Saturday, May 27, 2017

அரசியலமைப்பும் இனவாத அரசியலும்

அரசியலமைப்பு சட்டப்படி, இந்தியர் ஒவ்வொருவருக்கும் ஒற்றை குடியுரிமை வழங்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவில் இரட்டை குடியுரிமை வழங்கப்படுகிறது. அதாவது மாகாணத்திற்கான குடியுரிமையும், மொத்தமான அமெரிக்காவிற்கான குடியுரிமை என இரட்டை குடியுரிமை வழங்கப்படும்.

இந்தியா என்பது பல்வேறு மதம், மொழி, இனம், சாதி, கலாச்சாரம் மற்றும் பண்பாடு என பல்சுவை கொண்ட நாடு. சுதந்திரம் அடைந்த பிறகே, ஒற்றை இந்தியா என்ற தொகுப்பு வடிவம் கிடைத்தது. இவ்வாறாக, பல்சுவையினால் பிரிக்கப்படாமலும், இந்தியர் அனைவரும் ஒருவரே என்ற எண்ணத்தை உண்டாக்கவே, ஒற்றை குடியுரிமையை அரசியலமைப்பு சட்டம் வழங்கியது.

ஏற்கனவே மதம், இனம் ,மொழி சார்ந்த பூசல்கள் நிறைந்த இந்திய நாட்டில் இரட்டை குடியுரிமையை வழங்கியிருந்தால், நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும். அதனால் தான், பலமான மத்திய அரசு கொண்ட, அரை- கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் இந்தியா பயணிக்கிறது.

இதில்குடியரசு தலைவர் முதல் பஞ்சாயத்து உறுப்பினர் வரை, அனைவரும் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்என்ற ஒற்றை தகுதியையே அரசியலமைப்பு சொல்லுகிறது. ஒரு குறிப்பிட்ட இனம் சார்ந்த மனிதர்கள் மட்டும், ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆள வேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக... அப்படி சொல்வது கூட அரசியலமைப்பிற்கு எதிரானதே!!!! ” 

மதச்சார்ப்பற்ற, சமத்துவ, சமநீதி, சகோரத்துவ, இறையாண்மை கொண்ட நாடுஎன்ற அரசியலமைப்பின் முன்னுரைக்கு அர்த்தம் இல்லாமல் போகும்.
ஒட்டளிக்கும் மக்களுக்கு, தனக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்திற்கு வழியே சேவை செய்ய வேண்டும் என்ற மனம் இருந்தால் போதும்!!!! மற்றப்படி எல்லாமே அரசியலே!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


Friday, May 26, 2017

மாமியார்-மருமகள் சண்டை

நம் நாட்டில், தந்தை வழி சமூகம் பராம்பரியம் இருப்பதால் தான், மாமியார்-மருமகள் சண்டை அதிகமாக நடக்கிறது என்று நினைக்கிறேன்.
அதே..... தாய் வழி சமூகமாக இருந்திருந்தால், மாமனார்-மருமகன் சண்டை ஏற்பட தான் வாய்ப்பு அதிகம் என்று நினைக்கிறேன்.

மேற்கண்ட இரண்டிலும், அதிகார பகிர்வு தான் பெரிய பிரச்சனை!!!
இந்தியாவில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே உள்ள கூட்டாட்சியில் உள்ள பிரச்சனையை போல், குடும்பங்களிலும் அதிகார பகிர்வில் பெரும் பிரச்சனைகள் எழுகின்றன.

மேற்கண்ட இரண்டு உறவிலும், அதிகாரங்களை சரியாக பங்கீடுவது என்பது சாத்தியமானதா?? என்பதே கேள்வி குறி தான்!!!

அதனை தாண்டி.... முந்தைய மற்றும் அடுத்த தலைமுறைகளுக்கும் இடையேயான புரிதல்களும் வெகுவாக மாறியிருக்கின்றன.

மேற்கண்ட அனைத்தையும் புரிந்து கொள்வதற்கு, உளவியல் ஆய்வாளர்களே முடியாது. ஆதலால், அன்பை பொழிந்து.. .ஆதிக்க மனநிலையை விடுத்து.... குடும்பத்தை செவ்வழியே பேணி காப்போம்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



Wednesday, May 24, 2017

கிரிக்கெட் வீரர்களும் பிம்ப கட்டமைப்புகளும்

கிரிக்கெட் நட்சத்திரங்களில்….. தோனி மற்றும் டெண்டுல்கர் மீதான பிம்ப கட்டமைப்புகளில், எனக்கு சில அசுசைகள் உண்டு. சாதாரண கிரிக்கெட் ரசிகராக, தோனியின் தலைமை பண்பையும், டெண்டுல்கரின் ஆட்ட திறனை கண்டும் ரசித்ததுண்டு. ஆனால் அதனை தாண்டிய இருவரின் கட்டமைப்புகள் அதீதமாகவே தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில், அணியின் தலைவராக தோனி பங்கு அளப்பறியது. அதில் எள்ளவும் ஐயமில்லை. ஆனால், “ தோனி மட்டும் இந்திய அணியை தலை நிமிர செய்தார்என்ற புரிதலிலே தான் பிரச்சனை.

ஒரு இயக்கத்தினை வழிநடத்தி செல்லும் போது, அதில் ஒருவர்/இருவர் மட்டுமே, வரலாற்றில் இடம் பிடிப்பார். அத்தகைய இயக்கத்தின் வெற்றி, ஒன்றிரண்டு நாளில் எழ முடியாது. இன்றைய திராவிட கழகங்களின் வளர்ச்சியில், நீதி கட்சி மற்றும் பெரியாரின் திராவிட இயக்கத்தின் பங்கு முக்கியமானது. அதனை நினைவில் கொள்ளாமல், இன்றைய திராவிட இயக்கங்களை மட்டுமே பெருமை கொள்ள இயலாது.

குப்த பேரரசில், சமுத்திர குப்தரின் காலம் பொற்காலமாக பொறிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு அடித்தளம் அமைத்த ஸ்ரீகுப்தரையோ, முதலாம் சந்திரகுப்தரையோ பெருமைப்படுத்தப் படுவதில்லை. முகலாய பேரரசில் அக்பர் தெரிந்த அளவிற்கு, பாபர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஒரு இயக்கத்தின்/ பேரரசின் வரலாற்றில் ஒரு மன்னரை/தலைவரை அடையாளமாக பிம்பப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால், அவரையே கடவுள் என்ற நிலைக்கு எடுத்து செல்ல வேண்டிய தேவையில்லை. கால ஒட்ட நிலையின் உச்சப்பட்ச நிலையான ஒரு மனிதர் அடையாளம் காட்டப்படுவர். அத்தகைய மனிதராகவே சமுத்திர குப்தரையும் அக்பரையும் அசோகரையும் இன்றைய திராவிட இயக்கங்களையும் தோனியை அடையாள படுத்த முடியும்.

காவஸ்கர், கபில்தேவ், அசாரூதின், டிராவிட், கங்குலி என பல கிரிக்கெட் கேட்பன்களால் கட்டமைப்பப்பட்ட கிரிக்கெட் அணி, மெதுவாக வளர்ச்சி நிலைகளால், தோனியில் உச்சப்பட்ச நிலையில் நின்றிருக்கிறது. இத்தகைய புரிதலை கொள்ளாமல், தோனியின் பிம்பத்தை கட்டமைப்பதோ…. அபத்தமாக தெரிகிறது.

அடுத்தது டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் வரலாற்றில், டெண்டுல்கரின் பயணம் முக்கியமானது. அதே சமயத்தில் கடவுள் என்பதெல்லாம், கொஞ்சம் அதீதமாகவே தெரிகிறது.
உலக அளவிலான விளையாட்டில், கிரிக்கெட்டின் பங்கு மிக குறைவு. இன்னும் ஒலிம்பிக்கில் கூட நுழைய முடியவில்லை. கிரிக்கெட் விளையாட கூடிய நாடுகள் என்றால், 20 கூட தண்டாது.

உசைன் போல்ட் போல், மைக்கேல் பெலப்ஸ் பொல் இந்தியாவிற்காக பெருமை தேடி தந்தால், அவரை கடவுளாக அவதனிப்பது நன்று.
மேலும், டெண்டுல்கரின் அடித்த ரன்கள், இந்தியாவின் வெற்றிக்கும், உலக விளையாட்டு உலகத்தில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியது என்பதையும் சேர்த்தே பார்க்க வேண்டியுள்ளது.

மேலும் கிரிக்கெட்டில் மட்டை வீச்சாளர்களை மட்டும், திறமையானவர்கள் என்ற பிம்பமும் கொஞ்சம் இடிக்கவே செய்கிறது. பந்து வீச்சாளர்கள் ,மற்றும் தடுப்பாளர்கள் பணி பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை என்பதையும், இதனுடன் சேர்த்து பார்க்க விரும்புகிறேன்.

