Thursday, July 30, 2020

ஈசலும் ஒணானும் - உணவு சங்கிலி

 

காலை எழுந்து பார்த்த போது…. வீட்டில் முற்றத்தில் ஈசல் மொய்த்து கொண்டிருந்தது!! சந்தோஷம்!!

ஏற்கனவே ஒரு மாதமாக… .சராசரியான இடைவெளியில் மழை பெய்து கொண்டிருந்தது. கடந்த ஒரு வாரமாக…. தினமும் மழை பெய்து கொண்டிருக்கிறது. ஈசல் வந்தால்இன்னும் மழை பெய்யும் என்பார்கள்!!

எனக்கு நினைவு தெரிந்த வரை…. ஜீலை/ ஆகஸ்டில் பெரிதாக மழை பெய்ததில்லை!!! பெரும்பாலும் உச்ச பட்ச கோடையாய் இருக்கும்!!! நான் சார்ந்த பகுதி.. வடகிழக்கு பருவ காற்றினால் மட்டுமே மழை தரும்!!!

இவ்வாறு தொடர்ந்து மழை பெய்வது…. நல்லது என்றாலும்சில விஷயங்களை சிந்தித்து பார்க்க வேண்டியுள்ளது!!!! கோரோனாவினால்வாகன போக்குவரத்தும், தொழிற்சாலைகள் உற்பத்தி குறைந்தததால்இயற்கை தன் இயல்பு நிலையை அடைந்து விட்டதோ!!! என்று நினைக்க வேண்டியுள்ளது!!!

நிற்க….

குளித்து முடித்து…. மருத்துவமனைக்கு கிளம்பினேன்!!! சாலைகளில் ஈசல் குறைந்தபாடில்லை!! வாகனத்தை செலுத்துவது கூட கஷ்டமாக இருக்கும்!!!

ஆனால்

வழிநெடுகையிலும்….. சாலைகள் ஒணான்கள் அடிப்பட்டு இறந்து கிடந்தது. சுமார் 9 கிமீ தொலைவில்…. சுமார் 40-50 ஒணான்கள் இறந்து கிடந்திருக்கும். ஒணான் உணவிற்காக….. ஈசலை பிடித்து திங்க சாலைக்கு வரும் போது வாகனங்களில் அடிப்பட்டு இறந்து கிடைக்கிறது!!

பரிதாபம்!!! ஆறறிவு உடைய மனிதனே….. தூரித உணவினால் உடல்நிலைக்கு பாதிக்கப்படும் என்று அறிந்து உண்ணும் போது…. ஒணானுக்கு சிந்திக்கின்ற திறனா இருக்கிறது??? சாலையில் ஈசலை சாப்பிடும் போது….. “ அடிப்பட்டு இறக்க வாய்ப்புள்ளதுஎன்று நினைத்திக்குருமா என்ன??

 

உங்களில் ஒருவன்

உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Saturday, July 18, 2020

நீங்கள் வலது சாரியா? இடது சாரியா?

 

1. உங்கள் வீட்டில் இருக்கும் மனைவி, அக்கா/தங்கை என அனைவருக்கும் சமமான உரிமை அளித்தீர்களா??

 

2. சாதி, மதம், இனம் ஆகியவற்றை எதிர்க்கிறீர்களா?

 

3. உங்கள் வீட்டில் பணிபுரியும் பணியாட்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்குகிறீர்களா?

 

4. அதிகார பரவாக்கலை ஆதரிக்கிறீர்களா? அதிகாரம் ஒரே இடத்தில் குவிதலை எதிர்க்கிறீர்களா?

 

5. சமூகத்தில் காணப்படும் பிரச்சனைகளை தீர்க்க யோசனை அளித்தீர்களா?

 

6. முதலாளியாக… உங்களது உபரி வருமானத்தை தொழிலாளி பிரித்து அளிக்கிறீர்களா?

