1. “தப்பி பிழைத்தல் விதி “ மிக முக்கியமானது. 1980
இருக்கும் சூழ்நிலை வேறு!!! 2020 இருக்கும் சூழ்நிலை வேறு!!! காலத்திற்கு ஏற்ப நம்மை
தகவமைத்து கொள்ள வேண்டும். இதை புரிந்து கொண்டால் மட்டும்… இவ்வுலகத்தில் வாழலாம்!!!
2. . பள்ளி
கல்வி மற்றும் உயர்கல்வி ஆகிய இரண்டிலும் எண்ணிக்கையை அடிப்படையில்(Quantity) தேவையான
அளவினை தமிழ்நாடு கடந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. தரம் (Quality) அடிப்படையிலான தேவையான பயணிக்க ஆரம்பிக்க
வேண்டும். இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுவதை விட்டு, மற்ற நாடுகளினை ஒப்பிடும்
நிலையினை அடைந்து விட்டோம்
3. . 1990
க்கு பிறகு உலகமயமாக்கலுக்கு பிறகு, இந்தியா சேவை துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தது.
அதிலும் தென் இந்திய மாநிலங்கள் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தது. மத்திய தர வர்க்க
அதிகம் கொண்ட தமிழ்நாட்டில், சேவை துறையை நோக்கி பயணிப்பது இயற்கையாக நடந்தது!!! ஆனால்
தேவையை விட அதிகமான மாணவர்களை ஈர்த்து….. தேக்க நிலை(வீக்கத்தினை) ஏற்படுத்தி விட்டது.
4. . இன்னும்
10 ஆண்டுகளில்… தமிழ்நாடு உயிர்கல்வி துறை மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்க நேரிடலாம்!!!
கல்லூரிகள் மூடல் நடக்கலாம்!!! Quantity தாண்டி Quality யோசித்தால் மட்டும் தக்க வைத்து
கொள்ள இயலாம்!!! வேலையில்லா திண்டாட்டம், குழந்தை பிறப்பு விகிதம் குறைவு போன்றவை முக்கிய
காரணங்களாக இருக்கும்
5. இன்றைய
சூழ்நிலையில், 7-10 % இருக்கும் வேலையில்லா திண்டாட்டம் … இன்னும் பத்தாண்டு ஆண்டுகளில்
20-30 % வரை கூட ஆகலாம்!!! மருத்துவர்கள் கூட தேவையை விட…. அதிகமாக உருவாக்கி வருகிறோம்!!!
உலக சுகாதார நிறுவனத்தின் தேவையை விட அதிகமாக மருத்துவர்களை உருவாக்கி வருவது நல்லதல்லது
என்றது தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சொன்ன கருத்தினை நினைவு கூறுகிறேன்.
6. . தமிழ்நாட்டில்
திறன் மிகு பணியாளர்களின் ( Skilled labour) தேவை அதிகமாக இருக்கிறது. கார்பெண்டர்கள்,
கொத்தனார், மெக்கானிக், எலெக்டிரியன் போன்ற திறன்மிகு பணியாளர்களின் சம்பளத்தை விட
டிகிரி படித்தவர்களின் சம்பளம் குறைவு!!! ஏனெனில் தேவையான இடத்திற்கு பணியாளர்களினை
உருவாக்க தவற விட்டு விட்டோம்!!!
7. மீண்டும் கூறுகிறேன்.. ” தப்பி பிழைத்தல் விதி ”மிக முக்கியமானது!!! கஷ்டப்படுவர்களினை கை கொடுத்து… தூக்கி விட வேண்டும் என்ற உண்மை ஒருபுறம்!!! கை கொடுக்கும் போது… தனிமனிதனின் முயற்சியையும் தன்னம்பிக்கையும் குறையும் என்ற மறுபுறமும் இருக்கிறது
8. விளம்பு
நிலை மக்களுக்கு, சூழ்நிலையை விட்டு வெளியேறுவதற்கு கல்வி என்ற கல்வி முக்கியம்!!!
