸ் செண்டர் கொடுத்து, சரி பண்ணினாங்க!!!

எனக்கு பொதுவாக மூடநம்பிக்கை மீது நம்பிக்கையில்லை!!! அது கூட உண்மையோ என்று கூட யோசிக்க வைக்க விட்டது.

மறுபடியும் இரண்டு வாரங்களுக்கு முன்னர், மைக்ரோமேக்ஸ் பிரச்சனையாகி விட்டது. இரு முறை சரி செய்தும், மீண்டும் பிரச்சனை!! இனிமேல் புது போன் வாங்கியே ஆக வேண்டும் என்று முடிவு செய்தால், மீண்டும் உள்ளுற ஒரு வித பயம்!!! மறுபடியும் போன் வாங்கினா….. ரிப்பேர் ஆனஎன்ன பண்றதுன்னு!!!!!

சரி!!! நமக்கு தான் ராசியில்லை!!!! ப்ரண்ட்ஸ் யாராவது கூப்பிட்டு வாங்கலாம் பார்த்தா!!!! யாரும் வர கூடிய நிலையில்லை!!! சரி என்ன நடந்தாலும் நடக்கட்டும்……… நானே தனியாக சென்று, ஒரு புது போன் Redmi Note 4 வாங்கியாச்சு!!!

வாங்கி ஒரு வாரம் கடந்து விட்டது!!!! புது போன் வாங்கி, ஒரு ஸ்டேடஸ் போட கூட பயம்!!! அதுக்குள்ள போன் ரிப்பேர் ஆன என்ன பண்றது!!! இன்னும் பயம் தொடரவே செய்கிறது!!!!

மகிழ்ச்சியை கூட, வருத்தத்தோடு கடக்க வைக்கிறது வாழ்க்கை!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்