Friday, August 23, 2019

பள்ளி மாணவனும் இரு சக்கர வாகனமும்


இன்று காலை மருத்துவமனைக்கு செல்லும் போது கண்ட காட்சி, ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சிலருக்கு …. இக்காட்சி சதாரணமாக கூட தெரியலாம்!!! பல நேரங்களில் தவறுகளை செய்து பழகி விட்டமையால், கால போக்கினால் தவறு கூட சரியாக தோன்ற ஆரம்பித்து விடுகிறது.

அது வேற ஒன்றில்லை!!! தனியார் பள்ளி கூட மாணவர் ஒருவர், இருசக்கர வாகனத்தை செலுத்தினார். முதல் ஒருவர் செல்லும் போது சரியாக கவனிக்கவில்லை. இரண்டாவதாக…… மற்றொரு மாணவர் செல்லும் போது கவனித்தேன்!!! ஆம்தனியார் பள்ளி மாணவன்!!!

பள்ளிக்கூடம் படிக்கும் மாணவனுக்கு, 18 வயது நிரம்பியிருக்க வாய்ப்பில்லை!!! 18 வயது குறைவானவர்களுக்கு லைசன்ஸ் வழங்கப்படுவதில்லை. அப்படியிருக்கையில் இது எப்படி???

மோட்டர் வாகன சட்டம் 2019 திருத்தத்தின் படி…. சிறுவர் வாகனத்தினை செலுத்தினால், பெற்றோருக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கலாம். முன்பு தண்டதொகை மட்டுமே இருந்தது. இவ்வாறு சிறுவர்கள் வாகனம் செலுத்தும் போது வாகன விபத்துகள் அதிகமாக ஏற்படுகின்றது.

மேற்கண்ட நிகழ்விலிருந்து…. இரு செய்திகள் தெளிவாகிறது. ஒன்று சிறுவர்களிடம் வாகன செலுத்துவதை பெற்றோர் தடுப்பதில்லை. இரண்டு. பள்ளி நிர்வாகம் சிறுவர்கள் வாகனம் செலுத்துவதை கண்டு கொள்வதில்லை. இரண்டுமே சமூகத்திற்கு கெடுதல்!!!

ஏற்கனவே வாகன விபத்துகள் அதிகமாக நடக்கும் நிலையில், இது மாதிரியான நிகழ்வுகள் தவிர்ப்பது அவசியம்!!! மனித உயிர்கள் விலை மதிப்பில்லாதவை!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


Monday, August 19, 2019

மதுரை பயண அனுபவமும் சகுணமும்


நேற்றைய 24 மணி நேரம்……

அதிகாலை 2.50 மணி!!! அலாரம் அடிக்கிறது. ஆப் செய்து விட்டு மீண்டும் தூங்கி விட்டேன் (எப்படியும் 3 மணிக்கு அலாரம் அடிக்கும் என்ற நம்பிக்கையில் தான்). 10 நிமிட தூக்கத்தை கூட வீணாக்க கூடாதுல்ல!!! அதுதான்!!!

தீடீரென எடுத்த முடிவு தான்!!! மருத்துவ நண்பர்களுடன் சேர்த்து மதுரைக்கு பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தோம். மருத்துவ அலுவலர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் ஆயுஷ் காண்காட்சி என்று இரட்டை காரணங்கள் இருந்தன. மன்னார்குடி வரை இருசக்கர வாகனத்தில் பயணித்து….. பிறகு நான்கு சக்கர வாகனத்தில் செல்வதாக திட்டம்!!!!

நானும் இன்னொரு மருத்துவரும் இருசக்கர வாகனத்தில் பயணிக்க தொடங்கினோம். சிறிது தூரத்தில்…….. ஆந்தை ஒன்று சாலையில் அமர்ந்திருந்தது. பார்த்தவுடனே… “ சகுனமே நல்லாயிருக்கே?” என்று சர்கஸ்டிக்காக பேசினார். அப்படியா??? என்றேன். (எனக்கு இதை பற்றியெல்லாம் தெரியாது). காலை 11 மணிக்கெல்லாம் மதுரையை அடைந்தாயிற்று.

ஆயுஷ் கண்காட்சியை கண்டு களித்தோம்!!! சிறப்பான ஏற்பாடுகள், கண்காட்சி குழுவிற்கு பாராட்டுகள்!!! மருந்து கம்பெனியின் அரங்குகள், மூலிகை கண்காட்சி, மருந்து உபகரணங்கள் கண்காட்சி என கண்காட்சி அசத்தல்!!! ஜெய வெங்கடேஷ் சாரின் உழைப்பு தெரிகிறது. கடைசியாக…. மருந்து கருவிகள் செய்யும் ராகவன் சார் சந்தித்ததில் மகிழ்ச்சி!!! பல மூத்த மருத்துவர்களை பார்த்தில் சந்தோஷம்!!!

