Thursday, July 28, 2016

புத்தக வாசிப்பின் நோக்கம் நிறைவேறுகிறதா???

தஞ்சாவூர் புத்தக கண்காட்சி சென்ற போது, ஒரு விஷயம் மனதில் ஓடியது. பல்வேறு தளங்களிலிருந்து பல்வேறு வகையான நூல்கள் எழுதப்பட்டு, பல்லாயிர கணக்கான நூல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இப்படியான எழுதப்பட்ட நூல்கள், எவ்வளவு மக்களை சென்றடைந்திருக்கும்... சில ஆயிரங்களை தாண்டலாம்.. சில நூல்கள் மட்டும் .... சில லட்ச பிரதிகள் விற்கும்... அதற்காக எழுதியவர்களையும் குறை சொல்லவில்லை. பொருளாதாரத்தில் பின் தங்கிய இந்தியா போன்ற நாடுகளில் புத்தகம் வாசிப்பு குறைவாக்கத்தான் இருக்கும்.
என்னுடைய கேள்வி... அதை தாண்டியது!!!! அப்படியாக படித்தவர்களில், அப்புத்தகத்தின் உண்மையான கருத்தை, எத்தனை பேர் உள்வாங்கியிருப்பார்கள்... அதன்படி எத்தனை பேர் நடந்திருப்பார்கள்??
படித்தவர்களில்... நூற்றில் ஒருவரது பயனடைந்தால் போதும்!!! என்ற சால்சாப்பை, நாமும் சொல்லி கொண்டே கடந்திருப்போம்(என்னையும் சேர்த்து தான்)...
இவ்வாறாக பல புத்தகங்கள், மின் குப்பை போல் சேர்ந்திருக்குமே தவிர, சமூக மாற்றத்திற்கான பயனை அளிக்காது....
தனிமனித வளர்ச்சி, மத தீவிரவாதம், பொருளாதார சீர்கேடு, உலக அரசியல் போன்றவற்றால் சிக்குண்டு இருக்கிறோம்.. மறுபுறம், தொழிற்நுட்ப வளர்ச்சி, விஞ்ஞானம், அறிவியல் வளர்ச்சி என்றும் கூப்பாடு போட்டு கொண்டே வாழ்க்கையை கடந்து போய் விடுகிறோம்...
பல்லாண்டுகளாக இருந்த, பேனா முனையின் வலிமை வழக்கொழிந்து போவதை போல் தெரிகிறது...

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Tuesday, July 26, 2016

கவிதை- மயக்கம் என்ன??

’சில்லறை’ போதைகள்
சில்லறைத்தனமான மனதினால்….
எளியவனையும்
ஏளனம் செய்கிறது…..
பண மயக்கமாய்!!!!!
மானுடம் தளிர்க்கையிலே
மனிதம் கசங்குகிறது…..…
அதிகார போதையிலே
ஆணவம் தலையெடுக்கிறது…..
அரசியல் மயக்கமாய்!!!
அறிவை முடமாக்கி
ஆனந்த அக நிலைக்காக….
பெண்ணியத்தை பெயர்த்தெடுத்து
ஆண்மை அவளம் செய்கிறது
காம மயக்கமாய்!!!!!
தெளிந்த நீரோடையில்
கல்லெறியப்பட்ட அன்பினால்…..
அகம் தள்ளாடி
புறம் தள்ளாடாமல் தவிக்கிறது …
காதல் மயக்கமாய்!!!!!
எந்தன் தயக்கம்
என்னுள் மயக்கமாய் தழுவ…….
வார்த்தை போதைகள்
வாக்கியங்களாய் வடிவெடுக்கையில்…..
அறிவு ஆர்பரிக்காமல்
அழகு கவிதை வடிவமாய் படிமமெடுக்கிறது!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Thursday, July 21, 2016

