Tuesday, July 14, 2020

கொரோனா -சித்த மருத்துவ விழிப்புணர்வு

 

1. கோரோனா வைரஸ் விஷயத்தில்… பொதுமக்கள் மத்தியில் சித்த மருத்துவம் மீதான விழிப்புணர்வு அதிகமாகி இருக்கிறது என்பது உண்மை!!

 

2. அரசும் …முழுமையாக ஏற்று கொண்டுள்ளது. அதனால்…. சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கும் மையங்களை…. சென்னை, பாளையங்கோட்டை, மதுரை, கோயமுத்தூர், திருவண்ணாமலை போன்ற இடங்களில் ஆரம்பித்துள்ளது. வருங்காலங்களில் ….. மாவட்டம் தோறும் மையங்கள் வரலாம்!!!

 

3. முதலில்… நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மருந்தாக அறிமுகம் செய்து…. பிறகு.. .நவீன மருந்துகளோடு இணைந்து அளிக்கும் மருந்தாக இருந்து… இப்போது முழுமையாக சித்த மருத்துவத்தினை மட்டும் வழங்கும் மையங்களை ஏற்படுத்தி உள்ளது.

 

4. அமைச்சர்கள், சுகாதார செயலாளர், மாவட்ட ஆட்சியர், மருத்துவ துறை சார்ந்த இணை இயக்குநர் வரை அனைத்து இடங்களிலும் …சித்த மருத்துவம் சார்ந்த புரிதல் அதிகமாகி இருக்கிறது. பராம்பரிய மருத்துவ முறைகளினை அதிகார மட்டத்தில் கொண்டு சேர்த்து இருக்கிறது!! வருங்காலத்தில் நல்ல பலனையும் எதிர்பார்க்கலாம்

 

5. உள்ளுணர்வு சார்ந்து சொல்வதென்றால்….. சித்த மருந்துகளை அளிக்கும் பட்சத்தில்.. நோயாளிகள் மருத்துவமனை இருக்கும் காலத்தினை நிச்சயம் குறைக்கலாம். (Recovery rate அதிகமாகும்)

 

6. நவீன மருத்துவர்களுக்கும் … சித்த மருத்துவம்/ ஆயுஷ் மருத்துவம் சார்ந்த புரிதலும் அதிகமாகி இருக்கிறது!! தனிபட்ட முறையில் பயன்படுத்துவதற்கு மருந்துகளை பெறுவதும் அதிகமாகி இருக்கிறது. மையங்களில் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யும் முறைகளில் ஒருங்கிணைப்பு நடக்கிறது.

 

7. பெரும்பாலும் சமூக மாற்றங்கள்… மெல்லிதாக நடக்கும்!! ஆனால் கொரோனா விஷயத்தில்…. மாற்றம் சற்று வேகமாக நடப்பதாக உணர்கிறேன்.

 

8.சில நவீன மருத்துவர்களிடமிருந்து கேள்விகள் வரலாம்!!! அனைவரும் உடனே ஏற்று கொள்வார்கள் என்று எதிர்பார்க்க கூடாது!! விமர்சனங்கள் அதிகமாக வருகிறது என்றால்… சித்த மருத்துவத்தினால்… அவர்கள் பாதிக்கபப்ட்டிருக்கிறார் என்று அர்த்தம்!!! புறம் தள்ளுங்கள்!!! செயல்படுவோம்!!!

 

9. நவீன மருத்துவர்களிடமிருந்து வரும் நியாமான விமர்சனங்களை ஏற்று கொள்வோம்!! அது நம்மை பலம் படுத்துவோம்!!! அபத்தமான வாதங்களை கண்டு கொள்ளாமல் கடந்து செல்வோம்!!!

 

10. பல இடங்களில் அறிவியல் பூர்வமாக ஆய்வு நடந்து வருகிறது….மகிழ்ச்சியான செய்தி!!! ஆனால் … இன்னும் அதிகப்படுத்த வேண்டும்!!! அதற்கு அரசும் … அறிவியலாளர்களின் ஒருங்கிணைப்பும் அவசியம்!!! ( ஆராய்ச்சிகளில் குறைப்பாடுகள் இருக்கலாம்!!! அதற்காக முற்றிலும் அறிவியலில் புறக்கணிப்பது நல்லதல்ல)

 

11. சித்த மருத்துவர்கள்… எவ்வித தயக்கமின்றி… கோரோனா வார்டுகளில் பணியாற்றுவது சந்தோஷம்!!! மைய நீரோட்டதோடு இணையும் வாய்ப்பினை தவற விட கூடாது!!!

 

12. தமிழ்நாடு மட்டுமின்றி….. சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் பிரிவுகளில் மூலமாக மற்ற மாநிலங்களிலும்…… தலைநகரமான டெல்லி வரைக்கும் கொண்டு சேர்ந்திருக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்

 

உங்களில் ஒருவன்

உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

No comments:

Post a Comment