மதியம் சங்க கூட்டம் முடிந்து, மாலையில் கிளம்ப தயரானோம்!!! மழை பெய்ய ஆரம்பித்தது. ஆந்தை பார்த்த சகுனம் ஆரம்பித்து விட்டதோ?” என்று யோசனை வந்து சென்றது. காலம் செல்ல மழை அதிகமாகி விட்டது. இளையராஜா மெல்லிய இசை, கடிக்க முருக்கு, ஏசியின் குளிர் என உளகளிப்போடு மதுரையை விட்டு கிளம்பினோம்!!! மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க முடியவில்லை யொன்ற குறையோடு!!!

இரவு உணவு முடித்து….. மீண்டும் ஊருக்கு கிளம்புனோம்!! மறுபடியும் திருத்துறைப்பூண்டியில் கன மழை!!! ஒருபுறம் சந்தோஷமான இருந்தாலும், எப்படி வீட்டிற்கு செல்வது?? என்ற கேள்வியும் வராமல் இல்லை!!! ஆந்தை சகுனம் தான் காரணமோ???

இரண்டு மூன்று இடங்களில் நின்று, இரவு 12.30 மணிக்கு வீட்டிற்கு வந்தடைந்தேன்!!! வீட்டிற்கு அருகே….. நடு சாலையில் மற்றோரு ஆந்தை என்னை வரவேற்றது!!!

சகுனத்தில் நம்பிக்கையென்றாலும், நமக்கு கஷ்டம் வந்து விட்டதால், புத்தி பேதலித்து உண்மையென்று கூட தோன்றி விடுகிறது. மழை நல்லது யென்றாலும்… .நமகு பயணத்திற்கு தடை ஏற்படுத்துகிறது என்பதற்காக, ஆந்தையை கெட்ட சகுனத்தோடு இணைத்து விட்டோம்!!! இதே வீட்டில் இருந்தால் மழை சிறப்பாக வரவேற்றிருப்பேன்!!!

சூழ்நிலை ஒன்று தான்!!! பார்க்கும் பார்வைகள் தான் வேறு!!! மன புரிதல் வேறு!!! சகுன தடைகள் இயற்கையால் உருவாக்கப்படுவது அல்ல!!! மனித மூளைகளினால் ஏற்படுத்துவை!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


Sunday, August 11, 2019

போக்குவரத்து முன்னேற்றம்


உலக வாழ்வியல்..... மிக வேகமானது!!!! மிக குறுகிய காலத்தில் நடைபெறும் மாற்றங்கள் ஏராளம்!!! மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, சென்னைக்கு சென்றிருந்தேன். அதற்கு பிறகு…. கடந்த இரு வாரங்களில் சென்னைக்கு போகும் வாய்ப்பு கிட்டியது. சென்னைக்கு செல்லும் பேருந்துகளில் எவ்வளவு மாற்றம்??

உட்கார்ந்து செல்லும் நிலையிலிருந்து, சாய்ந்த நிலையில் உட்கார்ந்து செல்லும் நிலைக்கு பேருந்துகள் மாறின!!! அடுத்த நிலையானது படுக்கை வசதியான பேருந்துகளே அதிகம்!!!!

அது போல்பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகம். சின்ன சின்ன நகரங்களிலிருந்தும் பேருந்துகள் அதிகமாகி விட்டது. தாம்பரத்தில் பேருந்திற்காக சுமார் 1 மணி நேரம் காத்திருந்தேன். அந்த குறுகிய நேரத்தில் 100-150 பேருந்துகள் கடந்து சென்று விட்டன!!! வளர்ச்சி என்று எடுத்து கொள்வதா?? அல்லது அதிக வசதிகளை எதிர்பார்த்து சுற்றுப்புற சூழலை சீர்ழித்து கொண்டிருக்கிறமோ???? புரியவில்லை.

அரசு பேருந்துகள் இப்போது தான், படுக்கை வசதியை எட்டி பார்க்கின்றன. ஆனால் தனியார் பேருந்துகளில் சாய்ந்த இருக்கை நிலை அரிதாக காணப்படுகின்றன. தனியார் நிறுவனங்கள்…. எவ்வாறு காலத்திற்கு ஏற்றவாறு மிக வேகமாக மாற்றுகின்றன் என்று புரியவில்லை. தினமும் பேருந்துகள் முழுமையாகுவதில்லை!!! பல நேரங்களில் காலியாகவே செல்லுகின்றன!!!

நான்கு சக்கர வாகனங்களின் வருகை அதிகமான பிறகும், தனியார் ஆம்னி பேருந்துகளின் வளர்ச்சி மெச்சும் படியாகவே உள்ளது. வணிகம், வேலைவாய்ப்பு, சுற்றுலா என்று பல காரணங்களினால் தேவை இருக்கவே செய்கிறது.
முன்பெல்லாம் வெளியூர் பயணம் என்றால், புறப்படுவதே…… பெரிய நிகழ்வு போல் இருக்கும். ஆனால்இன்றோ…. கடையில் சென்று டீ குடிப்பது போல் ஆகி விட்டது.

ஆனால்விலைகளில் பல்வேறு மாற்றங்கள்!!! ஒரு ஊரிலிருந்து, ஒரே வசதி கொண்ட பேருந்துகளாக இருந்தாலும், 100-200 வரை வித்தியாசம் உள்ளது. இதை அரசு முறைப்படுத்துவது அவசியம்!!

ஒரு நாட்டின் உள்கட்டமைப்பில் போக்குவரத்து வசதி மிக முக்கியமானது. அந்த வகையில் இந்தியாவில் பயணியர் வாகன போக்குவரத்தின் பங்கு முக்கியமானதே!!! ஆனால்அவ்வளர்ச்சி மிக வேகமாக பயணிக்கும் போது அச்சம் கொள்வது தவிர்க்க முடியதாகி விடுகிறது!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


Saturday, August 10, 2019

முன்னாள் மாண்வர் சந்திப்பு


முதுநிலை சித்த மருத்துவம் படித்து கொண்டிருந்த தருணம்……. சீனியர் மருத்துவர்கள் சேர்த்து, ஒரு முன்னாள் மாணவர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தினர். எனக்கு….. அந்த நிகழ்விற்கு, செல்லுமளவிற்கு விருப்பமில்லை!!! முன்னாள் மாணவர் சந்திப்பெல்லாம் வேணுமா?? என்று யோசித்து விட்டு விட்டேன்!!!. நட்பை/பாசத்தை துறந்து விட்டதாக அறிவு சொல்லியது!!!!

அந்த நிகழ்வு கடந்து, சில மாதங்களுக்கு பிறகு……. அதன் நிழற்படங்கள் முகநூலில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனை பார்த்த சில மணித்துளிகளில் மனம் எதோ செய்தது!!! கண்ணீர் துளிகள் கூட வந்தது!!! என்னை நானே ஏமாற்றி கொண்டிருந்த தருணம் புரிந்தது!!!

அந்த தருணத்தில் முடிவு செய்திருந்தேன். அடுத்த முறை முன்னாள் மாணவர் சந்திப்பு நடந்தால்….. நிச்சயமாக கலந்து கொள்ள வேண்டும்!!! இந்த முறை சில தடங்கல்கள் இருந்த போதிலும் கலந்து கொண்டேன்.

ஆம்!!! கடந்த சனிக்கிழமையன்று(07.09.19)கல்லூரி நிர்வாகம் முன்னாள் மாணவர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இது குறித்த அறிவிப்பு வரும் போதே…. மனம் அகம் மகிழ்ந்திருந்தது.

வழக்கம் போல…. முதல் ஆளாய் நானும் தமிழ்குமரனும் கல்லூரிக்கு சென்றாயிற்று!!! சாய்ராம் கல்லூரியின் வளர்ச்சி பிரமிப்பு கொள்ளும் அளவிற்கு உள்ளது. நாம் படிக்கும் போதுஇதெல்லாம் இல்லையே?? என்ற மன புகைச்சலோடு சென்றேன்.

இதுவரை சாய்ராம் கல்லூரியிலிருந்துசுமார் 12 ஆண்டு மாண்வர்கள் வெளியேறி இருக்கிறார். அதில் முதல் பாதியில் உள்ளவர்களுக்கு, பின்பாதி மாணவர்களை அறிய முடியவில்லை!!! பின்பாதியில் உள்ளவர்களுக்கு முன்பாதியை அறிந்திருக்க இயலவில்லை!!! இந்த மாணவர் சந்திப்பை முன்பே நடந்திருந்தால், இதில் மாற்றம் நிகழ்ந்திருக்க வாய்ப்பு உண்டு!!!!

