சிறந்த பேச்சாளர்கள், சமூகத்தில் வெகுவாக பாராட்டப்படுவதற்கு காரணம்... .பேச்சுத்திறனும் மொழி நடையும் !! அதிலுள்ள கருத்து செறிவு மிக குறைவு !!
உளவியல் அடிப்படையில் பார்த்தாலும்.... அறிவு சார் கருத்துகளை தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு அதிகமாக.கேட்க முடியாது!!! மூளையில் தொய்வு ஏற்பட்டு... கருத்து உள்வாங்க முடியாது!!! தொய்வு ஏற்பட்டு.... பேச்சாளர் மீதே வெறுப்பு ஏற்பட்டு விடும்!!!
ஆனால்... சிறந்த பேச்சாளர்கள் பேசினால்.... ஒரு மணி நேரம் தொடர்ந்து பேசினாலும் கேட்டு கொண்டிருக்க முடியும்!!!! அங்கு கருத்து செறிவினை விட..... மொழி நடையும்.... உடல்மொழியும்... குரலின் ஏற்ற இறக்கங்களும்... நகைச்சுவைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன!!!
இன்னொரு புறம்.... சிறந்த அறிவாளிகள் மிக சிறந்த பேச்சாளர்களாக இருக்க வாய்ப்புகள் குறைவு!!! ஒரு துறையை சார்ந்த அறிவினை பற்றி சிந்திக்க முடியுமே தவிர.... எதிரில் உள்ளவர்களுக்கு எதுவாக பேச திறன் இருக்காது!!!
ஆனால்... மிக சிறந்த அறிவாளிகள்.... ஒரு குறிப்பிட்ட உயரத்தை அடைந்த பிறகு.... அவர்களும் மிக சிறந்த பேச்சாளர்களால் அறியப்படும் நிலையும் உண்டு!!! ஒரு குறிப்பிட்ட துறையின் திறமையினால்... சிறந்த பேச்சாக கருதப்படும் வாய்ப்பினால்!!!
இதே புரிதல்... சிறந்த பேச்சாளர்களுக்கு உண்டு!!!
நிற்க....
சித்த மருத்துவ தேகி அடிப்படையில் புரிந்து கொள்ளலலாம்!!! கப தேகிகளுக்கு சிந்தனை திறன் மிக குறைவு . ஆனால் தனக்கு தெரிந்ததை .... மற்றவர்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க வல்லவர்கள்!!!
பித்த தேகிகள்..... புத்தி கூர்மையானவர்கள்!!! தனக்கு தெரிந்ததை சுருக்கமாக பேசுவதில் வல்லவர்கள்!!!
வாத தேகிகள்... மிக சிறந்த சிந்தனைவாதிகள்!!! ஆனால் தெளிவாக பேசவே தெரியாது!!!
நிற்க...
அறிவாளியாகவும் பேச்சுதிறன் வல்லவர்கள் யாருமே இல்லையா?என்று நீங்க கேட்கலாம்!!! இருப்பார்கள் சதவீதம் மிக குறைவு!!!
பல திறமைகள் ஒன்றுக்கு ஒன்று எதிரானவை!!!
இரண்டிலும் பெரியவர்கள் என்றால்... ஒரு வகையில் அரைகுறை தான்!!! ஆற்றில் ஒரு கால்!! சேற்றில் ஒரு கால் வகையறா!!!
டாட்........
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment