Sunday, September 30, 2018

கருத்தரங்கு ஆய்வு கட்டுரைகளும் , புத்தகமும்

நேற்றைய தினம்... கருத்தரங்கு முடிந்து ரயிலுக்காக, கால் நடை பயணமாக செல்லும் போது, ஒரு யோசனை தோன்றியது.

இது என்னுடைய யோசனை அல்ல!!! மற்ற துறையில் நடக்கும் முயற்சி தான்!!! காலத்தின் முக்கிய தேவை என்பதாலும் சொல்ல வேண்டியுள்ளது.

கருத்தரங்கில் பகிரப்பட்ட கட்டுரைகளை, முழு எழுத்து வடிவமாக்கி..... ஒரு முழு புத்தகமாக வெளியிடலாம்...

கருத்தரங்கிற்கு வர முடியாதவர்களுக்கும் பயன்படும். மேலும், ஒரே நேரத்தில் பல கட்டுரைகளை வாசிக்கப்படும் போது ,முழு சராம்சத்தை உள்வாங்க முடியவில்லை!! இதில் உள்ள அனைத்தும் கட்டுரைகளையோ அல்லது சிறப்பாக கருதும் 40 கட்டுரைகளையோ புத்தக வடிவாக்கினால், சித்த மருத்துவ வளர்ச்சிக்கு படிக்கல் என்பதில் ஐயமில்லை!!!

பொதுவாக கருத்துரங்குகளில் விழா மலர் வெளியிடப்பட்டாலும், அது Abstract ஆக இருக்கும்.

மிக சமீபத்தில் படித்த, தொல்லியல் சார்ந்த புத்தகமும், சித்தர்களின் பன்முக பார்வை என்ற புத்தகமும் .... இந்த மாதிரியானவை!!! இதில் பல நன்மைகள் இருப்பதாக கருதுகிறேன்.

ஒரே கட்டுரைகள் பல கருத்தரங்களில் சமர்பிக்கப்படுவது ஒழியும். கட்டுரைகளின் quality அதிகமாகும்.

புத்தகமாக வெளியிடும் பட்சத்தில், அது குறித்த விவாதங்களும், மாற்று கருத்துகளும் அதிகளவில் வெளிப்படும். இது சித்த மருத்துவ வளர்ச்சிக்கும் உதவும் !!!

சித்த மருத்துவத்தில், முறையான ஆவணப்படுத்துதல் குறைவு என்ற குற்றசாட்டு களையப்படும். சித்த மருத்துவ துறையினை தாண்டி, மற்ற துறையினருக்கு முக்கியமாக பயன்படும்.

எல்லாவற்றிக்கும் மேலான,.... இது ஒரு வியாபார யுக்தி!!! அரசிற்கு பணம் ஈட்டும் வழிமுறை!!! இல்லையேல், தனியார் பதிப்பகத்தின் மூலமாக தொகுப்பாசிரியர் கொண்டு செய்ய இயலும்!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்