எனது வகுப்பில் இருந்து குறைவாக நண்பர்களே வந்திருந்தார். பல நண்பர்களை சந்தித்திலும், பேசுயதிலும் மகிழ்ச்சி!!! ஆசிரியர்கள் அனைவரும் சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி!!! அதே களிப்பு!!!! அதே நகைப்பு!!! பல சீனியர் மருத்துவர்களை எளிதாக கண்டு கொள்ள முடிந்தது. ஆனால் சூனியர் மருத்துவர்கள் அறிந்து கொள்ள கடினமாக இருந்ததுபல பேரை தெரியவில்லை!!!!

கல்லூரி ஆசிரியர்களின் வரவேற்பும், கவனிப்பும் மெய் சிலிர்க்க வைத்தது!!! உணவு உபசரிப்பு அதை விட சிறப்பு!!! மதிய உணவிற்கு பின்பு….. கல்லூரியை பார்வையிட்டோம்!!!

வகுப்புகளுக்கு சென்ற போது…. பல பழைய நினைவுகள் மனதில் வந்து போகின!!!
முதல் நாள் கல்லூரிக்கு சென்ற போது….. சற்று கால் தங்கியவாறே நடந்து சென்றேன். இரண்டு காரணங்கள்…. கல்லூரிக்கு செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு….. சிறுவிபத்து ஏற்பட்டுகாலில் சிராய்ப்பு!!!! மற்றொன்றுஅன்று தான் முதன் முதலில் ஷீ அணிந்தேன்!!! இவ்வாறாக முதன் நாளே நோயாளியாகவே உள் நுழைந்தேன்.

அதோடு டைபாய்டு சுரமும் சேர்ந்து கொண்டது. கல்லூரி உலகம் ஹோம் சீக் என்றது. அந்த தருணத்தில்…. வகுப்பு பாலிடெக்னிக் கல்லூரியிலிருந்து, புதிதாக கட்டப்பட்ட மருத்துவ கல்லூரியிற்கு மாற்றப்பட்டது. புதிய வகுப்பில் தனியாக உட்காரும் நிலைக்கு தள்ளப்பட்டேன்!!! மூன்று வருசம் இதே நிலை தான்!!!! சரி அதை விடுங்க!!!!

அடித்த மொக்கை ஜோக்!!! சந்தித்த கேலிகள்!!! வகுப்பில் தூங்கியது!!!! கல்வி சுற்றுலாக்கள்!!! மூலிகை கண்காட்சி ஏற்பாடு செய்தது!!! மருந்து செய் கூடம்!!! வகுப்பு தலைவனாக வாங்கிய திட்டுகள்!!! மருத்துவ பயிற்சியில் அடித்த லூட்டிகள்!!!! கவிதை, குவிஸ் போட்டி!!! கானா உலகநாதன் குழு பாடல்!!! என ஆட்டோகிராப் சேரன் போல மன நிழற்படம் விரிந்தது.

எதுவும் தெரியாத தத்தியாக நுழைந்த என்னை….. வாழ்க்கை தந்த வலிகள் ஏராளம்!!! ஆனால்அதனை தகர்க்க......என்னை…. நானே உணர வைத்தது ” …. இக்கல்லூரி தான்!!! சிரம் தாழ்ந்த நன்றிகள்!!!

மனித வாழ்க்கையில்…. நிகழ்காலத்தினை சந்தோஷப்படுத்துவதற்கு, கடந்த காலத்தின் நினைவுகளும், எதிர்காலத்தின் எதிர்ப்பார்ப்புகளும் மிக முக்கியமானவை!!! அந்த நினைவுகளை அசைப்போடுவதை விட….. அந்த காலத்தின் மனிதர்களோடு சந்தித்து…. அசைப்போடுவது என்பது எத்தனை கோடிகள் கொடுத்தாலும் கிடைக்காது!!!

இந்நிகழ்வினை ஏற்பாடு செய்த கல்லூரி நிர்வாகத்திற்கும்,.... முக்கியமாக முதல்வர் மதுகுமார் சார் அவர்களுக்கும், அனைத்தும் ஆசிரியர்களுக்கும் நன்றிகள் பல!!!

(முன்னாள் மாணவர்கள் சந்திப்பினை, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தினால் சிறப்பாக இருக்கும். மாறாக, ஆண்டுக்கு ஒருமுறை நடத்தினால் சுவராசியம் போய் விடும்)

படம் உதவி: தமிழ்குமரன்…. தனியாக அமைந்த அதே பெஞ்சில்….

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்