காலை எழுந்து பார்த்த போது…. வீட்டில் முற்றத்தில் ஈசல் மொய்த்து கொண்டிருந்தது!! சந்தோஷம்!!
ஏற்கனவே ஒரு மாதமாக… .சராசரியான இடைவெளியில் மழை பெய்து கொண்டிருந்தது. கடந்த ஒரு வாரமாக…. தினமும் மழை பெய்து கொண்டிருக்கிறது. ஈசல் வந்தால்… இன்னும் மழை பெய்யும் என்பார்கள்!!
எனக்கு நினைவு தெரிந்த வரை…. ஜீலை/ ஆகஸ்டில் பெரிதாக மழை பெய்ததில்லை!!!
பெரும்பாலும் உச்ச பட்ச கோடையாய் இருக்கும்!!!
நான் சார்ந்த பகுதி.. வடகிழக்கு பருவ காற்றினால் மட்டுமே மழை தரும்!!!
இவ்வாறு தொடர்ந்து மழை பெய்வது…. நல்லது என்றாலும்… சில விஷயங்களை சிந்தித்து பார்க்க வேண்டியுள்ளது!!!! கோரோனாவினால்… வாகன போக்குவரத்தும், தொழிற்சாலைகள் உற்பத்தி குறைந்தததால்… இயற்கை தன் இயல்பு நிலையை அடைந்து விட்டதோ!!! என்று நினைக்க வேண்டியுள்ளது!!!
நிற்க….
குளித்து முடித்து…. மருத்துவமனைக்கு கிளம்பினேன்!!! சாலைகளில் ஈசல் குறைந்தபாடில்லை!! வாகனத்தை செலுத்துவது கூட கஷ்டமாக இருக்கும்!!!
ஆனால்…
வழிநெடுகையிலும்…..
சாலைகள் ஒணான்கள் அடிப்பட்டு இறந்து கிடந்தது. சுமார் 9 கிமீ தொலைவில்…. சுமார் 40-50 ஒணான்கள் இறந்து கிடந்திருக்கும். ஒணான் உணவிற்காக….. ஈசலை பிடித்து திங்க சாலைக்கு வரும் போது வாகனங்களில் அடிப்பட்டு இறந்து கிடைக்கிறது!!
பரிதாபம்!!! ஆறறிவு உடைய மனிதனே….. தூரித உணவினால் உடல்நிலைக்கு பாதிக்கப்படும் என்று அறிந்து உண்ணும் போது…. ஒணானுக்கு சிந்திக்கின்ற திறனா இருக்கிறது??? சாலையில் ஈசலை சாப்பிடும் போது….. “ அடிப்பட்டு இறக்க வாய்ப்புள்ளது ” என்று நினைத்திக்குருமா என்ன??
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment