Friday, October 28, 2016

தீபாவளியின் கொண்டாட்ட மனநிலை

தீபாவளி பண்டிகை கொண்டாடுவதில், காலத்திற்கேற்ப சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த மாற்றத்திற்கு பொருளாதாரமே(பணம்) முக்கிய காரணமென்பேன்!!!

1990 பிறகு ஏற்பட்ட, உலகமாயமாக்கல் கொள்கையினால்.... இந்தியாவின் சேவை துறையின் வளர்ச்சி இமலாயத்தை ஒத்தது. அவ்வளர்ச்சியில் வட இந்தியாவை காட்டிலும், தென்னிந்தியாவே மெச்சும் படியான வளர்ச்சியை எட்டியது. இத்தகைய காரணங்களால்.... பணம் சார்ந்த வாழ்வியலில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டது.

தீபாவளி என்பது புத்தாடை, வெடி மற்றும் இனிப்பு வகைகள் என்ற மூன்று வகையான பொருட்களே, ஆனந்தத்தை தரவல்லது.

90 களுக்கு முன்பு வரை, தீபாவளி தவிர்த்த மற்ற நேரங்களில்.... மூன்று வகையான பொருட்களும் வாங்குவது மற்றும் உபயோகிப்பது என்பது மிக குறைவாகவே இருந்தது. அதனால் தீபாவளி வந்தால், மேற்கண்ட பொருட்களை பெறலாம் என்ற ஆர்வம் அதிகமாக இருந்தது. ஆதலால் தீபாவளி மீதான எதிர்ப்பார்ப்பும் அதிகமாக இருந்தது.

ஆனால் இன்றோ... பொருளாதாரத்தினால் முன்னேறி விட்டோம். புத்தாடை மற்றும் இனிப்பு வகைகளை எப்போதும் வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலலாம் என்ற நிலை உள்ளது. அதனால்... வருகின்ற தீபாவளி மீதான ஆர்வம் குறைந்துள்ளது. (மேல்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கு)

ஆனால் கீழ்த்தட்டு மக்களுக்கான தீபாவளி இன்னும் மகிழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அவர்களின் பொருளாதாரம் இன்னும் சிறப்படைய வில்லை என்பது கண் கூடான உண்மை. அதே போல் குழந்தைகளுக்கு வெடி மீதான ஆர்வம் இருப்பதனால்... அவர்களுக்கு குறிப்பிட்ட வயது வரை குறையாது.
பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுவோம்!!

அன்பர்களுக்கு தீப ஒளி நல்வாழ்த்துகள்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Thursday, October 27, 2016

தீபாவளியும் பழங்கால நினைவுகளும்

இன்றைய நிலையில், 20-30 வயதினை கடந்தவர்களில் பலர்….. ” இப்ப கொண்டறதெல்லாம் தீபாவளியாநாங்க 20 வருஷனத்துக்கு முன்னாடி, எப்படியெல்லாம் தீபாவளி கொண்டாடினோம் தெரியுமா!?!?” என்று பேச ஆரம்பிப்பார்கள்.

ஒரு மாதத்திற்கு முன்னாடியே, டிரஸ் எடுத்து டெய்லர் கிட்ட கொடுத்து விடுவோம்…….. இரண்டு வாரத்திற்கு முன்னாடியே.. முருக்கு, அதிரசத்திற்கெல்லாம் மாவு அரைச்சி விடுவொம்ஒரு வாரத்திற்கு முன்னாடியே வெடியெல்லாம் வாங்கி விடுவோம் தெரியுமா???? “ என்றவாறு தொடரும் அந்த உரையாடல்…..

மேற் கூறிய கூற்று உண்மையா????நிச்சயமாக கிடையாது என்பேன்.

இதே உரையாடலை….இருபது வருடங்களுக்கு முன்பு, நமது தந்தை நம்மிடம் சொல்லி இருப்பார்…. இன்று நாம், நமது பிள்ளைகளிடம் சொல்லி கொண்டிருப்போம்!!!!! இன்னும் 10-20 வருடங்கள் கழித்துஇதே உரையாடல், நமது பிள்ளைக்கும், அவனது பிள்ளைக்கும்(நமது பேரனுக்கும்) தொடரும்
.
ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு ஏற்ப, தீபாவளிக்கான சில வடிவ மாற்றங்களை சமூகம் ஏற்படுத்தி கொண்டே இருக்கும்.. அத்தகைய சமூக மாற்றத்தினால்.. இத்தகைய வேறுபாடுகளை நாம் உணர்ந்து கொண்டே இருப்போம்!!!! அவ்வளவு தான் வித்தியாசம்

இதனை தாண்டி, இன்னுமொரு உளவியலை முக்கியமாக காரணமென்பேன். சிறு வயதில் செய்த விஷயங்கள் அனைத்தையும், மனம் மிகவும் அருமை என்றே எடுத்து கொள்கிறது.

பணம் என்பது குழந்தைகள் சார்ந்ததாக இல்லையென்பதால், எல்லா தருணங்களையும் ஆனந்தமாக எடுத்து கொள்ள முடியும். ஆனால், வயது அதிகமாக தொடங்கும் போது, பொருளாதாரம் முன்னிலைப்படுத்தும் போது., சந்தோஷ தருணங்கள் கூட, பணத்தினால் தடைப்பட்டு விடும். ஆனால் குழந்தைகள் எதையும் யோசித்து கொண்டிருப்பதில்லை. அந்த தருணத்தை மட்டுமே நினைக்கும்.

