பையன்: அம்மா! நேற்றைக்கு ஒரு ஜாதகம் புரோக்கர் கொடுத்தாரே, அத
சோசியர் கிட்ட பார்த்தியா???
அம்மா: பார்த்தாச்சு ! பார்த்தாச்சு!! நாலு பொருத்தம் தான் இருக்கு..
இந்த பொன்னு வேண்டாம்ன்னு சொல்லிட்டாரு….
பையன்: இரண்டு, நாளைக்கு முன்னாடி, மூணு ஜாதகம்
கொடுத்தாரே…..அது என்னாச்சு…….
அம்மா: அதுல ஒரு சாதகம் தான் பிடிபட்டுச்சு…. அதுவும் செவ்வாய்
தோஷம் கொஞ்சம் கூடுதல இருக்கு …அதுனால அது
வேண்டாம்ன்னு சொல்லிடாரு……..
பையன்: சரி…. அண்ணனுக்கு எப்ப தான்
கல்யாணம் நடக்குமா????
அம்மா: வர்ற தை மாசத்துல நடக்குன்னு சொல்றாரு… இப்படி இரண்டு
வருடம் ஆகிடுச்சு!!!
பையன்: போன மாசம் நாடி ஜோதிடம் பார்க்க வைத்திஸ்வரன் போய்
இருந்தியே!! என்ன சொன்னாங்க……
அம்மா: கிழக்கு அல்லது வடக்கு திசையிலிருந்து பொன்னு
கிடைக்குமா…… அவங்களும் ஒரு வருஷத்தில
கல்யாணம்
ஆகிடுன்னு சொல்றாங்க….
பையன்: அவன் சென்னையல பிரிய சுத்திகிட்டு இருக்கான்…. நீ தான்
அலைஞ்சு கிட்டு இருக்கா….
அம்மா: ஆமாம் பா!! அவன் ஜாலியாத இருக்கான்….. matrimony
போட்டாலும் இன்னும் சம்பளம் அதிகமாக
எதிர்ப்பார்க்கிறாங்க….. என்ன பண்றதுன்னு தெரியல…
பையன்: அப்பா ….இருந்தா பிரச்சனையில்ல….. அவரும் கல்யாணம்
முடிவான உடனே சொல்லு வர்றேன் ,….சொல்லிடாரு.
அம்மா: அந்த மனுசன் !!! சிங்கப்பூர் இருந்துகிட்ட சொல்லிடுறாரு….
நான் அலையறது …எனக்கு தான் தெரியும்…..
பையன்: நானும் ரொம்ப நாள சொல்லிகிட்டு இருக்கேன்…. ஜாதகம்
பார்க்காம கல்யாணம் பண்ணுன்னு நீ தான் கேட்க
மாட்டங்கிரா…..
அம்மா: ஆமாம் பா!! இது வரைக்கும் ஜாதகம் பார்க்கிறதுக்கு
மட்டுமே….. 20,000 ரூபாய்க்கு மேல
செலவு பண்ணி
இருப்பேன்…… புரோக்கரும் 10,000
ரூபாய்க்கு மேல
வாங்கிட்டாரு பா!!!!
பையன்: நீ தான் கேட்க மாட்டங்கிர….. இப்ப உள்ள ஜோசியர்
எல்லா ஏமாத்திறாங்க!! ஒழுங்க சொல்றது இல்ல….
மறுபடியும் வந்த தானே அவனு பணம் சாம்பாதிக்க முடியும் ….
அதனால அப்படி சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க…..
அம்மா: அப்படியா ….அப்படியெல்லாம பண்றாங்க… என்னால நம்ப
முடியல..
பையன்: வர வர புரேக்கரும் …. நமக்கு ஒத்துவராத ஜாதகமும் தராங்க
அம்மா… அப்ப தானே அவனுக்கு காசு
கிடைக்கும்…
அம்மா: ஆமாம் ….பா…. புரோக்கரும் ….சம்பந்தமில்லாத ஜாதகம்
நிறைய கொடுக்கிறாரு ……..என்ன பண்றதுன்னு தெரியல…
…. எனக்கு தான் ரொம்ப
டென்ஷனா இருக்கு …..
அவனுக்கு
கல்யாணம் பண்ணிட்டு…
அடுத்து உனக்கு ஒரு கால்கட்டு போடணும்….
பையன்: அதுக்குல்ல…
எதுக்கு அம்மா
அவசரப்படுறா… முதல்ல
அண்ணனுக்கு கல்யாணம் பண்ணு…. எனக்கு பொறுமையா
பார்த்துகலாம்….
அம்மா: இன்னும் ஜாதகமே புடிபடல… அதுக்கு அடுத்து,
பெண் பார்க்க
போகணும்… இன்னும் எவ்வளவு வேலை
இருக்கு ….எனக்கு
நெனச்சாலே…. தலையை சுத்துற மாதிரி
இருக்குது…..
பையன்: அதல்ல கவலைப்பாட்தே… நான் தான் இருக்கேன்ல …நான்
எல்லாத்தையும் பார்த்துகிறேன்…..நீ அண்ணி யாருன்னு
மட்டும் முடிவு பண்ணு
…அப்புறம் எல்லாம் ஈசியா
முடிச்சுடலாம்
அம்மா: இவனுக்கு பொன்னு பார்க்கிறதுக்கு மட்டுமே, 50,000 ரூபாய்
மேல ஆகிடும் போல…
அது கூட
பரவாயில்ல…. மனசுக்கு தான்
ரொம்ப கஷ்டமா இருக்குப்பா…. எதே கடவுள் புண்ணியத்துல
….நல்ல பொன்னா கிடைச்ச
பரவாயில்ல….
பையன்: அதெல்லாம்…
அண்ணனோட நல்ல
மனசுக்கு … நல்ல
பொன்னு தான் கிடைக்கும்…. கவலைப்படாதே!!
அம்மா: ஒருத்தனுக்கே இப்படின்னு ….அடுத்து உன்னை நினைச்சா….
இப்பவே பயம் இருக்குப்பா..
பையன்: உங்க கிட்ட …
இதை பத்தி நானே
பேசணும்ன்னு
நினைச்சிகிட்டு இருந்தேன்…
..
அம்மா; என்னபா சொல்ன்னு
நினைச்சுகிட்டு இருந்தா….
சொல்லுப்பா
பையன்: அது ஒண்ணும் இல்ல அம்மா…. இது மாதிரி கஷ்டப்பட்டு …..
அலைஞ்சு திரிஞ்சி பொண்ணு பார்க்கிற கஷ்டம் …உங்களுக்கு
வேண்டாம்… உங்க மருமகள ….நானே தேடி
கண்டுப்பிடிச்சுட்டேன் அம்மா….
(இதுக்கு அடுத்து நடக்கும்… நிகழ்வுகளை ..உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்)
|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||
No comments:
Post a Comment