நான் எப்போதும், அந்த
மளிகை கடையை கடந்த செல்வது வழக்கமான நிகழ்வு. கடையின் வாசலில் தொங்கும் lays,
kurkure, cruncho போன்ற சிப்ஸ் (நொறுக்கு தீனி பண்டங்கள்) எப்போதவது
பார்த்து செல்வதும் உண்டு. ஆனால், அதை வாங்கி உட்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டதில்லை.
இன்று, சற்றும் யோசிக்காமல், வாங்கி
சாப்பிடலாம் என்று நினைத்தேன். ரொம்ப சுவையானது, ரொம்ப
கிரிப்ஸியானது என்று டிவியில் கூட நிறைய விளம்பரம் வருகிறதே என்று நினைத்து கொண்டு, ”ஒன்றின்
விலை எவ்வளவு?..” என்று கேட்டேன். ”ஐந்து
ரூபாய்…” என்றார் கடைக்காரர். ”Lays இருக்கா?...”
என்றேன். ”இல்ல…. kurkure, cruncho தான் இருக்கு…” என்றார்
கடைக்காரர். அதுக்குள்ள காலி ஆகிடச்சா….என்று மனதில்
நினைத்து கொண்டே, “அப்போ… cruncho கொடுங்க…” என்றேன்.
ஒன்று வாங்கின அசிங்க நினைப்பாங்கன்னு, இரண்டு
பாக்கெட்டுகளை வாங்கி, பேக்கில் போட்டு கொண்டேன்.
வீட்டிற்கு வந்து, ஆசையோடு
cruncho பாக்கெட்டை பிரித்தேன். பிரித்தவுடன், ”நான்
அடிப்படியே ஷாக் ஆயிட்டேன்” என்ற வடிவேல் டயலாக் மட்டும் தான் பாக்கி…… அந்தளவுக்கு
அதிர்ச்சி….. உள்ளே
4-5 பிஸ் சிப்ஸ் மட்டும் இருந்தது. (கவர்ல photo ல
இருக்குற அளவுக்கு தான் சிப்ஸ் இருந்தது). சரி…..இந்த
பார்க்கெட்ல …ஏதோ குறைச்சி போட்டு இருங்காங்கன்னு நினைச்சிட்டு… அடுத்த
பாக்கெட்டை பிரித்து பார்க்க…. அதே மாதிரி இருந்தது… சரி..பின்னாடி
எத்தனை கிராம் இருக்குன்னு பார்த்த…. 13 கிராம் ன்னு
போட்டு இருக்காங்க. ”13 கிராம் சிப்ஸை, 5 ரூபாய்
கொடுத்து வாங்கிட்டு இருக்கோம், கம்பெனி மக்களை எப்படியெல்லாம் ஏமாத்திட்டு இருக்குன்னு…அப்போ
தான் தெரிஞ்சுது….”
அதே சிப்ஸை …..வாழைக்காய்
வாங்கிட்டு வந்து, நம்மலே தயார் பண்ணுண, 1 கிலோவே 200-300 ரூபாயை தண்டாது…. கம்பெனிக்கு
ஒரு பாக்கெட் தயார் செய்ய குறைந்த பட்சம் 1 ரூபாயை தாண்டாது. அப்படியென்றால், அதிகபட்சமாக
விற்பதற்கு காரணம் என்ன?? ஒன்று, வியாபார நோக்கம்…இலாபத்தை
அதிகப்படுத்த வேண்டும். மற்றொன்று, அதனை விளம்பரப்
படுத்த வேண்டிய செலவு.
அதிலும், lays, kurkure, cruncho போன்ற
சிப்ஸ் வகைகள் உடலுக்கு சுகாதாரமானதா என்று கேட்டால், அதுவும்
கேள்வி குறி தான். kurkure, பற்றி நியூஸ் முக நூலில் வெளி வந்து கொண்டு இருக்கிறது. Kurkure
வை எரித்தால், சரியாக எரியவில்லை, அதனால்
உடலுக்கு நல்லதல்ல என்கின்றனர் பலர். அந்த விவாத்திற்கு நான் செல்ல விரும்பவில்லை.
இந்த சிப்ஸ் கம்பெனிகள், பெரும்பாலும்
குழந்தைகளை குறி வைத்தே விற்பனை செய்யப்படுகின்றன. குழந்தைகளிடம், சிப்ஸ்
கம்பெனியின் பிராண்ட்டை எடுத்து சென்று விட்டால், அதை
விற்பனை செய்வது எளிது. குழந்தைகள் அடம் பிடித்து, எப்படியாவது
வாங்கி தின்று விடுவார்கள்.
விளம்பரகளின் கவர்ச்சி தன்மையும், சச்சினும், சூர்யாவும்
வந்து சொல்லி விட்டால், அந்த பொருள், நல்ல பொருளாக
மாறி விடும் என்ற மனநிலையும், பொது
மக்களிடம் இருக்கும் வரை, கம்பெனிகளை குறை சொல்வதில் பயனில்லை.
5 ரூபாய் பொருளுக்கு, இவ்வளவு
அக்கப்போரா…என்று நீங்கள் நினைக்கலாம். ”இது 5
ரூபாய் தானே……” என்று மக்கள் யாரும் கேள்வி கேட்பதில்லை. இந்த 5 ரூபாய்
பொருள் மட்டுமல்ல... 500 ரூபாய் பொருள் வரையிலும், ஏதோ
ஒரு வகையில் ஏமாற்ற பட்டு கொண்டிருக்கிறோம். இந்த 5 ரூபாய், உங்களுக்கு
சும்மா யாரும் தருவதில்லை… உங்களுடைய உழைப்பின் வெகுமானம்.
மக்களை ஏமாற்றுவது தான், இன்றைய
மார்க்கெட்டின் தராக மந்திரமாக மாறி உள்ளது தான் வேதனை. பொருளை வாங்க வேண்டாம்
என்று சொல்லவில்லை… அவ்வாறு வாங்கும் போது.. நாம் கொடுக்கும் பணத்திற்கு, தகுந்த
வெகுமானம், அந்த பொருளிற்கு உள்ளதா? அந்த
பொருளினால் நமக்கு உபயோகமாக உள்ளதா? என்று சற்று
யோசிங்கள்….
|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||





