Friday, February 19, 2016

வாழ்வியலும் வாதபித்தகப நிலைகளும்

ரஜினி, ”எட்டு எட்ட வாழ்க்கையை பிரிக்கோ…” பாடிட்டு போயிட்டார். ஆனால், வாழ்க்கையை எட்டாக பிரிப்பதற்கு நமக்கு கஷ்டமாக உள்ளது. அதனால், எளிதாக மூன்று பாகங்களாக பிரித்து கொள்வோம்.

ஒரு மனிதன் பிறந்து இறப்பதற்குள் மூன்று வகையான படிநிலைகளை கடந்து செல்கிறான். அதாவது ஒரு ஆண்/பெண் பிறந்து திருமணமாகும் வரை உள்ள காலம் முதல் நிலையெனலாம். திருமணம் முடிந்து, மகன்/மகளுக்கு திருமணம் முடித்து வைத்தால் இரண்டாம் நிலையை கடந்து விடலாம். பேரன்/பேத்தியை காண கூடிய நிலையை மூன்றாவது நிலையாக கொள்ளலலாம்.

இந்த மூன்று படிநிலைகளையும், தெளிவாக புரிந்து நடந்தால், வாழ்க்கை சுகமாகும். ஆனால், நாம் மூன்றையும் ”ஒரே குட்டையில் ஊரிய மட்டை போல்” ஒன்றாகவே பாவித்து வருகிறோம். இந்த படிநிலைகளை சித்த மருத்துவத்திலும், வாத பித்த கப வாழ்நாட்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஒவ்வொரு படிநிலைக்கும், அடுத்த நிலைக்கு இடையே உள்ள வெளி தான், தலைமுறை இடைவெளியாகும். இது 30 முதல் 40 வருடங்களுக்கு இடைப்பட்டதாக இருக்கும்.

முதல் நிலை என்பது நிச்சயமாக புரியாத புதிர் நிலையே. பொருளாதாரத்தில், பெற்றோரை சார்ந்து இருக்க வேண்டிய நிலையாகும். அதனால் நம்முடைய விருப்பு மற்றும் வெருப்புகளுக்கு அப்பாற்பட்டு, மற்றவரின் ஆசைகளுக்கு ஏற்ப நம்மை மாற்றி இருப்போம். நம்முடைய சந்தோஷங்கள் அனைத்தும், புற சூழ்நிலையால் நிர்ணயம் செய்யப்படுவயாக இருக்கும்.

பெற்றோர் மற்றும் ஆசிரியரின் அறிவுரைகள், நமது காதுகளுக்கு எட்டி இருக்காது. சிற்றின்பங்களான விளையாட்டு பொருட்கள், டிவி, சினிமா, சுற்றுலா, காதல், சாப்பாடு போன்றவற்றிலே நாட்டம் அதிகமாக இருந்திருக்கும். அதனை தாண்டிய வாழ்க்கை புரிதல் இருக்காது;இருக்கவும் முடியாது என்பதே உண்மை. மேற்கண்ட அனைத்துமே வாத மனநிலையாளனின் செயல்களாகும்.

இரண்டாம் நிலையில், பித்தம் தலைக்கேறுவதால் குடும்ப தலைவனாகி விடுகிறான். குடும்ப பொறுப்புகள் வந்து, முதல் நிலை செய்தவைகள் அனைத்துமே, ” யாதார்த்த நிலைக்கு அப்பாற்பட்டவை ” என்று புரிந்து கொள்கிறான். பொருளாதாரம் என்பது, முழுவதும் அந்த ஆண்/பெண்ணேயோ சார்ந்து உள்ளது. கொஞ்சம் அனுபவமும் புரிதலும் வந்து விடுவதால், முடிவுகளையும் எடுக்கிறான்/எடுக்கவும் முடியும். தன்னுடைய சுகங்களை தாண்டி குழந்தை/பெற்றோர்/கணவன்/மனைவி மீது அன்பு செலுத்தி, அவர்களுக்காகவே வாழ தொடங்கி விடுகிறான்.

புற சந்தோஷங்களான சினிமா, டிவி, சாப்பாடு, சுற்றுலா போன்றவற்றையெல்லாம் தியாகம் செய்து, குழந்தைகளின் சந்தோஷத்திற்காக, தனது கஷ்டங்களை கூட தாங்கி கொள்கிறான். ஒருவித தியாக நிலையோடு, அறிவு பூர்வமாகவும் அனுபவ பூர்வமாகவும் வாழ்வை கடக்கிறான். இவை அனைத்தும் பித்த மனநிலைக்கு ஒப்பானவை.

மூன்றாவது நிலை என்பது சற்று கடிமான/கொடுமையான வாழ்நிலை என்றால் மிகையில்லை. குழந்தைகள் மூலமாகவும்/தனது உழைப்பினால் பணம் வந்தாலும், மனம் அமைதியற்றே கிடக்கிறது. பொருளாதாரம் சீர் தூக்கி, பென்ஸ் காரில் போனாலும், கடந்த கால சந்தோஷங்களை போல் அல்லாமல், வேப்பம்பழமாய் கசக்கும். அதற்கு காரணமும் உண்டு.

கடந்த கால அனுபவம் மற்றும் அறிவினை, தனது பிள்ளைகளும்/பேர குழந்தைகளும் கேட்காததே முதற்காரணமாகும். அவையெல்லாம் நடைமுறை சாத்தியத்தங்களுக்கு அப்பாற்பட்டவை என்பதை புரிந்து கொள்வதில்லை. சிற்றின்பங்களுக்கு இடம் கொடுக்காமல், தத்துவங்களால் வாழ்வில் இறுதி நிலையை அடைந்து விடுவர். இவை கப மனநிலையோடு ஒப்பும்.

முதல் நிலை என்பது முழுவதும் நிகழ் கலத்தோடு ஒத்து வாழ்வதாக அமையும். கடந்தகாலத்தை முற்றிலும் புறக்கணிக்கும். இரண்டாம் நிலை என்பது நிகழ்காலத்தையும் கடந்தகாலத்தையும் சேர்த்தாகவே அமையும். மூன்றாவது நிலை என்பது முழுவதும் கடந்தகாலத்தை ஒத்தே அமையும். இதில் இரண்டாம் நிலை மட்டுமே உத்தமம். அதாவது பித்தத்தின் தன்மையே உச்சம்.


நான் இன்னும் முதல் நிலையே தாண்டல!!! அப்ப நீங்க ????

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Saturday, February 13, 2016

பணவீக்கமும் பொருளாதார கொள்கையும்

ஒவ்வொரு நாட்டின் பொருளாதார கொள்கையிலும், ஒரு கோட்பாடு உண்டு. அதில் முக்கியமானது பணாவீக்கம்(விலையேற்றம்). இந்த பணவீக்கம் என்பது நாட்டிற்கு நாடு மாறுபடும். இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு, அதிகபட்சமாக 5 சதவீதம் வரை இருக்கலாம். ஆனால் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், 2 சதவீதத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.

இன்னும் புரியம்படி சொல்கிறேன். உங்களிடம் 100 ரூபாய் இருக்கிறது. ஒரு பொருள் வாங்க கடைக்கு செல்கிறீர்கள். அந்த பொருள் 105 ரூபாய் என்றால், நண்பனிடம் 5 ரூபாய் கடன் வாங்கி, அந்த பொருளை வாங்கலாம். அதனால், உங்கள் பொருளாதாரமும் பாதிக்கப்படுவதில்லை ; நணபனின் பொருளாதாரமும் பாதிக்கப்படாது. மாறாக, உங்கள் இருவரின் வளர்ச்சிக்கும் உபயோகமாகும்.

எப்படியென்றால், நீங்கள் பெற்ற 5 ரூபாய்க்காக, சற்று அதிகமான உழைப்பை இட்டு, உங்கள் வருமானத்தை பெருக்குவீர்கள். உங்களிடம் கொடுத்த 5 ரூபாய் என்பது, நண்பனின் சேமிப்பாக மாறி விடும்.

அது போல், 5 சதவீதம் வரையிலான பணவீக்கம் என்பது பொருளாதார வளர்ச்சிக்கு நல்லது. அதாவது வேலைவாய்ப்புகள் உருவாகும்; தேவை அதிகமாகும்; நாட்டின் பொருளாதாரம் உயரும். இந்த நிலையென்பது விரலுகேற்ற வீக்கமாகவே இருக்கும்.

மாறாக, பணவீக்கம் 10-20 சதவீதமாக உயரும் போது, பொருளாதாரம் பாதிக்கப்படும். உங்கள் தகுதி மீறிய கடன், உங்களை கெட்ட வழியையே காண்பிக்கும். நாட்டிற்கு மட்டுமல்ல; வீட்டிற்கு பொருந்தும். ஆனால், நாம் இத்தகைய நிலையே அதிகமாக பின்பற்றுகிறோம் என்பது கண் கூடான உண்மை. தன்னிறைவு கலாச்சாரத்தை விட்டு, நுகர்வு கலாச்சாரத்திற்கு மாறி இருக்கிறோம். விரலை விட இரண்டு மடங்கு வீக்கத்தை உடல் தாங்குமா???

இது மாதிரியான நிலை, அமெரிக்காவிற்கு 2000 ல் ஏற்பட்டது. அமெரிக்கா முற்றிலும், நுகர்வு கலாச்சாரத்திற்கு உட்பட்டது. வங்கி கடன் மூலம், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கும் தன்மை கொண்ட நாடு. அதை குறிப்பிட்ட சதவீதத்தை விட அதிகமாகும் போது, வாங்கிய கடனை கட்ட முடியாமல், அமெரிக்க மக்கள் திணறீனர். அமெரிக்க மத்திய வங்கி திவலானது. பொருளாதார மந்தம் ஏற்பட்டது.

இத்தகைய நுகர்வு கலாச்சாரம், இந்தியாவில் ஊடுருவ விட்டது. தொழிற்துறை நிறுவனங்கள், சந்தை வழியிலான நுகர்வு கலாச்சாரத்தை புகுத்துகிறது. நுகர்வு கலாச்சாரம் என்பது முற்றிலும் தவறில்லை. ஆனால், நுகர்வின் தன்மை, நம்முடைய பொருளாதாரத்தில் 5-10 சதவீத்தை தாண்டாமல் இருந்தால் நல்லது. மாறாக, 50 சதவீதமாக இருந்தால், கடன் காரன் வீட்டின் வாசலில் நிற்பதை யாராலும் தவிர்க்க இயலாது.

இந்திய வங்கிகளிலும், வாரா கடன் அதிகமாகி வருகிறது. இத்தகைய நிகழ்வு, நுகர்வு கலாச்சாரத்தின் பின் விளைவே. இந்தியாவின் பொருளாதாரத்திற்கும், தனிமனித பொருளாதாரத்திற்கும் பெரிய வேறுபாடு இல்லை. செயல்பாட்டளவில் இரண்டும் ஒன்றே.

பொருளாதாரம் என்பது மனித வாழ்வியலுக்கு தேவை தான். அதை நானும் ஒத்து கொள்வேன்; பொருளாதாரம் மட்டுமே, மனித வாழ்வியலை சீர்படுத்தும் என்பது மூட்டாள் தனம்.

உங்களில் ஒருவன்
உங்களை போல்; ஒருவன்
வேதை குமார்