Sunday, September 21, 2014

அறிவுரைகள் இலவசம்

இங்கு அறிவுரைகள் இலவசமாக வழங்கப்படும் என்ற போர்டு மட்டும் தான் இல்லை. மற்றப்படி, அனைத்து வகையான இலவச ஆலோசனைகளை தர, பல மனிதர்கள் காத்து கொண்டு தான் இருக்கிறார்கள். டீக்கடையாகவோ, பொது மேடையாகவோ, வீட்டிலோ, டிவியிலோ, அல்லது நண்பர்கள் கூடும் இடங்களிலோ, இதில் எங்கு வேண்டுமானாலும் இலவச அறிவுரைகளை பெற்று கொள்ளலாம். அது மனநலம் பற்றியோ, உடல்நலம் பற்றியோ, வருமானம் பற்றியோ, தொழில் தொடங்குவது பற்றியோ, இப்படியாக பட்டியல் நீண்டு கொண்டு போகும். ஒவ்வொரு மனிதனும், தன்னுடைய சக மனிதனும் பல அறிவுரைகளை வழங்கி கொண்டே இருக்கிறான். அதற்கு வரைமுறை எல்லைகள் கிடையாது. இருக்கவும் போவதும் இல்லை.

அப்படி வழங்க வேண்டி அவசியம் தான் என்ன??? தன்னுடன் வாழும் சக மனிதனின், வாழ்வியல் துன்பத்தை நீக்க, தனக்கு தெரிந்த வழிமுறைகளை வழங்கி வருகிறான். அப்படி வழங்கப்படும் போது, ” தன்னால் முடிந்த உதவியை செய்து விட்டதாக மனதிற்குள் பெருமையும் கொள்கிறாள் “. அதுவொன்றும் பெரிய தவறல்ல; அது பெருமை பட வேண்டிய ஒன்று தான். மற்றவனுடைய துன்பத்திற்கு சிறு விடை காணும் அவனுடைய முயற்சி பாராட்டுக்குரியதே.

ஆனால், அவனால் வழங்கப்படுகின்ற அனைத்தும் மற்றவர்களால் ஏற்று கொள்ளப்படுகிறதா?? என்பதில் நிறைய வேறுபாடுகள் உண்டு. அனுபவம், வயது, கல்வி தகுதி மற்றும் சமூகத்தில் உள்ள நிலையை பொறுத்தும் மாறும். அதே போல், அவர் கூறும் அனைத்தும் உண்மையா?? அல்லது நடைமுறை சாத்தியமா? என்பதும் கொஞ்சம் கடினம் தான்.

ஆனால், இதையே தான் படித்தவர்கள், தனியாக பட்டம் பெற்று மருத்துவர்களாகவும், உளவியல் ஆலோசர்களாகவும், இஞ்சினியர்களாகவும், வக்கீல்களாகவும், பொருளாதார ஆலோசர்களாகவும் உள்ளனர். ஆனால் இவர்கள் வணிக நோக்கோடு செய்யும் வேலையை, பலர் இலவசமாக செய்வது போற்ற கூடியதாக உள்ளது. படித்தவர்களுக்கும், இலவச அறிவுரை வழங்குபவர்களுக்கும் உள்ள வேறுபாடுகளை இங்கு விவாதிக்க வேண்டாம்.

இதை தாண்டி, இன்னொரு விவாதத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. அது என்னவெனில், மற்றவருக்கு இலவச அறிவுரை சொல்லும் மனிதன், தன்னுடைய வாழ்வியலில் அனைத்து நிலைகளையும் கடைபிடிக்கிறானா?? என்பது தான். அவ்வாறு கடைபிடித்து பெரிய மாற்றங்களை அடைந்ததாக தெரியவில்லை. அப்படி கடைபிடித்து இருந்தால், அவனும் தன்னுடைய பிரச்சனையிலிருந்து எளிதாக விடுதலையாகி இருப்பான். அதன் பின்னால் இருக்கும் உளவியலையும் சற்று ஆராய வேண்டி உள்ளது. மற்றவருடைய பிரச்சனைக்கு, தெளிவாக அறிவுரை சொல்லுபவன், தன்னுடைய பிரச்சனையில் முடிவு எடுக்க பயப்படுகிறான். எதாவது தப்பாக நடந்து விடுமோ என்ற மனநிலை அவனுள் வந்து விடுகிறது. இது மனிதனின் எதார்த்த மனநிலையே.

