Sunday, April 19, 2020

கோரோனா -சமகால புரிதல்கள்- ஏப்ரல் 2020

1. COVID 19 பிறந்து.... கிட்டதட்ட 4 மாதங்கள் தான் ஆகின்றது. ஆனால் கிட்டத்தட்ட 1,60,000 பேர் இறந்து விட்டனர்!!! சீனாவில் ஆரம்பித்தாலும்... ஆரம்பத்தில் நோயின் தீவிரத்தை நாடுகள் உணரவில்லை!!! ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் ஏற்பட்ட உயிரிழப்பினை தொடர்ந்து...... மற்ற நாடுகள் உணர ஆரம்பித்தது

2. இந்தியாவில் கூட ஊரடங்கு அறிவித்து 4 வாரங்கள் முடிவடைய போகிறது. ஊரடங்கிற்கு முன்பு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்குவதற்கு 3 நாள் தேவைப்பட்ட நிலையில்.... ஊரடங்கிற்கு பிறகு சராசரியாக 6 நாள் தேவைப்பட்டிருக்கிறது. 6 சதவீத அளவில் வேகம் குறைந்திருக்கிறது

3. உலக சுகாதார அமைப்பும் சமூக விலகலையும், தனித்திருத்தல், வீட்டிலிருத்தலையே வலியுறுத்தி கூறுகிறது. அதிகளவில் மக்கள் தொகையையும், பொருளாதார மந்தத்தில் இருக்கும் இந்தியாவில் ஊரடங்கினை செயல்படுத்துவது சற்று சவலான காரியம்!!!

4. வளர்ந்த நாடுகளில் மிகப்பெரிய பாதிப்பினையும், உயிரிழிப்பினையும் ஏற்படுத்தி வருகையில், இரண்டாம் தர நாடுகளில் பாதிப்பு குறைவாக இருப்பதும் சற்று ஆச்சரியமான விஷயம்!!! இயற்கையாக உள்ள Herd Immunity ஆக இருக்கலாம்!!! ஆனால் முறையாக தரவுகளும் இல்லை!!!

5. இது மாதிரியான நிலையை உலகம் கண்டதில்லை!!! இப்பிரச்சனையும் ஏப்ரல் - மே மாதத்துடன் முடிந்து விடுகிற தெரியவில்லை!!! இந்த வருட இறுதியை கூட அடையலாம்!!! ஆனால் பொருளாதார பிரச்சனைகள் களைய 2-5 வருடங்கள் கூட ஆகலாம்!!!

6. இந்தியாவில் மே மாத ஆரம்பத்தில் ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டாலும்...... கட்டுபாடுகள் விலக்க கூடாது!!! பொது போக்குவரத்தை தள்ளி போட வேண்டும்!!! மத சார்ந்த விழாக்களுக்கு அனுமதிக்க கூடாது!!! பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜீலை தள்ளி வைக்கலாம்!!!!

7. ஒரு பகுதியிலியே ...... வைரஸின் ஜீன் வெவ்வேறு strain கிடைப்பதால் தடுப்பூசி கண்டுபிடிப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது!!! இயற்கையாக நோய் எதிர்ப்பாற்றல் கிடைத்தால் மட்டுமே ... இந்நோய் முழுவதும் உலகத்தை விரட்ட முடியும்

8. அதுவரைக்கும்.... சமூக விலகல், கை கழுவதல், முகவுறை அணிவது தான் சிறந்த எளிமையான வழிமுறையாக இருக்கும்!!!

9. பாதிப்பு விகிதம் அதிகமாக இருந்தாலும்.... இறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது!!! ஆனால் ஒரே நேரத்தில் அதிகமான நபர்களுக்கு பாதிக்கப்படும் போது மருத்துவ துறை முழுவதும் முடங்குவது தான் பிரச்சனை!!!!

10. இறப்பினை தாண்டி பொருளாதாரம் சார்ந்து பிரச்சனைகள் அதிகமாகவே இருக்க போகிறது!!! அதிலும் நடுத்தர/கீழ்த்தர வர்க்கத்தின் நிலைமை சொல்லி மாளாது!!! பணத்தினை பார்த்து செலவு செய்யுங்கள்!!!

11. சுய ஒழுக்கம், சுய சார்பு, சூழ்நிலைக்கு ஏற்ப வாழுதல், இக்கட்டான சூழ்நிலையை கையாளுதல், சமூக பொறுப்புணர்வு, எளிமையாக வாழுதல் போன்ற நன்னெறிகளையும் கற்று கொடுத்துள்ளது!!!