 

மேற்கண்ட கேள்விகளுக்கு ஆம்… என்று பதில் அளித்தால்… உங்களை இடது சாரி சிந்தனை உள்ளவராக கருதலாம்.. மாறாக… இல்லை என்றால்… நீங்கள் வலது சாரி சிந்தனை கொண்டவர்!!

 

மனிதன் இயற்கையாக …. வலது சாரி சிந்தனை கொண்டவன் தான்!!! சிலர் மட்டும்… .அதில் விலகி … பகுத்தறிவோடு… இடது சாரி சிந்தனை கொண்டதாக இருக்கின்றனர். அதாவது …இடது சாரி சிந்தனை என்பது மனித மூளைக்கு செயற்கையானது!!!!

 

உலக அளவில் 90 % வலது சாரி சிந்தனை!!! சிலர் இடது சாரி சிந்தனை கொண்டவர்களாக…… பொது உலகத்திற்கு நடிக்கின்றனர்!!! பலர் வலது சிந்தனை பற்றி அறியாமலே… வலது சாரியாக வாழ்கின்றனர்!!!

------------------

மேற்கண்டதில்… பலருக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம்!!! ஆராய்ந்து பார்த்தால் உண்மை புரியும்!!!

------------------------

சமூகம் மற்றும் பொருளாதார அடிப்படையில் ....... இடது சாரி, வலது சாரியாக பிரிக்கலாம்!!! பொருளாதார அடிப்படையில் .... இடது சாரி கொண்ட நாடு எதுவுமில்லை!!! சமூக பார்வை அடிப்படையிலே..... சில நாடுகள் இடது சாரி பார்வை உள்ளது!!!

 

உங்களில் ஒருவன்

உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Tuesday, July 14, 2020

கொரோனா -சித்த மருத்துவ விழிப்புணர்வு

 

1. கோரோனா வைரஸ் விஷயத்தில்… பொதுமக்கள் மத்தியில் சித்த மருத்துவம் மீதான விழிப்புணர்வு அதிகமாகி இருக்கிறது என்பது உண்மை!!

 

2. அரசும் …முழுமையாக ஏற்று கொண்டுள்ளது. அதனால்…. சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கும் மையங்களை…. சென்னை, பாளையங்கோட்டை, மதுரை, கோயமுத்தூர், திருவண்ணாமலை போன்ற இடங்களில் ஆரம்பித்துள்ளது. வருங்காலங்களில் ….. மாவட்டம் தோறும் மையங்கள் வரலாம்!!!

 

3. முதலில்… நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மருந்தாக அறிமுகம் செய்து…. பிறகு.. .நவீன மருந்துகளோடு இணைந்து அளிக்கும் மருந்தாக இருந்து… இப்போது முழுமையாக சித்த மருத்துவத்தினை மட்டும் வழங்கும் மையங்களை ஏற்படுத்தி உள்ளது.

 

4. அமைச்சர்கள், சுகாதார செயலாளர், மாவட்ட ஆட்சியர், மருத்துவ துறை சார்ந்த இணை இயக்குநர் வரை அனைத்து இடங்களிலும் …சித்த மருத்துவம் சார்ந்த புரிதல் அதிகமாகி இருக்கிறது. பராம்பரிய மருத்துவ முறைகளினை அதிகார மட்டத்தில் கொண்டு சேர்த்து இருக்கிறது!! வருங்காலத்தில் நல்ல பலனையும் எதிர்பார்க்கலாம்

 

5. உள்ளுணர்வு சார்ந்து சொல்வதென்றால்….. சித்த மருந்துகளை அளிக்கும் பட்சத்தில்.. நோயாளிகள் மருத்துவமனை இருக்கும் காலத்தினை நிச்சயம் குறைக்கலாம். (Recovery rate அதிகமாகும்)

 

6. நவீன மருத்துவர்களுக்கும் … சித்த மருத்துவம்/ ஆயுஷ் மருத்துவம் சார்ந்த புரிதலும் அதிகமாகி இருக்கிறது!! தனிபட்ட முறையில் பயன்படுத்துவதற்கு மருந்துகளை பெறுவதும் அதிகமாகி இருக்கிறது. மையங்களில் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யும் முறைகளில் ஒருங்கிணைப்பு நடக்கிறது.