இந்த மனநிலையை எப்படி எடுத்து கொள்வதெற்கு தெரியவில்லை. அப்படி அமைந்த சில உதாரணங்களையும் கூறலாம். ஒரு நண்பர், பல உளவியல் பிரச்சனைகள் உள்ளதாக சொன்னார். அவர் மேலும் ,” நான் பலபேருடைய பிரச்சனைகளை தீர்த்து வைத்து இருக்கிறேன். ஆனால், என்னுடைய பிரச்சனையை தீர்க்க வழி தெரியவில்லை…” என்றார்.
ஒருவர் சர்க்கரை வியாதிக்கு மருந்து வேண்டுமென்று, என்னிடம் வந்தார். பாரஸ்ட் ஆபிசராகவும் உள்ளதாகவும் கூறினார். அவருக்கு பல மூலிகைகளையும், அவற்றின் பயன்களையும் தெரியும் என்று சொன்னார். சர்க்கரை வியாதிக்கு என்ன மூலிகை சாப்பிட வேண்டுமென்று அவருக்கு தெரியும். ஆனாலும் 10 வருடமாக ஆங்கில மருத்துவம் தான் எடுத்து கொண்டு இருக்கிறார். அவருக்கு நான் எப்படி அறிவுரை சொல்வது?? இதெல்லாம், நான் கவனித்தவை. கவனிக்காமால் நிறைய சம்பவங்கள் உள்ளன.

இந்த கல் மோதிரம் போட்டா, கோடி கோடியாய் சாம்பாதிக்கலாம், வாஸ்து படி வீடு கட்டினாலும் செல்வம் கொழிக்கும், இந்த மந்திர தகட்டை கடையில் வைத்தால், வியாபாரம் கொழிக்கும் போன்ற சாம்பிரதாயங்களையும், மேற்கண்டவற்றுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது மனதில் கொஞ்சம் நகைப்பு தான் மிஞ்சம். இப்படி சாம்பிரதாயங்களை சொல்பவர்களும் , தன்னுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை அடைந்ததாக தெரியவில்லை.

இப்படியாக சக மனிதனின் துயரங்களை நீக்க முயலும் மனித தன்மை போற்றதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது. அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், அந்த நபருக்கு ஏற்றது தானா, அவர் அதை ஏற்று கொண்டு கடைப்பிடிப்பாரா என்பதை சிறிது கவனிக்கவும் மறந்து விடாதீர்கள். அதை போல் நீங்களும், அதை கடைபிடித்து ,மற்றவருக்கு கூறினால், அதன் மீதான நம்பிக்கை கூடும்.

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


Saturday, September 20, 2014

ஆபாசத்தின் பின்புலம் என்ன??

நேற்று தீபிகா படுகோனொவின் சில அசிங்கமான படங்களை, டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டது. அந்த படங்கள், அனைத்தும் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது. ஆனாலும் தீபிகா கோபப்பட, நாளிதழும் உடனே அந்த படங்களை நீக்கி விட்டது. அனைத்தும் நடிகை, நடிகர்களும் அவருடைய தைரியத்தை பாராட்டினார்கள். பெண்களுக்கு மரியாதை கொடுக்க தெரியாதா?? பெண்கள் என்றால் அவ்வளவு இலக்காரமா? …” என்று நாளிதழிடம் எதிர் கேள்விகளை தீபிகாவும், கேட்டிருந்தார்.

இந்த மாதிரியான புகைப்படங்கள், பத்திரிக்கைகளிலும் இணையங்களிலும் வருவது புதிதல்ல. பன்னொடு காலமாக நிகழ்ந்து வரும் நிகழ்வு தான். இதற்கு பத்திரிக்கைகளை குறை சொல்வதா? படிக்கும் பொது மக்களை குறை சொல்வதாஅப்படி உடை அணிந்து வரும் நடிகைகளை குறை சொல்வதா?? தெரியவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை கூறி கொள்கின்றனர்.