 

உங்களில் ஒருவன்

உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

 


Saturday, April 18, 2020

கோரோனா - தூய்மை பாதுகாவலவர்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிறகு... சில துறைகளின் மீது அதீத அன்பினை கொட்ட தொடங்கியுள்ளனர் மக்கள் !!!! அதிலும் முக்கியமாக மருத்துவ துறை , துப்பரவு பணியாளர்கள் மற்றும் காவல் துறை!!!

ஒரு பிரச்சனை ஏற்படும் போது...... அந்த பிரச்சனை தீர்வு காணும் மனிதர்களின் மீதான இயல்பான அக்கறை / பாசம் இயற்கையே!!! ( ஆனால்... அதே பிரச்சனை மருத்துவ துறையினால் வரும் போது.... அத்துறையினரையும் எதிர்க்கவும் தயங்க மாட்டார்கள் என்பது உண்மை...கா கோரோனாவில் இறந்த மருத்துவரை புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிகழ்வு ).

ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல!!! பயத்தின் இரு விளம்புகள்!!! ஒரு புறம் அதீத பாசத்தை கொட்டிகிறது... நமக்கே பாதிப்பு என்றால் புறக்கணிக்கவும் செய்கிறது.

(கடன் வாங்கும் போது... அன்பாக பேசுவது இயல்பு!!! அதே கடனை திரும்பி கேட்கும் போது அன்பு வெறுப்பாக விளம்பி நிற்கும்.!!! )

----------------------------
சரி... விடுங்க!!!

இதையெல்லாம் .... காலத்திற்கு ஏற்ற... உணர்ச்சி குவியல்கள்!!! பண மாலை போடுவது !! பாத அபிஷேகம் செய்வது !!! பாராட்டி முகநூலில் போஸ்ட் போடுவது!!! என அனைத்தும் அமர்க்களங்களும் நடக்கும்!!!

இதற்கு முன்னரும்... இதே பணியை தான் செய்தார்கள்!!!! இப்போதும் செய்கிறார்கள்!!! நாளைக்கு செய்வார்கள்!!! தூய்மை பணியாளர்களின் சம்பளம், வேலை உறுதி தன்மை, வாழ்க்கை திறன் மேம்பாடு பற்றி எப்போதாவது யோசித்து இருப்போமா??? நிச்சயம் கிடையாது... இப்போதும் யோசிக்க மாட்டோம் என்பதே உண்மை!!

இன்றைய சூழ்நிலைக்காக... சிலவற்றை செய்து... .உலகத்திற்கு நல்லவனாக காண்பித்து.... காலத்தை கடந்து விடுவோம்!!!

------------------------------

சரி... கொரோனா வைரஸ் சரியாகி விட்டது என்று வைத்து கொள்வோம்!!!

கோரோனா நேரத்தில் பணியாற்றுவர்களுக்கு மரியாதை செலுத்துவோமா??? என்ன??

டாக்டருக்கு சம்பளம் பத்தலையா???” “ குப்பையை குப்பைத்தொட்டியில் கூட போடாமல் தெருவில் போடுவது....... ” என்பது போன்ற நன்னெறி செயல்களும் / வார்த்தைகளும் நடக்க தான் செய்யும்!!!

தொழில் சார்ந்து.... பணி சார்ந்து.... யாரையும் ஏளனம் செய்யாதீர்கள்!!! உடல் உழைப்பினையும் மன உழைப்பினையும் சமமாக பாவியுங்கள்!!!! ஒவ்வொருக்கும் பணி சார்ந்து பல பிரச்சனைகள் இருக்கும்... அதையும் புரிந்து கொள்ளுங்கள்!!!

உழைப்பிற்காக மரியாதை என்றும் மறவாதீர்கள்!!!!

 

உங்களில் ஒருவன்

உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

 


Monday, April 6, 2020

கொரோனா - கிராம சுயசார்பு வாழ்க்கை

நவம்பர் 2018 கஜா புயல் கடந்த பிறகு.... முதல் மூன்று நாட்கள் மிகவும் கொடுமையாக கடந்தது. பலருக்கு உணவில்லை!!! உடுத்த உடையில்லை!!! போக்குவரத்து தடைப்பட்டு... அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் மிகப்பெரிய பிரச்சனையிருந்தது!!! மின்சாரம் வர... ஒரு மாதம் ஆனது!! வீடுகள் சீரமைத்து முழுமையாக தயாராக மூன்று மாதங்கள் ஆனது.