 

7. பெரும்பாலும் சமூக மாற்றங்கள்… மெல்லிதாக நடக்கும்!! ஆனால் கொரோனா விஷயத்தில்…. மாற்றம் சற்று வேகமாக நடப்பதாக உணர்கிறேன்.

 

8.சில நவீன மருத்துவர்களிடமிருந்து கேள்விகள் வரலாம்!!! அனைவரும் உடனே ஏற்று கொள்வார்கள் என்று எதிர்பார்க்க கூடாது!! விமர்சனங்கள் அதிகமாக வருகிறது என்றால்… சித்த மருத்துவத்தினால்… அவர்கள் பாதிக்கபப்ட்டிருக்கிறார் என்று அர்த்தம்!!! புறம் தள்ளுங்கள்!!! செயல்படுவோம்!!!

 

9. நவீன மருத்துவர்களிடமிருந்து வரும் நியாமான விமர்சனங்களை ஏற்று கொள்வோம்!! அது நம்மை பலம் படுத்துவோம்!!! அபத்தமான வாதங்களை கண்டு கொள்ளாமல் கடந்து செல்வோம்!!!

 

10. பல இடங்களில் அறிவியல் பூர்வமாக ஆய்வு நடந்து வருகிறது….மகிழ்ச்சியான செய்தி!!! ஆனால் … இன்னும் அதிகப்படுத்த வேண்டும்!!! அதற்கு அரசும் … அறிவியலாளர்களின் ஒருங்கிணைப்பும் அவசியம்!!! ( ஆராய்ச்சிகளில் குறைப்பாடுகள் இருக்கலாம்!!! அதற்காக முற்றிலும் அறிவியலில் புறக்கணிப்பது நல்லதல்ல)

 

11. சித்த மருத்துவர்கள்… எவ்வித தயக்கமின்றி… கோரோனா வார்டுகளில் பணியாற்றுவது சந்தோஷம்!!! மைய நீரோட்டதோடு இணையும் வாய்ப்பினை தவற விட கூடாது!!!

 

12. தமிழ்நாடு மட்டுமின்றி….. சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் பிரிவுகளில் மூலமாக மற்ற மாநிலங்களிலும்…… தலைநகரமான டெல்லி வரைக்கும் கொண்டு சேர்ந்திருக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்

 

உங்களில் ஒருவன்

உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

கோரோனா - சில அவதானிப்புகள்- ஜீலை 2020

 

1.கடந்த வாரம்…. கோரோனாவின் பாதிப்பு குறைவாக இருந்த மாதிரி தெரிந்தது. ஆனால் திரும்பவும் எண்ணிக்கை அதிகமாக தொடங்கி இருக்கிறது. அதிலும் சென்னையில் குறைந்து…. மாநகரினை சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிகமாகி வருகின்றது. சென்னை மக்களின் ஏற்பட்ட விழிப்புணர்வும், மற்ற மாவட்டங்களுக்கு நடந்த இடம் பெயர்வு காரணமாக இருக்கலாம்.

 

2. குக்கிராமங்களிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகமாகிறது. அதிலும் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும்…. (என் காதுகளுக்கு எட்டியவரையே) 5 கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

3. அதே போல்…….. முன்கள பணியாளர்களின் பாதிப்பும் குறைந்தபாடில்லை!! மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர், காவற்துறை நண்பர்கள் என அதிகமாகி வருவது நல்லதல்ல!!! குறிகுணங்கற்ற நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போது… முன்கள பணியாளர்களின் பாதிப்பு அதிகம் என்றால், குறிகுணங்கள் இருந்தால்… மருத்துவ கட்டமைப்பு பெரியளவில் பாதிக்கப்பட்டிருக்கலாம்!!