கல்வியில் தனியார் மயம் மற்றும் போட்டி உலகிற்கு
ஏற்ப .. .கல்வி முறையை மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்!!! எத்தனை கல்வி முறை வந்தாலும்..
அதனை நடைமுறைப்படுவத்திலும், பயிற்றுமுறையில் மாற்றம் வராமல் எந்த மாற்றம் நடைபெறாது.
9. 10,12
வகுப்பு தேர்வில்… புத்தகத்தின் பின்பக்க வினாக்களில் இருந்து கேள்வி கேட்காமல், புத்தகத்தின்
உள்பகுதியில் கேட்கப்பட்ட போது … அதற்கு மதிப்பெண் அளிக்கப்பட வேண்டும் என்று ஆசிரியர்கள்
கூறியதாக தினசரி நாளிதழ் ஒன்று கட்டுரை எழுதியது!!! ஏமாற்றமே மிஞ்சியது.
10 10,12 வகுப்பு முடித்து வரும் மாணவர்களிடம்,
”அடுத்த என்ன படிக்கலாம் ? “ என்று கேட்டு பாருங்களேன்….மருத்துவம், பொறியியல்,கலை,
அறிவியல் தாண்டி பெரிதாக தெரியாது. இது கிராமப்புற மாணவர்கள் மட்டுமில்லாமல்…. நகரப்புற
மாணவர்களும் அடக்கம்!!! ஆசிரியர்களுக்கும் , பெற்றோர்களும் விதிவிக்கல்ல!!!
11. . எதிர்கால படிப்புகள் குறித்த தெளிவான புரிதல்களோடு…
ஒரு பட்டப்படிப்பு தேர்ந்தெடுத்தால் பிரச்சனையில்லை!!! சமூகம் கொடுக்கும் பிம்பம்/அழுத்தம்,
அறியாத மாணக்கர்கள், புரியாத பெற்றோர்கள், விளக்காத ஆசிரியர்கள் என திரும்ப திரும்ப
ஒரே குட்டையில் மீன் பிடித்து கொண்டு இருக்கிறார்கள். மருத்துவர் குறித்து பிம்பம்
..இந்த புள்ளியில் தொடங்கிறது. ஆனால் உண்மை என்பது வேறு!!!
12.. கல்வி என்பது தொடர் கற்றல்!!! அதை எத்தனை
பேர் புரிந்து கொள்கிறார்கள் என்று தெரியவில்லை!!! (அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்
) பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசியர்களின்
தேர்வு முறைகளில் மாற்றம் தேவை
13.. பட்ட படிப்பு முடித்த பிறகு…. அடுத்து என்ன
பண்ணலலாம்? என்பதில் கூட பல பேருக்கு தெளிவில்லை!!! அந்த புரிதல் கல்வி முறை அளிக்க
வில்லை!!! சரி… போட்டி தேர்வு எழுதலாம் என்றால் கூட…….. TRB, TNPSC தாண்டி யோசிப்பதில்லை!!!
அப்புறம் கூச்சல் வேறு!!
14. . போட்டி தேர்வுகள் சார்ந்து மூன்றாண்டுகளாக
பயணித்ததில் சொல்கிறேன். மானப்பாடம் தாண்டி… சற்று சிந்திக்கிற மாதிரி கேள்வி கேட்டாலே..
கடினம் என்கிறார்கள்!!! இதன் அடித்தளம்,…. பள்ளியில் ஆரம்பித்தது. பள்ளித்தேர்வு, போட்டித்தேர்வுகள்
உண்மையான திறமையை ஆய்வு செய்யுமா? என்று நீங்கள் கேட்கலாம்!!! மாற்று இருந்தால் சொல்லுங்கள்….
அரசுக்கு கோரிக்கை வைப்போம்!!!
15. நம்முடைய எண்ணங்கள்…. உயர்வாக இருக்கும்!!! எனக்கும் கூட ..பல நோக்கங்கள் உண்டு!!! அதனை நடைமுறை சாத்தியங்களோடு ஒப்பிட்டு புரிந்து கொள்வது முக்கியம்!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்