சினிமாவில் பெண்களை, பெரும்பாலும் கவர்ச்சி பொருளாகவே காட்டி வருகின்றனர். பெண்களை முன்னிறுத்தி வரும் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஹாலிவுட்டில் இருந்த கவர்ச்சி, இன்றும் பாலிவுட்,கோலிவுட் வரை வந்துவிட்டது. படத்திற்கு, அந்த கவர்ச்சி தேவை……” என்று இயக்குனரும், “ படத்தில், அந்த காட்சிக்கும் கவர்ச்சி தேவையென்பதால் நடித்தேன்…” என்று நடிகைகளும் கூறி வருவதை பத்திரிக்கை செய்திகளை படித்திருப்போம்.

பொது விழாக்களுக்கு செல்லும் நடிகைகள், நாகரிக உடைகளை அணிகிறார்களா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அங்கு கவர்ச்சி காட்ட வேண்டிய அவசியம் என்ன? சினிமாவில்  காட்சிக்கு வேண்டும் என்றால், பொது இடத்தில் கவர்ச்சியின் தேவையின் காரணம் என்ன?? தன்னை கவர்ச்சியாக காட்டி கொண்டால் மட்டுமே, சினிமாத்துறையிலும், மக்கள் முன்னாலும் நிலைத்து நிற்க முடியும் என்று தவறான புரிதலை நடிகைகள் கொண்டுள்ளதாக எண்ணுகிறேன். அந்த புரிதலுக்கு, இந்த சமூகமும் பெரிய காரணம் என்பதை யாராலும் மறுக்க இயலாது. அதற்கான பதிலை எங்கே தேடுவது??

நடிகைகளின் சினிமா பயணம் என்பது, சுமார் பத்தாண்டு தண்டினால் கூட பெரிய விஷயமாக உள்ளது. அதுவும் கொஞ்சமாவது கவர்ச்சி இருந்ததால், சினிமாத்துறையில் நீடிக்க முடியும். அதுவும் சம்பளம் என்பது நடிகர்களோடு ஒப்பிடும் போது குறைவு. பெரிய நடிகைகளாக இருந்தவர்கள் பலர், பிற்காலங்களில் கஷடப்பட்டவர்கள் பலர். இந்த விஷயத்தில், ஆணாதிக்கம் இருப்பதை மறுக்க இயலாது. 

சினிமாவிற்கு என்று ஒரு பக்கம் செய்தி வெளியிடுவதை பத்திரிக்கைகள் வழக்கமாக கொண்டுள்ளன. வார பத்திரிக்கை பெரும்பாலும் சினிமாவை கொண்டு எழுதி வருகின்றன. அந்த பத்திரிக்கை வாங்கும் மக்களும், சினிமா செய்திகளை முதலில் படிக்கிறார்கள். அவர்களிடையே ஒரு மனக்களிப்பை ஏற்படுத்த, கவர்ச்சியான  அட்டை படங்களையும், வெளியிடுகின்றன. மக்கள் அதை தான் எதிர்பார்க்கிறார்கள்…”  என்று பத்திரிக்கைகளும், ”  அவர்கள் போடுவதால் தான் பார்க்கிறேன்..:வெகு ஜன மக்களும் சப்பு கட்டு கட்டிக் கொண்டிருக்கின்றன. 

பண்பாடு மற்றும் கலாச்சாரம் என்று பெரிதாக போற்றும் இந்தியாவில், ஆபாசங்களுக்கும் குறைவில்லை. இந்தியா திருநாட்டினையே, பெண்ணாக கருதும் குடிமகன்களும், ஆபாசத்தை ரசிக்கவே செய்கின்றனர். தாயாயையும் தங்கையையும் பெரிதாக எண்ணும் மனிதனே, பாலியல் வன்புணர்களுக்கும் காரணமாகிறான். இந்த வேறுபாடே கொஞ்சம் விசித்திரமானது தான். ஆனால், அது தான் உண்மை.

