Friday, May 31, 2019

Generalist vs specialist


பொது மக்கள் பார்வையில்.... அரசியலும், நிர்வாகமும் ஒன்றாகவே தெரியும். ஆனால் உற்று நோக்கினால் தான், அதன் வித்தியாசத்தை புரிந்து கொள்ள இயலும்.

ஒரு சிறந்த நிர்வாகி, ஒரு துறையில் நிபுத்துவணம் பெற்றவறாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இன்னும் சொல்ல போனால்...... கல்வி பெறாதவர் கூட சிறந்த நிர்வாகியாக இருக்க முடியும்.

உங்கள் ஊரில் எத்தனையோ, சிறியது முதல் பெரிய கடைகள்/நிறுவனங்கள் இருக்கும். அதன் முதலாளிகள் பலர், பள்ளிப்படிப்பை கூட தாண்டி இருக்க மாட்டார்கள்!!! வரலாறு நெடுகிலும், இதற்கான எடுத்து காட்டுகள் உள்ளது.

நிர்வாகத்தில் .... Generalist vs specialist என்ற மிகப்பெரிய விவாத களமே உள்ளது.



படித்து பாருங்கள் .. சில விஷயங்கள் புரியலாம்!!!

இந்தியாவை பொறுத்துவரை, நிர்வாகத்தை Secretariat, directorate என்று பிரித்து வைத்துள்ளனர்.

Secretariat- அமைச்சர்கள் பெயரளவிலான தலைவராகவும், செயலாளர்கள் உண்மையான தலைவராகவும் செயல்படுகிறார்கள். கொள்கை முடிவுகள் பெரும்பாலும் இங்கு எடுக்கப்படும்.

directorate - இதில் துறை சார்ந்த நிபுத்துவணம் பெற்றவர்களாக இருப்பார்கள். கொள்கை முடிவுகளை செயலபடுத்துவார்கள்.

இரண்டும் இணைந்து செயல்பாட்டால் நிர்வாகம் சிறப்பாக அமையும். Secretariat - Generalist வுடனும், directorate- specialist வுடனும் ஒப்பிட முடியும்.

நிர்வாகத்தை சரியாக புரிந்து கொள்ளுங்கள்!!! இரண்டாம் தர மக்களாக சிந்திக்காதீர்கள்.

- விவரம் தெரியாதவன்

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
 வேதை குமார்


Friday, May 24, 2019

தேர்தல் முடிவுகளும் புரிதல்களும்


மனிதன் அதிகளவு சிந்திக்க கூடியவன்(?). மனிதன் ஒரு விஷயத்தை நம்புவான்!!! அது சரியென்றே வாதிடுவான். அது தவறாக மாறும் போதும்….. தான் நம்பியதையே சரியென்று மீண்டும் வாதிடுவான்!!!! அதற்கான 1008 காரணங்களை கண்டுபிடித்து முட்டு கொடுப்பான். இது கூட ஒரு வகையில் நல்ல குணம் தான்!!! தன்னம்பிக்கையின் வெளிப்பாடு.

ஆனால் அதீத நம்பிக்கையாக இருக்கும் போது, மூட்டு கொடுப்பதில் தான் பிரச்சனை!!! தவறுகளை திருத்த முயலா நிலைமீண்டும் மீண்டும்நான் நம்புவதே சரியென்ற மனநிலை!!! “ கடைசியில் தோல்வியே மிஞ்சம்!!!! இது அனைவருக்குமான பொதுமனநிலை!!! (எனக்கும் கூட உண்டு)

இதற்கான சம கால உதாரணம்!!!! தேர்தல் முடிவுகளை தொடர்ந்து பகிரப்படும் கருத்துகள்!!!! வாக்களிப்பது தனிமனித சுதந்திரம்!!! யாருக்கு வாக்களிக்க விருப்பமில்லை(NOTA) என்பதையே, தனிமனித சுதந்திரமாக கருதும் காலத்தில்…… வாக்களித்தவரை சாதி, மதம், இனம், மொழி, படித்தவர்/படிக்காதவர் என்று வேறுபாடுகளை வைத்து சிறுமைப்படுத்துவது அதிகமாகி இருக்கிறது. இது பெரும் பத்திரிக்கையாளர் தொடங்கி படித்த அறிவாளிகள் வரை செய்கின்றனர்.

இதை பற்றி எழுத வேண்டாம் என்று தான் எண்ணியிருந்தேன். ஆனால், சமூகத்தை பற்றி புரிதலில்… .பகுத்தறிவாதிகள் அதிகம் இருப்பதாக சொல்லும் தமிழகத்தில் இவ்வறான புரிதல் நிலையா????

அதிலும் literacy rate, human development index எல்லாம் துணைக்கு இழுக்கிறார்கள். கடந்த ஆண்டுகளில் வோட்டிங் மிஷின்இந்த வருடம் கல்வியறிவு, மனித வள மேம்பாடு குறியீடு. அதை டெல்லி, சண்டிகர், ஹரியானா, ஆந்திரா, மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்த்து கொள்ளுங்கள்!!!!
நீங்கள் சொல்வதில் எவ்வளவு அபத்தங்கள் இருக்கிறது என்பதற்கு!!!!

இன்னொன்றையும் சேர்த்து புரிந்து கொள்ளுங்கள்!!! கடந்த 5 நாடாளுமன்ற தேர்தலில் வந்த முடிவுகளை, நீங்கள் சொன்ன கருத்துகளை சேர்த்து பாருங்கள்!!! இந்தியா மட்டுமல்ல!!! தமிழகத்தையும் சேர்த்து தான்!!! நகைப்புக்கு உரியதாக அமையும்!!!

தேர்தல் முடிவுகள் வெளிவந்தாகி விட்டது. தோல்வி குறித்து விவாதிப்பது அந்தந்த கட்சியின் பணி!!!! அதை விடுத்து, நீங்கள் நினைத்தற்கு எதிராக ஒட்டு போட்டுதற்கு எளனம் செய்தீர்கள் என்றால்…….. உங்களின் கல்வியறிவினை எவ்வகையில் புரிந்து கொள்வது???? அடுத்தவரை ஏளனம் செய்ததாக நினைத்து, நீங்களே உங்கள் மதிப்பை குறைத்து கொள்கிறீர்கள்!!!

- உங்கள் பார்வையில் முட்டாள்


உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
 வேதை குமார்


Friday, May 17, 2019

ஜனநாயகமும் கூட்டாட்சியும்


ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு, அந்த நாட்டின் முதன்மையானவர்(பிரதமர் அல்லது குடியரசு தலைவர்) என்பவர் மிக முக்கியமானவர். அந்த தலைவரின் பிரதிபிம்பமே, அந்நாட்டின் பிரதிபிம்பமாக கருதப்படும். அந்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறையே...... பாராளுமன்ற தேர்தல்!!!

ஒரு சாதாரண குடிமகன், யார் முதன்மையானவர் என்று முடிவு செய்ய இயலாது என்றாலும், மக்களின் எகோபித்த ஆதரவு பெற்ற ஒருவரே..... ஆட்சி கட்டிலில் அமைய வாய்ப்பு கிட்டும். அதுவே நாட்டிற்கு நல்லது!!!

அதிலும் இந்தியா போன்ற கூட்டாட்சி நாடுகளின் மாநில/மாகாண உரிமைகளையும் பேணி காப்பது போன்று ஆட்சி அமைய வேண்டும். நேரடியாக சொல்வதென்றால், தேசிய கட்சிகளும், மாநில/மாகாண கட்சிகளும் சேர்த்து ஆட்சி அமைக்க வேண்டும்.

மாறாக முழுவதும் தேசிய கட்சி ஆட்சி அமைத்தால், மாநில நலன்கள் புறக்கணிக்க வாய்ப்புகளும் அதிகம்!!! அதிகார குவிப்பு நடக்கும்!!! கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக அமையும்!!!

முழுவதும் மாநில/மாகாண கட்சிகள் மட்டும் சேர்த்து ஆட்சி அமைத்தால், அரசியலில் நிலைப்பு தன்மை இருக்காது. முக்கிய முடிவுகளை எடுக்க முடியாது. உலக அளவில் அந்நாட்டின் மதிப்பு குறைவாக மதிக்கப்படும்.

இதற்கெல்லாம் சிறந்த மாற்று........ தேசிய கட்சிகளும், மாநில/மாகாண கட்சிகளும் சேர்த்து ஆட்சி அமைக்கப்பட வேண்டும். அதுவும் 75;25 என்ற விகித்தில் இருப்பின் முழுமை பெறலாம்....

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
 வேதை குமார்

Thursday, May 9, 2019

திறமை அறிதலும், மதிப்பும்


அவனுக்கு knowledge சுத்தமாவே இல்ல….. எப்படித்தான் இந்த posting வந்தான்னு தெரியல….”

என் பிரண்டு…. செம talent ங்க….. ஆனா, recognition தான் கிடைக்கல…”

இந்த அவார்டு கொடுக்கிற அளவுக்கு, அவருக்கு என்ன திறமை இருக்கு ?..”

எங்க பெரியப்பா இசை துறையிலஎவ்வளவு பெரிய ஆளு தெரியுமா?? இவருக்கு அவார்டு கொடுக்காம,… இப்ப இருக்கிற புள்ள பூச்சிக்கெல்லாம் அவார்டு கொடுக்கிறாங்க!!!”

இப்படியாக பல சொல்லாடல்கள், பொது சமூகத்தில் உண்டு. பல மனிதர்கள் என்னிடம் சொல்லியதும் உண்டு. ஏன்…. நானே பலமுறை சொல்லியிருக்கிறேன். இவை அணைத்தும் உண்மையா??? என்று மல்லாக்க படுத்து யோசித்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது ?!?!?!?

மேற்கண்ட அனைத்தும், சுயத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ளப் படுகிறதே தவிர, பொது பார்வையின் புரிதலில் அல்ல!!!! சாலையின் இரு ஒரங்களில் பயணிக்கிறதே தவிர, உண்மை என்னும் நடு சாலையில் வருவதே இல்லை!!!

நமக்கு வேண்டியவர்/நண்பர்/உறவினர் என்பதனாலேயே, அவர் சிறிய செயல்களை செய்தாலே, மிகப்பெரிய செயலை செய்வது போன்ற பிம்பம் தோன்றும். ஆனால், பொது சமூகத்தில் வைத்து பார்க்கும் போது, அவருடைய செயல் சிறியதாகவும் இருக்கலாம்/ பெரியதாகவும் இருக்கலாம். ஒப்பிட்டு அளவில் பெரியதாகவும், சமூகத்திற்கு பயனுள்ளதாகவும் இருக்கும்பட்சத்தில், நம்முடைய புரிதலை சரியென்று ஒத்து கொள்ளலாம்.

மாறாக, ஒப்பிட்டு அளவில் சிறுமையாகவும், பொதுசமூகத்திற்கு எவ்வித பயனும் இல்லாமலும் இருப்பின், பொய் பிம்பமாகவே மட்டும் இருக்கும்….

இதே நேரத்தில், நமக்கு தெரியாதவராக இருப்பின்…. அவருடைய நற்செயல்கள் நமக்கு தெரியாது. நமக்கு தெரியாதனாலேயே, அவருடைய செயலை சிறுமைப்படுத்த ஆரம்பித்து விடுவோம்!!! மாறாக, அவருடைய செயலும் ஒப்பிட்டு அளவில், சிறுமையாக இருப்பின், நம்முடைய எண்ணத்தில் தவறில்லை!!!

மொத்தத்தில், ஒருவருடைய திறமையை, நம்முடைய கண்ணோடத்திலேயே பார்க்கிறோமே தவிர, பொது பார்வையிலிருந்து பார்ப்பதில்லை!!!!

ஒருவரை அங்கீகாரம் செய்வதில் பிரச்சனை எவ்வளவு இருக்கிறதோ….. அதே அளவிற்கு, அவரை புரிந்து கொள்வதில் இருக்கிறது!!!! அங்கீகாரங்கள் செயல் அடிப்படையில் நிர்ணயம் செய்யாமல், நம்முடைய புரிதல் அடிப்படையிலே முடிவு செய்யப்படுகிறது!!! இப்புரிதலை அறிவு சார் சமூகத்தின் விழ்ச்சியாகவே பார்க்கிறேன்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
 வேதை குமார்