 

4. கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மீதான….. சமூக புறக்கணிப்பு குறைந்தபாடில்லை!!! குற்றவாளிகளை போல் பார்க்கின்றனர்!!! சமீபத்தில் மருத்துவ நண்பருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதற்காக குடியிருந்த வாடகை வீட்டினை காலி செய்ய சொல்லி வலியுறுத்தை வலியுடன் பகிர்ந்து கொண்டார். (வீட்டின் உரிமையாளர்.. அரசு ஊழியர் ) இதற்காகவே… பல மருத்துவமனை பணியாளர்கள் பரிசோதனை செய்வதே தயங்கும் நிலைக்கு சென்று விட்டனர்.

 

5. மருத்துவமனையில் பணி செய்கிறார் என்பதற்காகவே…. சமூகத்தில் மெல்லிய புறக்கணிப்பும் நடக்கிறது.

 

6. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் … சிலருக்கு… யார் மூலம் தொற்று ஏற்பட்டது என்று கண்டறியவது கடினமாக உள்ளது. அதனால்… பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வந்தாலோ… அல்லது… பாதிக்கப்பட்டவருக்கு தொடர்பில் இருந்தால்… நீங்களவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்வது நலம்!!!

 

7. சமீபத்தில்… உலக சுகாதார மையம் … கோரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவும் என்று கூறியிருக்கிறது. அதாவது எச்சில் துளிகள்/சுவாச துளிகள் காற்றில் மிதந்து… அருகிலுள்ள பொருட்களில் இருக்கும். அதனை தொட்டு… முகத்தில் கை வைப்பதனால் பரவும். ஆதலால்… கை கழுவுதல் அவசியம்!!! முகத்தில் கை வைப்பதை தவிர்க்கவும்!!

 

8. குறிகுணங்கற்று .... மருத்துவமனையில் நோயாளிகளாக தங்கியிருப்பது மனித சமூகத்திற்கு புதிது!!! குறிகுணங்கள் இருந்தால் கூட…. அதில் குறித்த வலிகளோடு மருத்துவமனையோடு கடந்து விடும். ஆனால் ….குறிகுணங்கற்ற நிலையில் சமூக புறக்கணிப்பு சேர்ந்து கொள்ளும் போது …. உளவியல் ரீதியாக மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் தான்… சிலர் தற்கொலை செய்து கொண்டனர்

 

9.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு……. பாதி பேர் மட்டும் முதல் வாரத்திலே ….Negative ஆகி வெளியேறுகின்றனர். ஆனால்… பலருக்கு இரண்டாவது… மூன்றாவது பரிசோதனையில் கூட .,… Positive வருகின்றது.

 

10. ”எனக்கு தான் எந்த பிரச்சனையில்லையே… நான் வீட்டில் போய் தனியாக இருந்து கொள்கிறேன்” என்று கூறுபவர்களும் இருக்கின்றனர். ஆனால் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுபவர்களுக்கு ஏற்ற சூழ்நிலையும், புரிதலும் பொதுமக்களுக்கு இருக்கிறதா? என்று தெரியவில்லை.

 

11. குறிகுணங்களற்று இருப்பவர்களுக்காகவே… அரசு பல இடங்களில் COVID CARE CENTRE அமைத்து உள்ளது.

 

12 .கடந்த 4 மாதங்களாக…. களத்தில் நின்று பணியாற்றும் மருத்துவ துறை, காவற் துறை, உள்ளாட்சி துறை, வருவாய் துறை ஆகியோருக்கு வணக்கங்களும்… நன்றிகளும்… தாங்களை பற்றி கவலையில்லாமல்…. மக்களுக்காக பணியாற்றி கொண்டிருக்கின்றனர்.

 

13. அதிலும்……. மருத்துவமனையில் பணியாற்றும் கீழ்நிலை பணியாளார்களின் பணி நிச்சயமாக பாராட்ட வேண்டியது உண்மை!!

 

உங்களில் ஒருவன்

உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Sunday, July 12, 2020

கோரோனாவிற்கு சித்த மருத்துவம்- நவீன மருத்துவர்களுக்கு எதிர்வினை

 

கோரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் Mild moderate பாதிப்புகளுக்கு... எந்த மருத்துவமும் தேவையில்லை!!! அதற்கு மருந்தில்லாமல்... தானாகவே சரியாகும்

அப்படியிருக்கையில்... சித்த மருத்துவம் அளித்து குணமாகும் என்று சொல்வது சரியன்று...... அது Self -limiting disease ” என்கின்றனர் நவீன மருத்துவர்கள்
-----------------------

நவீன மருத்துவம் சார்ந்து படித்தவன் என்ற முறையில்…….. வைரஸ் நோய்கள் பெரும்பாலும் Self -limiting disease என்று தெரியும். ஆனால் அதற்காக மருந்துகள் தேவையில்லை என்று அர்த்தம் கிடையாது.
----------------------------

சரிஉங்களது வாக்கின் அடிப்படையில் மருந்தே தேவையில்லை என்றால், Azithromycin, Oseltamavir/Remdesivr, Paracetamol போன்ற மருந்துகள் எதற்கு??? மருத்துவமனையில் மருந்தில்லாமல்உணவுகளை மட்டும் அளித்து வீட்டிற்கு அனுப்பி வைக்கலாமே?

சித்த மருந்துகள் வெறும் Placebo தான்என்று நீங்கள் கூறினால் , Azithromycin, Oseltamavir/Remdesivr, Paracetamol போன்ற மருந்துகளும் Placebo தான் போலும்!!! விலை அடிப்படையில் சித்த மருந்துகள் விலை குறைவு தான்!!!

-------------------------------

சித்த மருந்துகள் அறிவியல் ஆதாரமற்றவை!!! அதனால் ஏற்று கொள்ள கூடியதல்ல!! என்றீர்கள். இப்போது வழங்கப்படும் மருந்துகள் எங்கு ஆய்வு செய்து வழங்கினீர்கள்????(MEURI Guideliness அடிப்படையில் தானே வழங்கிறீர்கள்) நீங்களும் அனுபவத்தில் அடிப்படையிலும், குறிகுணங்கள் அடிப்படையிலும் சிலவற்றை வழங்குகிறீர்கள்!! அதே தான் சித்த மருத்துவ முறையில்……..

------------

ஆரம்ப காலத்தில் கொரோனாவிற்கு சித்த மருத்துவத்திற்கு மருந்து இல்லை என்றீர்கள்!!! இப்போது Mild moderate பாதிப்புகளுக்கு, மருத்துவ குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை வழங்குகிறோம்!!! அதிலும் நல்ல பலன்களை தர ஆரம்பித்து இருக்கிறது…..

---------------------

ஆங்கில மருத்துவத்தில் தான்தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகளை குணமாக்கி அனுப்புகிறோம்…… ஆனால்நாங்கள் எப்போதாவது…… பெருமையாக எடுத்து கொண்டோமா??? என்கிறீர்கள்.

முதலில்சித்த மருத்துவத்தில் மருந்து இல்லை என்றீர்கள்பின்னர்.. ஆங்கில மருத்துவம் துணையில்லாமல் குணமாக்கிய பிறகு…… ”சித்த மருத்துவத்தினால் குணமாக்கிய பிறகு…. சித்த மருத்துவத்தினால் குணமாக்கினோம்!!! என்று அறிவிப்பதில் என்ன தவறு?? என்று தெரியவில்லை….

வருங்காலங்களில் வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில்…. தீவீர நோய் நிலைகளினையும் குணப்படுத்த முயற்சிப்போம்!!!

---------

நவீன மருத்துவ உலகிற்கு… ” சித்த மருத்துவத்தினாலும் குணமாகும்என்பது இருப்பினை தெரிவிக்கும்/ குணமாக்கியதை அறிவிக்கும் யுத்தியே!!!!!!

மற்றபடி மருத்துவ முறைகளுக்குள் சண்டையிட்டு கொள்ளும் தளம் அல்ல!!!

 

உங்களில் ஒருவன்

உங்களை போல் ஒருவன்

வேதை குமார்