Sunday, August 9, 2020

பொருளாதாரமும் அரசியல் பேசுதலும்

 

அரசியல் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க இயலாது!!! அதில் என்ன இருக்கிறது? என்ற கேள்விக்கு கூட விடை தெரியவிலை!!!

அதே சமயத்தில்…… அரசியலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்!!! ஏனெனில் அரசியல்வாதிகள் தான்.. இந்த நாட்டை வழிநடத்துபவர்கள்!!!

நிற்க!!!

சமூக வலைதளங்கள் தொடங்கி அச்சு, காட்சி ஊடகங்கள் வரைஅரசியலை தான் பெரும்பாலும் பேசுகின்றன!!! அதிலும் கட்சி சார்ந்த அரசியல், தனிநபர் அரசியலை அதிகமாக விவாதிக்கின்றன!!! இந்தளவிற்கு பேச வேண்டிய அவசியம் இருக்கிறதா? என்றால்தேவையில்லை என்பேன் ( என் கருத்துபடி )

இவ்வாறுதனிநபர் அரசியல் மற்றும் கட்சி சார்ந்த அரசியலை அதிகமாக பேசுவதால் தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் ஏற்படும் இழப்புகள் ஏராளம்!!!

அதிலும் குறிப்பாக….. சமூக வலைதளங்கள் அதிகமாக தனிநபர், கட்சி சார்ந்த அரசியலை பேசுகின்றனர்!!! ஒருவர் முழு நேர அரசியல்வாதியாக இருந்தால்அரசியல் பேசுவதில் இல்லை!!!

ஆனால்….. தேவையில்லாமல் அரசியல் பேசிஉங்களை இழக்காதீர்கள்!!!! அரசியல் பேசுவதை குறைத்துவேறு செயல்களில் கவனம் செலுத்துங்கள்!!! சமூகம், அறிவியல், பொருளாதாரம் போன்றவற்றில் கற்று கொள்ளுங்கள்!!! அதிகம் படியுங்கள்!!! தனிநபர் பொருளாதாரத்தை உயர்த்துங்கள்!!!

உண்மையினை உடைத்து பேசுவதென்றால்…… சமூக வலைதளத்தில் பொதுநலம் என்று சொல்லி கொண்டிருக்கலாம்!!! தனிமனித அடிப்படை பொருளாதார தேவைகள்அதை விட முக்கியம்!!!

உளவியல் ரீதியாக சொல்வதென்றால்…. தனிமனித பொருளாதார தேவை பூர்த்தி அடைந்தால் மட்டுமே. சிந்தனை திறன் கூட சிறப்பாக இருக்கும்!!!!

அரசியல் பேசுவது தவறில்லை!!! ஆனால்.. .தனிநபர் , கட்சி சார் அரசியல் மட்டுமே பேசுவதில் பயனில்லை!!!

 

உங்களில் ஒருவன்

உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

No comments:

Post a Comment