‘கதிரவன்’ வருகையிலே
‘தாமரை’ மலருக்காக காத்திருந்து
‘அரிவாளா’ல் கொய்ந்து
‘பம்பரம்’ விட்ட
திருடன் போலிஸ் விளையாடிய
சிறு வயது நினைவுகளுடன்
‘முரசு’ மேளம் கொட்டி
மாமன் மகளின் சடங்கிற்காக
வீட்டிற்கு செல்லுகையில்
தலை வாழை ‘இலை’யிலே
அசைவ உணவு
‘மாம்பழமா’ய் இனிக்க
மனம் ஆட்டு கிடாவாக துள்ள
ஓலை கட்டி…
தாமரையை
தலையில் சூடுகையில்….
‘கை’யால் மறைந்த
மஞ்சள் பூசிய முகத்தின்
உதட்டு ஓர புன்னகையில்
ஆயிரம்!!!! ஆயிரம் அர்த்தங்கள்
அதை சொல்ல வார்த்தை இல்லை…..
அவள் பெயரை தவிர…..
உங்களில்
ஒருவன்
உன்னை போல்
ஒருவன்
மரு.பெ.இரமேஷ்
குமார்
No comments:
Post a Comment