என்னடா, இவன் எதைப்பற்றி பேச ஆரம்பித்து, வேறு எதையே பேசிகிட்டு இருக்கானேன்னு நினைக்கலாம்.  இவையெல்லாம், வேறு வேறு பகுதியாக தோன்றினாலும், அவற்றில் அடிப்படையில் சில காரண ஒற்றுமைகள் இருக்கின்றன.

சினிமாவின் கவர்ச்சியையும், பத்திரிக்கை ஆபாசத்தையும், ஆணாதிக்க சமூகத்தையும், பெண்களின் ஆடை சுதந்திரம் என்ற பெயரில் நடக்கும் கலாச்சார சீர்கேடுகளையையும் விட்டு விட்டு, மேற்கண்ட விவாதத்தை முன்னிறுத்தி செல்வது, காரணம் தேடாத கேள்வியாகி விடும்.

சினிமாவில் தேவையற்ற கவர்ச்சியையும் ஆபாசத்தையும் குறைக்க வேண்டும். பத்திரிக்கை களும் தன்னுடைய கருத்து சுதந்திரத்தின் அவசியத்தை புரிந்து கொள்ள வேண்டும். ஆண்களும், பெண்களின் மீதான
பார்வையை மாற்றி தாயாகவும் உடன் பிறப்பாகவும் பார்க்க வேண்டும். ஆணாதிக்க மனநிலையை மாற்ற வேண்டும். பெண்களும் நாகரிகத்தின் அளவுகோலை புரிந்து கொள்ள வேண்டும். அரை குறை ஆடை, என்னுடைய சுதந்திரம் என்ற தவறான புரிதலை மாற்ற வேண்டும். எல்லாவற்றிற்கு மேலாக, சமூகத்தின் அனைத்து நிலைகளும் அனைத்து வயதினருக்கும், பாலியல் கல்வி அவசியம் கற்பிக்க வேண்டும்

சமூகத்தில் ஒவ்வொரு நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம். பத்திரிக்கை மட்டும் குறை சொல்வது, மேலோட்டமான முடிவே தவிர, முடிவான முடிவல்ல.

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


என்னவளே அடி என்னவளே!!!

(அத்தை மகள் 12 வருடங்களுக்கு முன்னால், வெளிநாடு சென்று விட்டாள். இன்று அவள் தந்தையோடு விமானம் வந்து இறங்கிறாள். அந்த வருகையை பரிதவிப்போடு பார்த்திருக்கும் ஆடவனின் வரிகள் ….)

குறிஞ்சி பூவை போல் காத்திருக்கிறேன்
உன்னை காண
மணம் மண்ணில் கமழ
உந்தன் பரிசம் என்னை தவழ…..

பனிரெண்டு வருடங்கள் கூட
பஞ்சாய் பறந்தன
பரிதவிப்பு இல்லாமல்……
உந்தன் நினைவலையோடு….
யுகங்கள் கூட
நொடி பொழுதாய் சுற்றிற்று
போன நொடி வரை…….
இப்போது
யுக யுகமாய் சுழல்கிறது….
நியூட்டனின் விதி கூட புரிகிறது

பாவடை மறைத்த
கொலுசின்
மெல்லிசை கூட
இன்னும் மறையவில்லை
என்னிடமிருந்து….

குச்சி மிட்டாய்
சாப்பிட்ட இதழிலிருந்து
சாக்லேட் நீர் வழிந்த
முகம் கூட
இன்னும் மாறவில்லை
என் கண்ணிலிருந்து

உப்பு மூட்டை
சுமந்த வயதில் கூட
தடுக்கி விழுந்த போது
காயம் பட்ட கையில்
சிந்திய குருதிக்காக
விசும்பி அழுத
முகம் கூட
இன்னும் மறக்க நினைக்கவில்லை

நொண்டி விளையாட்டில்
நானும் நீயும்
மாறி மாறி
தொட்டு கொள்வோம்
இருவருக்கும்
கால் வலிக்க கூடாது என்பதற்காக…..