தோனி மற்றும் டெண்டுல்கர் ஆகிய இருவரின் திறமை குறித்த சந்தேகம் இல்லை. ஆனால், அவர்களுடைய திறமையை, வரலாற்றின் அடிப்படையிலும், அதன் கால ஒட்டத்திற்கு ஏற்ப புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதை விடுத்து…. அவர்கள் குறித்த பிம்பத்தை branding என்ற நிலையில் எடுத்து செல்வதே கடினமாக உள்ளது.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



Wednesday, May 17, 2017

ரஜினி- சினிமா- அரசியல்

பள்ளி கூட நாட்களில்..... அந்த வயதிற்கே உரிய, என் மனதில் நாயகனாக வடிவம் எடுத்தவர் ரஜினிகாந்த் தான்!!! நான் விஜய், அஜித் காலத்தில் பிறந்திருந்தாலும் ரஜினி மீதான ஈர்ப்பில், நான் அடைப்பட்டிருந்தேன்.

இன்னும் சொல்ல வேண்டுமானால்...... பள்ளி கூடத்தை தாண்டி கல்லூரி வந்த பிறகு தான், சினிமா நடிக நடிகைகளை பற்றியே தெரிந்து கொண்டேன். பள்ளி கூட நாட்களில் , சினிமாவை காண்பதற்கு பொருளாதாரம் வழி கொடுக்காததால் , காதில் விழுந்த ரஜினியை தலைவனாக மனம் உள் வாங்கி கொண்டது.

கல்லூரி காலங்களிலேயே, வெளியுலகம் கற்பித்து வைத்த சூப்பர் ஸ்டார் என்னும் பிம்பத்தை, நிஜ உலகம் எளிதாக உடைத்து எறிந்தது. அதற்கு பிறகு சினிமா பிம்பங்கள் மீதான மோகம் வெகுவாக குறைந்து போனது.

இன்றைய நிலையில்.... ரஜினியின் மீதான ரசிப்பு தன்மையை விட வெறுப்பே அதிகம்!!! அதற்கு அரசியலே முதற்காரணம். ஆனால், நடிகன் என்ற நிலையில்... அவரது சினிமாவை காண்பதற்கு தவிர்ப்பதும் இல்லை.

என்னை பொறுத்தவரை.... எந்த சினிமாத்துறையை சார்ந்தவரையும், அரசியல்வாதியாக கண்பதில்லை விருப்பமில்லை. நடிகர்/கலைஞன் என்ற நிலையோடு நிறுத்தி கொள்வதே சரி!!! அது போன்று.... எந்த கலைஞனையும் தலைவனாகவும்/ ரசிகனாகவும் நினைத்தது இல்லை.

சினிமா துறை பொறுத்தவரை..... பிரகாஷ்ராஜ், பாவனா, வித்யாசாகர், ஸ்வர்னலதா, லாரன்ஸ், சமுத்திரகனி, பிந்து மாதவி என சில கலைஞர்களை.... அவரவர் துறையை சார்ந்து பிடிக்கும்.

-----------------------------------------------------------------------------

ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய உரையாடல் என்பது தேவையில்லாத ஒன்றாகவே தெரிகிறது. அவர் அரசியல் வந்தாலும், எந்தவித மாற்றமும் எற்பட போவதில்லை.

அரசியலில் மாற்றம் என்பது இரு இடங்களிலும் நடக்க வேண்டும். அதாவது மேல்நிலை மற்றும் கீழ்நிலை. மேல்நிலையான அரசியல்வாதிகள் மட்டும் நல்லவனாக இருக்க வேண்டியது முக்கியம் என்றால், கிழ்நிலையான மக்களும் மாற வேண்டியது, அதை விட முக்கியம்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



Monday, May 15, 2017

கிரிக்கெட்டும், அரசியல் சார்பு நிலையும்

ஐபிஎல் போட்டிகளில், லிக் போட்டிகள் முடிவடைந்து விட்டது. திறமையான வீரர்கள் இருந்தாலும், பெங்களூர் அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மிக திறமையான வீரர்கள் இல்லாமலும், ஹதரபாத் மற்றும் புனே அணிகள் முன்னிலை வகித்தது. யாருக்கு கோப்பை?? என்பதற்கு ஒரு வாரம் காத்திருப்போம்!!!

நான் சொல்ல வந்த செய்தி.... இதை தாண்டியது??

அனைத்து போட்டிகளிலும், மட்டைவீச்சாளர்களே அணியின் தலைவனாக செயல்பட்டார்கள். டெ;ல்லி அணியில் மட்டும் பந்து வீச்சாளாரான ஜாகீர் கான் அணியின் தலைவராக இருந்தார்.