அந்த நிலையினை ஒப்பிடும் போது... இன்றைய ஊரடங்கில் மிகப்பெரிய பிரச்சனை இல்லை!!! அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கிறது!! மின்சாரம் கிடைக்கிறது!!! எல்லா அடிப்படை வசதிகளும் இருக்கிறது!!! ஆனால் வீட்டினை மட்டும் வெளியேற தடை!!!! அது மட்டும் வித்தியாசம்!!!

இது மாதிரியான நெருக்கடி சூழ்நிலைகளில்... சுயசார்பு பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. முன்பெல்லாம் சுய சார்போடு இருந்தோம்!! ஆனால் உலகமயமாக்கலுக்கு பிறகு சுயத்தை இழந்து.. பிறரை சார்ந்து வாழ வேண்டிய நிலைக்கு வணிகயுலகம் தள்ளி விட்டது!!! சுயசார்போடு வாழ்ந்தால்... இதுமாதிரியான நெருக்கடி நிலை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை!!!

இப்போது உலகமயமாக்கலை பல நாடுகள் எதிர்க்க ஆரம்பித்து விட்டது. நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகமாவதால்... ஒவ்வொரு நாடும் இறக்குமதியை குறைக்கவே எண்ணுகின்றன்!!! மறுபுறம் தேசியவாதம்/சுதேச இயக்கமும் வளர்ந்து வருவதால்..... ஒவ்வொரு நாடும் சுயமாக உற்பத்தி செய்யவே விரும்புகின்றன!! இது நீட்சியே இந்தியாவின்இந்தியாவில் தயாரிப்போம்திட்டம்!!

இந்த புரிதல்.... ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வர வேண்டும். சிலரிடம் தோற்ற ஆரம்பித்து விட்டது!! கிராமங்களில் சுயசார்பு அதிகமாக இருக்கும் என்பது பொது புத்தி!!! ஆனால் கிராமங்களும் சுய சார்பினை இழக்க ஆரம்பித்து விட்டது என்பதே உண்மை!!!

எனது வீட்டில் கூட மாட்டினை விற்று, 20 ஆண்டுகளாகி விட்டது!! கடந்த கஜாவினால் தேங்காய், புளியமரம் போன்றவைகளும் பாதிக்கப்பட்டு விட்டது!!! கஜாவிலிருந்து மீண்ட வாழைமரத்திலிருந்து வாழைப்பழங்கள், சர்க்கரை வள்ளிகிழங்கு, உறவினர் வீட்டில் தந்த நிலக்கடலை என ஊரடங்கின் போது நொறுக்கி தீனியாக இருந்தது!!! கத்திரிகாய் ,முருங்கை காய், மாங்காய், முருங்கை கீரை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி கீரை, புதினா என சில சமையல் பொருட்கள் வீட்டினை சுற்றியே இருந்தது!!!

கஜா பாதிப்பு இல்லையென்றால் .....இளநீர் வெட்டி சாப்பிட்டு இருக்கலாம்!! அறுவடை சற்று தாமாதம் ஆகியதால்..... வெள்ளரிகாய், தர்பூசணி கூட விதைக்கப்படவில்லை.... ஏப்ரல் கடைசியில் தான் முந்திரி பழம் கூட கிடைக்கும்!!!

நகரத்தில் குறுகிய அறைக்குள் அடைந்து கிடைப்பதை விட... கிராமத்தில் காற்றோட்டமாக இருப்பது சிறப்பு!!! விருப்பப்பட்ட பொருட்களை எல்லாம் நகரத்தில் பெறலாம். ஆனால் கிராமத்தில் பெற முடியாது. அவசர காலங்களில் வாழ்க்கையை எளிதாக கடக்க முடியும். கோயம்பேடு மற்றும் டெல்லியிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பியதன் பின்புலம் இது தான்!!!

இதெல்லாம் தற்பெருமைக்காக அல்ல!!! சுயசார்பின் தேவையை புரிய வைப்பதற்காக!!! சுயத்தை இழக்காமல் வாழ முயல்வோம்!!!

 

உங்களில் ஒருவன்

உங்களை போல் ஒருவன்

வேதை குமார்