நினைவெல்லாம்
இனித்தாலும்…..
பிரிந்து சென்ற 
நொடி பொழுது மட்டும்
வேப்பங்பூவாய் கசத்தது……

கண்ணீர் சிந்திய கண்களையும்….
கை விரல்கள்
பிரிந்த பரிசங்களையும்….
நினைத்து
இன்று வரை
விம்புகிறேன்…..

மாடர்ன் மடந்தையாய்
வருவாய் என்றல்லவா
எண்ணி யிருந்தேன்!!!

உதட்டு சாயம் படிந்த
குறு புன்னகையோடு……
நாணம் பதிந்த
நடையோடு……
நெருப்பாய் ஒளி வீசும்
கண்களின் பார்வையை
என் மீதும்…….

உதடு அசையாமலே
உன் மனம்
என்னை ஆசையாய்
மச்சான் என்கிறது….
அதை இருவரும்
வெளிகாட்டி கொள்ளமலே
பகிர்ந்து கொள்கிறது………

எனக்கு பிடித்த
கத்திரி பூ நிற புடவையோடு
பவனி வந்து
உன் சம்பந்தத்தை
தெரிவித்ததை
என்னால் அறிய முடியாத என்ன!!!!
என்னவளே!!!!
அடி என்னவளே!!!

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


நாகரிகம் நல்லதா?

இரண்டு நாளைக்கு முன் ரோட்டில் கண்ட காட்சி, சற்று என்னை நிலை தடுமாற வைத்து விட்டது. நான் கண்ணை கசக்கி, மறுபடியும் பார்த்த போதும், அதே காட்சி தான். ஆம், நான் கண்ட காட்சி உண்மை தான். பொய் பிம்பம் இல்லை என்பது தெரியவே, சில நொடி பொழுதுகள் தேவைப்பட்டது. நான் வேதாரண்யத்தில் தானே இருக்கிறேன், சென்னையில் இல்லையே?? ”  என்ற கேள்வியை, மனசாட்சி அதனிடமே கேள்வி கேட்டு கொண்டது.

அப்படி என்ன காட்சி…… ஒரு பெண், மோட்டர் பைக்கில் கால் மேல் கால் போட்டு கொண்டு செல்கிறார்.. இந்த நிகழ்வை கண்ட உடன் உண்டான உள்ள குமுறலை என்னால் இப்படி தான் விவரிக்க முடிகிறது. அந்த பொன்னு ….எப்படி போனா உனக்கென்ன ???? ….” என்ற உங்கள் மன மொழியையும் என்னால் உணர முடிகிறது.

நாகரிக வளர்ச்சி என்ற வார்த்தைக்குள்ளே இதை அடக்கி விட முடியும். ஆனால், அதனுள் இருக்கும் சில மருத்துவ பாதகங்களை விளக்க வேண்டி உள்ளது.

பெரும்பாலான மேடைகளில், விருந்தினர்கள் அனைவரும், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருப்பதை பார்த்து இருப்போம். வேஷ்டி கட்டி இருந்தால் ,அப்படி உட்காருவது கடினம். அதனால், பாதி பேர் தப்பித்தார்கள். அப்படி உட்காரும் போது, முதுகு முள்ளெலும்பு வரிசையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அது போல், அப்படி உட்காரும் போது நேராக உட்காருவது கொஞ்சம் கஷ்டமான விஷயம், இதனால், முதுகுவலி போன்ற பிரச்சனைகள் எழலாம்.

இதைப்பற்றி ஹச். ஆர்(MBA- Human resource ) ஒருவரிடம் கேட்ட போது, கால் மேல் கால் போட்டு உட்காருவது நாகரித்தின் வெளிப்பாடு என்று சொன்னார். அதே சமயத்தில், கால் மேல் குதி கால் படுமாறு உட்காருவதும் தப்பு என்று சொன்னார்.

இன்றையும் நிலையில், கீல்ஸ் செருப்பு போடாத பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதனால் குதி கால் வலி வரும் என்று சொன்னாலும், யாரும் தயார இல்லை. மாடலிங் பண்ணுபவர்கள், தன்னுடைய உயரத்தை அதிகரிக்கவும், மாடனாக நடக்கவும் பயன்படுத்த ஆரம்பித்தது, இன்று சாதாரண பெண்மணியின் செருப்பாக மாறி விட்டது. முதுகு தண்டுவடத்தின் அமைப்பை மாற்றி, முதுகு வலியும் வரலாம்.

ஜீன்ஸ் பேண்ட் போட்டால், விந்தணுக்களின் எண்ணிக்கை குறையலாம் என்றும், பேண்ட் பாக்கெட்டில், கனமான பர்ஸ் வைத்தால், அதுவும் முதுகு வலியை உண்டு பண்ணலாம் என்றும், நம்முடைய வெப்பநிலைக்கும் மது தேவையில்லாததும் என்றும், சொன்னால் யாரும் கேட்க தயாரக இல்லை.
நாகரிகம் என்பது பண்பாட்டை அழிக்கிறது என்ற நிலை மாறி, உடல் நலனுக்கு பாதிப்பை உண்டாகும் என்ற நிலை வந்த விட்டது. நாகரிகத்தை போன்றுவதற்கு முன்னால், உங்கள் உடல்நலனை போற்றுங்கள்!!! அதுவே..உங்கள் நாகரிகத்தை வளர்க்கும்!!!

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


காதலை இப்படியும் சொல்லலாம்

பையன்: அம்மா! நேற்றைக்கு ஒரு ஜாதகம் புரோக்கர் கொடுத்தாரே, அத
சோசியர் கிட்ட பார்த்தியா???

அம்மா: பார்த்தாச்சு ! பார்த்தாச்சு!! நாலு பொருத்தம் தான் இருக்கு..
இந்த பொன்னு வேண்டாம்ன்னு சொல்லிட்டாரு….

பையன்: இரண்டு, நாளைக்கு முன்னாடி, மூணு ஜாதகம்
கொடுத்தாரே…..அது என்னாச்சு…….

அம்மா: அதுல ஒரு சாதகம் தான் பிடிபட்டுச்சு…. அதுவும் செவ்வாய்
தோஷம் கொஞ்சம் கூடுதல இருக்கு அதுனால அது
வேண்டாம்ன்னு சொல்லிடாரு……..

பையன்: சரி…. அண்ணனுக்கு எப்ப தான் கல்யாணம் நடக்குமா????

அம்மா: வர்ற தை மாசத்துல நடக்குன்னு சொல்றாருஇப்படி இரண்டு
வருடம் ஆகிடுச்சு!!!

பையன்: போன மாசம் நாடி ஜோதிடம் பார்க்க வைத்திஸ்வரன் போய்
இருந்தியே!! என்ன சொன்னாங்க……

அம்மா: கிழக்கு அல்லது வடக்கு திசையிலிருந்து பொன்னு
கிடைக்குமா…… அவங்களும் ஒரு வருஷத்தில கல்யாணம்
ஆகிடுன்னு சொல்றாங்க….

பையன்: அவன் சென்னையல பிரிய சுத்திகிட்டு இருக்கான்…. நீ தான்
அலைஞ்சு கிட்டு இருக்கா….

அம்மா: ஆமாம் பா!! அவன் ஜாலியாத இருக்கான்….. matrimony
போட்டாலும் இன்னும் சம்பளம் அதிகமாக
எதிர்ப்பார்க்கிறாங்க….. என்ன பண்றதுன்னு தெரியல

பையன்: அப்பா ….இருந்தா பிரச்சனையில்ல….. அவரும் கல்யாணம்
முடிவான உடனே சொல்லு வர்றேன் ,….சொல்லிடாரு.

அம்மா: அந்த மனுசன் !!! சிங்கப்பூர் இருந்துகிட்ட சொல்லிடுறாரு….
நான் அலையறது எனக்கு தான் தெரியும்…..

பையன்: நானும் ரொம்ப நாள சொல்லிகிட்டு இருக்கேன்…. ஜாதகம்
பார்க்காம கல்யாணம் பண்ணுன்னு நீ தான் கேட்க
மாட்டங்கிரா…..

அம்மா: ஆமாம் பா!! இது வரைக்கும் ஜாதகம் பார்க்கிறதுக்கு
மட்டுமே….. 20,000 ரூபாய்க்கு மேல செலவு பண்ணி
இருப்பேன்…… புரோக்கரும் 10,000 ரூபாய்க்கு மேல
வாங்கிட்டாரு பா!!!!

பையன்: நீ தான் கேட்க மாட்டங்கிர….. இப்ப உள்ள ஜோசியர்
எல்லா ஏமாத்திறாங்க!! ஒழுங்க சொல்றது இல்ல….
மறுபடியும் வந்த தானே அவனு பணம் சாம்பாதிக்க முடியும் ….
அதனால அப்படி சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க…..

அம்மா: அப்படியா ….அப்படியெல்லாம பண்றாங்கஎன்னால நம்ப
முடியல..

பையன்: வர வர புரேக்கரும் …. நமக்கு ஒத்துவராத ஜாதகமும் தராங்க
அம்மாஅப்ப தானே அவனுக்கு காசு கிடைக்கும்

அம்மா: ஆமாம் ….பா…. புரோக்கரும் ….சம்பந்தமில்லாத ஜாதகம்
நிறைய கொடுக்கிறாரு ……..என்ன பண்றதுன்னு தெரியல
…. எனக்கு தான் ரொம்ப
டென்ஷனா இருக்கு ….. அவனுக்கு கல்யாணம் பண்ணிட்டு
அடுத்து உனக்கு ஒரு கால்கட்டு போடணும்….

பையன்: அதுக்குல்லஎதுக்கு அம்மா அவசரப்படுறாமுதல்ல
அண்ணனுக்கு கல்யாணம் பண்ணு…. எனக்கு பொறுமையா
பார்த்துகலாம்….

அம்மா: இன்னும் ஜாதகமே புடிபடலஅதுக்கு அடுத்து, பெண் பார்க்க
போகணும்இன்னும் எவ்வளவு வேலை இருக்கு ….எனக்கு
நெனச்சாலே…. தலையை சுத்துற மாதிரி இருக்குது…..

பையன்: அதல்ல கவலைப்பாட்தேநான் தான் இருக்கேன்ல நான்
எல்லாத்தையும் பார்த்துகிறேன்…..நீ அண்ணி யாருன்னு
மட்டும் முடிவு பண்ணு
அப்புறம் எல்லாம் ஈசியா முடிச்சுடலாம்

அம்மா: இவனுக்கு பொன்னு பார்க்கிறதுக்கு மட்டுமே, 50,000 ரூபாய்
மேல ஆகிடும் போலஅது கூட பரவாயில்ல…. மனசுக்கு தான்
ரொம்ப கஷ்டமா இருக்குப்பா…. எதே கடவுள் புண்ணியத்துல
….நல்ல பொன்னா கிடைச்ச பரவாயில்ல….

பையன்: அதெல்லாம்அண்ணனோட நல்ல மனசுக்கு நல்ல
பொன்னு தான் கிடைக்கும்…. கவலைப்படாதே!!

அம்மா: ஒருத்தனுக்கே இப்படின்னு ….அடுத்து உன்னை நினைச்சா….
இப்பவே பயம் இருக்குப்பா..

பையன்: உங்க கிட்ட இதை பத்தி நானே பேசணும்ன்னு
நினைச்சிகிட்டு இருந்தேன்
..
அம்மா; என்னபா சொல்ன்னு நினைச்சுகிட்டு இருந்தா…. சொல்லுப்பா

பையன்: அது ஒண்ணும் இல்ல அம்மா…. இது மாதிரி கஷ்டப்பட்டு …..
அலைஞ்சு திரிஞ்சி பொண்ணு பார்க்கிற கஷ்டம் உங்களுக்கு
வேண்டாம்உங்க மருமகள ….நானே தேடி
கண்டுப்பிடிச்சுட்டேன் அம்மா….

(இதுக்கு அடுத்து நடக்கும்நிகழ்வுகளை ..உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்)

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||