நாகரித்தின் வளர்ச்சியும், இயற்கையின் வீழ்ச்சியும்

உயிரினங்கள்அனைத்தும்(மனிதன் உட்பட) நாடோடி வாழ்க்கையை சார்ந்தவை.. அதாவது இயற்கையோடு ஒன்றி, அதன் சூழ்நிலைக்கு ஏற்ப, ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்று, தன் தேவைகளை நிறைவேற்றி கொள்வது எனலாம்..
ஆதிகாலத்தில் மனிதனும், நாடோடியாகவே வாழ்ந்தான். இவ்வாறாக இயற்கை சூழ்நிலைக்கு ஏற்ப, இன்றும் பறவைகளும், விலங்குகளும், மீன்களும் இடம் பெயர்ந்து கொண்டே இருக்கின்றன.
மனிதன் தான், ஆறறிவு மிருகமாயிற்றே!!! கொஞ்சம் சிந்தித்தான்.. தன்னுடைய தேவைகளை, தன்னுடைய இருப்பிடத்திற்கே, கொண்டு வர முயற்சித்தான்/ முயற்சி செய்தும் கொண்டிருக்கிறான். அதன் விளைவாக, நாகரிகம் பிறந்தது.
அன்று ஆரம்பித்த சுற்று சூழலியல் மாறுபாடு, இன்றும் தொடர்கிறது.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Saturday, July 9, 2016

அப்பா திரைப்படமும்-- அதன் பின்விளைவுகளும்

நீண்ட நாட்களுக்கு பிறகு, நல்லதொரு படமாய் #அப்பாதிரைப்படம் பார்த்தாயிற்று(எதில்யென்றால்… எப்போதும் போலத்தான்!!?!?). சாட்டை படத்தில், நல்ல ஆசிரியராக வந்தவர், அப்பாவில் நல்ல அப்பாவாகவே வாழ்ந்திருக்கிறார்.
இன்றைய கல்வி முறை, ஆண் பெண் ஈர்ப்பு சார்ந்த காதல், மதிப்பெண் சார்ந்த வாழ்க்கை முறை, கல்வி சார்ந்த வியாபரம் என்று அனைத்து இடங்களையும் படம் கடந்து செல்கிறது.
சமுத்திரக்கனி குடும்பத்தினை மட்டுமே வைத்து, படத்தினை இயக்குநர் நகர்ந்தியிருந்தால், ஒரு வாரத்தில் தியேட்டரிலிருந்து நிச்சயமாக தூக்கப்பட்டிருக்கும். ஆனால், வெவ்வேறு குணநலங்களையும் உடைய மூன்று குடும்பங்களை, ஒரே கதையில் முன்னிறுத்துவதால் தான், படம் வெற்றிக்கனியை பறிக்கிறது. ( மூன்று அப்பாக்களையும் சித்த மருத்துவத்தின் வாத, பித்த, கப மனநிலைக்கு ஒப்பிடலாம்)
குழந்தைகளின் அதி புத்திச்சாலித்தனம், வெளிப்புற சூழ்நிலைகளால் பாதிக்கப்படாமல் அப்பாவின் பேச்சை மட்டுமே கேட்கும் குழந்தைகள், ஆண்-பெண்ணையும் சகஜமாக பழக விடும் குடும்பத்தார் போன்ற காட்சிகளை, சினிமாத்தனம் என்ற போர்வையினால் மறைத்து விட்டு கடக்க வேண்டியுள்ளது.
இத்தகைய அருமையான திரைப்படத்தை பார்த்து முடித்தவுடன், மனதில் ஒர் கேள்வி தொக்கி நின்றது. சமுத்திரக்கனியான வாழ்ந்த அப்பாவை பாராட்டி விட்டு, அவரை போல் வாழும் அப்பாக்கள் எவ்வளவு பேர்கள்????
சமுத்திரக்கனியை போல் வாழ்வியலை புரிந்த அப்பாக்கள் எத்தனை பேர்?? மற்றும் அப்படிப்பட்ட அப்பாக்கள் சொல்வதை கேட்கும் பிள்ளைகள் எத்தனை பேர்?? இரண்டு பேரின் சதவீதமும் மிகக்குறைவு. அப்படியே எண்ணினாலும், இன்றைய சமூகத்தின் அழுத்தம், அவர்களை விடுவது இல்லை. சமூகத்தை தாண்டி, தனி மனிதனாக என்ன செய்ய முடியும்?? என்ற சால்சப்போடு, நாமும் கடந்து சென்று விடுவோம்.
சமுத்திரக்கனியை போல் தம்பி ராமையாவின் நோக்கம் ஒன்று தான்…. பையனின் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும். சமுத்திரக்கனிக்கு வாழ்வியலை பற்றிய சரியான புரிதல் இருந்ததால், தன் மகனுக்கு தெளிவான பாதையை காண்பித்தார். ஆனால், தம்பி ராமைய்யாவிற்கு புரிதல் இல்லாததால், சமூகம் வடிவமைத்து கொண்ட பாதையை சரியென நினைத்தார். அதுவே தவறானது.
இன்றைய சமூக சூழ்நிலையில், சமூக ஊடகம் மற்றும் திரைப்படங்களின் தாக்கம், இளைய தலைமுறையிடம் அதிகமாக காணப்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால், அப்பா- அம்மா- பிள்ளைகள் உறவே வேரற்று கிடைக்கையில், பெற்றோர்களின் அறிவுரைகளை, மாணக்கர்களும் விரோதமாகவே பார்க்கின்றனர்.
மதுவிலிருந்து மாது வரையிலான் கெட்ட பழக்கங்களை, திரைப்படத்திலிருந்து பெற்று கொள்ளும் நாம், இது போன்ற நன்னெறிகளையும், திரைப்படத்திலிருந்து பெற்று கொள்ள வேண்டும். இல்லெயென்றால், இந்தியன், அந்நியன் போன்ற சமூக அக்கறையுள்ள படங்களின் வரிசையில் ஒன்றாகவே அமையுமே தவிர, வாழ்க்கை பாடமாக மாறாது.
-----------------------------------------------------------------------------
இந்த இடத்தில், என்னுடைய வாழ்க்கையில், பெற்றோரின் பங்கையும் ஒப்பிட்டளவில் குறிப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். இதுவரையிலும், என்னுடைய எந்தவொரு முடிவிற்கு, பெற்றோர்கள் ஆக்கமாக இருந்தார்களே தவிர, தடையாக இருந்ததில்லை. இந்த தருணத்தில், அவர்களுக்கும் நன்றி சொல்வது செம்மையாக இருக்கும்.
உங்களின் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Thursday, July 7, 2016

தியரி(கருத்தாக்கம்) vs பிராட்டிகல்(நடைமுறை)...

தியரி(கருத்தாக்கம்) vs பிராட்டிகல்(நடைமுறை)...
இதில் எது சிறந்தது??? நீயா நானா போல், ஒரு பக்கம் நின்று பேசலாம் என்றால் முடியாது போலும். கோபிநாத் போன்று நடுவுல நின்று, இரண்டு பக்கமும் பேச வேண்டியது தான்!!!!
கருத்தாக்கம் என்பது கொள்கை எனலாம். அதாவது ஒரு செயல் பற்றிய முழு விளக்கம் ஆகும். நடைமுறையில் சாத்தியாமா என்பதை பற்றியெல்லாம் யோசனை கிடையாது. தத்துவஞானிகள் சிறந்த எடுத்துக்காட்டு.
ஒரு செயலினை நடைமுறைப்படுவது என்பது கள நிலவரங்களை பொறுத்தே அமையும். பல நேரங்களில், கொள்கைகளே மறந்து போகும் அளவிற்கு சமரசம் செய்து கொள்ளும்.
இரண்டில் எது சிறந்தது என்ற விவாதமெல்லாம், தர்க்கத்திற்கு உதவுமே தவிர, நடைமுறையிற்கு முழுவதும் சாத்தியமில்லை.
நம்முடைய கல்வி முறையிலே, இதன் தேவை அதிகம். வெறும் தியரி வைத்தும் ஒன்று சாதித்து விட முடியாது. அது போல், வெறும் பிராடிக்ல் மட்டுமும் உதவாது. தியரிக்காக பிராட்டிகலே தவிர, பிராட்டிகலுக்காக தியரி கிடையாது.
இதனை விளக்க... இன்றைய தொழிற்நுட்ப கல்வியை எடுத்து கொள்ளலாம் என நினைக்கிறேன். பி இ படித்தவர்கள், தியரி பற்றிய அறிவே அதிகமாக இருக்கும். ஆனால் பாலிடெக்னிக் படித்தவர்களிடம், தியரி மற்றும் பிராட்டிகல் படித்தன் அறிவு இருக்கும். ஆகையாலே இன்று பாலிடெக்னிக்கின் மதிப்பு இன்றும் குறையவில்லை.
தியரியும் பிராட்டிகலும், நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. இரண்டும் இருந்ததால் தான் மனித வாழ்வு நாணயத்தை போல் முழுமை பெறும்.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்