இந்த நிகழ்வு என்பது ஐபிஎல் போட்டி மட்டுமல்ல. உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும், அணியின் தலைவர் மட்டை வீச்சாளராகவே உள்ளார். எந்த இந்த பராபட்சம்?? என்று புரியவில்லை.

பந்து வீச்சாளர்கள், அணியினை வழிநடத்த திறமையற்றவர்கள் என்பது போல் போலிபிம்பம் ஏற்படுத்துவது ஏனே????.

கிரிக்கெட் விளையாட்டில், பந்து வீச்சாளர்கள், மட்டை வீச்சாளர்கள் மற்றும் காப்பாளர்கள் என்று மூன்று பேரின் பங்களிப்பும் இருக்கிறது. எடுக்கப்படுகின்ற/எடுக்கப்படாத ஒவ்வொரு ரன்னிலும், மூவரும் பங்களிப்பு அதிகம்.

ஒரு ரன்/நான்கு ரன் எடுத்தால், மட்டை வீச்சாளரை புகழுந்து தள்ளுகிறது கிரிக்கெட் உலகம். ஆனால் ஒரு ரன் எடுக்கப்படா விட்டால், பந்து வீச்சாளரையோ/ பந்து காப்பாளரையோ புகழுவதில்லை.

இந்த மனநிலை என்பது ஒட்டுமொத்த சமூகத்திடமும் உள்ளது. கிரிக்கெட்டில் மட்டுமே தலைவிரித்தாடுகிறது என்று எண்ண வேண்டாம். சில உதாராணங்கள்:

ஆண், பெண் இருவரும் வேலை செய்தாலும்... ஆணை மட்டுமே, இச்சமூகம் முன்னெடுக்கிறது.

உடல் உழைப்பு மற்றும் மன உழைப்பு ஆகிய இரண்டிலும், இன்றும் மன உழைப்பு சார்ந்த வேலைகளே பெரிதாக எண்ணப்படுகின்றன.

மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளிலும், ஒரு பொதுமனநிலையை, இச்சமூகம் ஏற்படுத்தி வைத்திருக்கிறது.

இவையெல்லாம் நவீனத்துவ பார்வையின் குறியீடுகள். இதை விடுத்து, பின்நவீனத்துவ பார்வையில், ஒரு செயலில் பங்கெடுக்கும் அனைவரும் பாராட்ட வேண்டியது அவசியமாகிறது.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



Monday, May 1, 2017

கார்ப்பரேட் கோடாரி- புத்தக விமர்சனம்

சூழலியலாளர் நக்கீரனின் கார்ப்பரேட் கோடாரி என்ற சிறு புத்தகத்தை வாசித்தேன். பசுமை விகடனில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு.
நிச்சயமாக... ஒரு முறை வாசிக்கப்பட வேண்டிய புத்தகம்!!!

வளர்ச்சி என்ற ஒற்றை சொல்லிற்காக..... மூன்றாம் தர உலக நாடுகளில், முதலாளித்துவ கொள்கையின் தீமைகளை ஆசிரியர் விளக்குகிறார்.

கிராமமயமாக்கல் என்ற புதிய சொல்லாட்சியை, இந்நூலின் மூலம் அறிகிறேன். நகரமயமாக்கலை போல், கிராமமயமாக்கலின் புதிய முகங்களை அறிய முடிகிறது.

உரப்பயன்பாட்டின் அதிகரிப்பு, பராம்பரிய பயிர்முறையை அழித்தல், பணப்பயிர்களான கோகோ மற்றும் எண்ணெய் பனையின் உற்பத்தி அதிகரிப்பு, உயிர்-பிளாஸ்டிக் உற்பத்தியில் உணவு தானியங்களின் பயன்பாடு, ஆப்பரிக்கா மற்றும் ஆசிய கண்டங்களில் ஏற்பட்ட உணவு சிதைவு என்று பலவற்றை கூறுகிறார்.

விகடன் பிரசுரம்.... வாசித்து பாருங்களேன்!!

--------------------------------------------------------------------------

தெரிந்தோ, தெரியாமலோ முதலாளித்துவ பொருளாதார கோட்பாட்டில் அகப்பட்ட பிறகு, அதை முற்றிலும் புறக்கணிப்பது நல்லதல்ல. அதே சமயத்தில் சூழ்நிலைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு, மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது என்னுடைய நிலை!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்