Sunday, August 30, 2020

முக நூலும் கட்சி சார் அரசியலும்

 நான் முகநூலில் கற்று கொண்டது அதிகம்!! ஒரு செய்தி குறித்து 360 டிகிரி பார்வை கிடைக்கும்!!! அதாவது... தவறாக இருந்தாலும்... அதற்கு 2 பாயிண்ட் கண்டுபிடித்து முட்டு கொடுப்பவர்கள் அதிகம்!!! அது கூட அறிவு நிலையே!!!

ஆனால் ...மிகப்பெரிய வெறுப்பை ஏற்படுத்தும் விஷயம் அரசியல் சார்ந்த புரிதல்!!! தன் சார்ந்த அரசியல் கட்சிக்கு ஆதரவாக பேசிகிறேன் என்றும்... சிறிய விஷயத்தை கூட பெரிதாக்கி பூதக்கரமாக்குவதும் , பெரிய விஷயத்தினை கண்டுக் கொள்ளாமல் இருந்தும் சிறிய விஷயமாக மாற்றுவதும் நடக்கும்!!!
இதற்கெல்லாம் உச்சப்பட்சமாக...... பத்திரிக்கை துறையும், காட்சி ஊடகமும் ஒத்திசைவாக இருப்பதும் துரதிஷ்டம்!!!
நல்ல பதிவுகளை வைத்து....... பலரை பின் தொடர்வதும் உண்டு!!! ஆனால் அவர்களுடைய அரசியல் பதிவுகளை கண்டால்.... ” ஏன் தொடர வேண்டும் ? “ என்ற நிலைக்கு வந்து விடுகிறேன்!!!
அதிலும் தனி மனித துதிகளும், தனி மனித அவமதிப்புகள் அதிகமாகி கொண்டே வருகிறது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அசுசைகள் அதிகமாகி வருகிற்து .சமூகம் முன்னேற .... தனிமனித உரிமைகள் அதிகமாக வேண்டுமே தவிர.. .குறைய கூடாது!! அதிலும் உயர்ந்த பதவியில் இருந்தவர்களும்.. அச்செய்கையை தொடர்வது வருத்தமாக இருக்கிறது!!!
சுயமரியாதை பேசுவர்கள் சுய மரியாதைக்கு மதிப்பு கொடுக்காமல் போதுவதும் , அடுத்தவர் செய்யும் தவறிற்கு பதிலாக... நானும் அதே தவற்றை செய்பவர்களும், தனிமனித துவேஷங்களும் அதிகமாகி வருகிறது
கட்சி சார் அரசியல் சார்ந்த உரையாடலில், ஈர்ப்பும் லைக்கும் அதிகம் கிடைக்கும் என்பதும் உண்மை!!! ஆனால்... அரசியல் குறித்து விவாதத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை .... மற்ற துறைகளுக்கு கொடுக்கலாம்!!! ஏனெனில் கட்சி சார் அரசியல் பேசுவதில் சமூகத்திற்கு பெரிய பயனில்லை!!!
இதையெல்லாம் சொன்னால் .... யாராவது மாற போறாங்களா?? நிச்சயம் இல்லை!!! என்னுடைய மனக்குமுறல் அவ்வளவே!!! அதை தாண்டி யாதெறும் பலனில்லை!!!

No comments:

Post a Comment