இன்று 7 வது
ஐ. பி. எல் UAE தொடங்கிறது. சூதாட்டத்திற்கும், பணத்திற்கும், ஆபாசத்திற்கும் பெயர் பெற்ற ஐ. பி. எல் , சூதாட்ட இடமான UAE நடைபெறுவது காலத்தின் கட்டாயம் என்று சொல்லி
கொள்ள வேண்டியது தான்…………………….. விளையாட்டு என்ற உணர்வை மறக்க, மறுக்க செய்து
விட்டது. பணம் எப்போது உள்ளே வருகிறதோ, அப்போதே!!!
விளையாட்டின் தனித்துவம் மறைந்து விட்டது…
ஐ. பி. எல்
போட்டி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அதனை கொண்டு கால்பந்து, டென்னிஸ், இறகுபந்து போன்றவற்றிலும், ஐ. பி. எல் மாதிரியான போட்டிகளுக்கு
வித்திட்டது. இது மற்ற விளையாட்டின் மீது ஆர்வத்தை மக்களுக்கு ஏற்படுத்தியது
எனலாம்…… வரவேற்க வல்லது…
அதே நேரத்தில், மற்ற விளையாட்டின் மீதான பார்வையை மக்களும், அரசும் திருப்ப வேண்டும்.. கபடி, வில்வித்தை போன்றவற்றில் வெற்றி பெற்றவரை
வரவேற்க கூட ஆளில்லா வரலாறு பல உண்டு…
கிரிக்கெட்டில்
வெற்றி பெறுவர்கள், இதனை
முன்னின்று நடத்த வேண்டும் என நினைக்கிறேன்…பொது நல வாழ்வில் ஈடுபட வேண்டும்….. ஆனால், அவர்கள் கூட மற்றவற்றில் பணம் பார்க்க
நினைப்பது வேதனை…… இதற்கு ……சில நாட்கள் முன்னர் நடைபெற்ற கால்பந்து
ஏலமே உதாரணம்…. இன்னொரு முறை சாந்தியை செங்கல் சூலையில் காண
கூடாது என நினைக்கிறேன்……..
விளையாட்டை
விளையாட்டை ரசியுங்கள் தப்பில்லை …ஆனால்
வியபாரமாய் ரசிக்காதீர்கள்………
உங்களில்
ஒருவன்
உன்னை போல்
ஒருவன்
மரு.பெ.இரமேஷ்
குமார்