இவ்வாறு தீபாவளி பற்றிய சிறு வயது நினைவுகளேஆழமாய் பதிந்திருப்பதால்இன்னும் பழங்கதைகளே பேசி, நம்மை நாமே ஆனந்தப்படுத்தி கொள்கிறோம் என்று நினைக்கிறேன்.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Tuesday, October 25, 2016

தென்காசி மரணமும் போலிகளும்

தென்காசி அருகே, நிரிழிவு நோயிற்காக, மூலிகை மருந்து உண்டு, மூன்று பேர் உயிரிழிந்துள்ளனர். வருந்த தக்க நிகழ்வு!!!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரும், இது மாதிரியான மற்றொரு நிகழ்வும் நடந்தது. முண்ணனி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ஒருவர், நீரிழிவு நோயிற்காக மூலிகை மருந்தை உட்கொண்டு உயிரிழந்தார்.

இந்த மாதிரியான நிகழ்வுகள் நடப்பதை தவிர்க்க வேண்டுமென்பதில் எள்ளவும் ஐயமில்லை. ஆனால்…. இது மாதிரியான நிகழ்வுகளை மட்டும் வைத்து கொண்டு, ஒட்டு மொத்த இந்திய மருந்துவ முறையின் மீது குறை கூறுவதையும் ஒத்து கொள்ள இயலாது.

அது என்ன வகையான மூலிகை மருந்து?? என்று பரிசோதனை முடிவுகள் வெளிவரும் வரை, அதை பற்றி கருத்துகள் கூற இயலாது. ஆனால், மருந்து கொடுத்தவர், முறையாக பயிற்சி பெற்று, மருத்துவ கவுன்சிலால் அங்கிகரிக்கப்பட்ட மருத்துவர் அல்லர் என்பது மட்டும் உண்மை.

எல்லா துறைகளிலும் போலிகள் புல்லுருவிகள் போல் முளைந்திருப்பது போல், சித்த மருத்துவத்திற்கும் விதிவிலக்கல்ல. மற்ற துறைகளினை போல், புல்லுருவிகளை களையெடுப்பதும் எளிதான காரியமும் அல்ல.

இந்தியா என்பது பல்வேறு கலச்சாரம் மற்றும் பண்பாட்டை தன்னகத்தே கொண்டது. அதில் பல்வேறு வகையான மருத்துவ முறைகளும் அடங்கி உள்ளது. இத்தகைய மருத்துவ முறைகள் மக்களோடு பிண்ணி பினைந்தவை. சுதந்திரத்திற்கு முன்பு வரை, பரம்பரையாக அனுபவ அறிவை கொண்டு மக்களிற்கு நலத்தை அளித்தவை.

நவீன மருத்துவம் இந்தியாவில் வலம் வந்த பிறகு, இந்திய மருத்துவ முறைகளை ஒழுங்குப் படுத்தப் பட்டது. அதற்கு பிறகு, முறையாக கவுன்சில் அமைக்கப்பட்டு, கல்லூரிகள் தொடங்கப்பட்டு, முறையாக பட்டம் பெற்ற மருத்துவர்கள் வெளி வரத் துவங்கினர். அதனால், காலம் காலமாக வைத்தியர்களையும் ,தனியே தேர்வுகள் வைத்து, மருத்துவர்களாக பயிற்சி செய்ய அனுமதியளித்தது.

ஆனால், இன்னும் பல பரம்பரையாக வைத்தியம் செய்தவர்களும், குருக்களிடமிருந்து கற்றவர்களும், மற்ற வைத்தியர்களிடமிருந்து பெற்ற அறிவை கொண்டும், சொந்த விரும்பத்தினால் படித்தவர்களும், கால போக்கில் மருத்துவர் என்ற போலி வேஷத்துடன் வெளிவந்தனம் உள்ளனர்.

சட்டப்படி, இந்திய மருத்துவ கவுன்சில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தவர்களே, மருத்துவ பணி செய்ய தகுதி பெற்றவர். இவர்களை தவிர்த்த மற்றவர்கள் அனைவரும் போலிகளே!!! இதனை பொது மக்கள் உணர வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் மட்டுமல்ல, மருத்துவத்தின் தொடக்க புள்ளியிலிருந்து போலிகள் இருந்தே வந்துள்ளனர். அவர்களை ஒழிப்பது என்பது, மூன்று தளங்களிலிருந்தும் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒன்று அரசு, இரண்டு மருத்துவர்கள். மூன்று நுகர்வோர்(அதாவது நோயாளிகள்). இந்த மூன்று வழிகள் மூலமும், இப்பிரச்சனைகளை அணுக வேண்டும்..

பொதுமக்களும், மருத்துவரின் உண்மை நிலையை அறிந்து மருத்துவம் பார்க்க வேண்டும். இதில் படிக்காதவர்கள் மட்டுமில்லாமல்,. படித்தவர்களும் இதில் அடக்கமே!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Saturday, October 22, 2016

தீபாவளியும் வியாபர உத்திகளும்

தீபாவளி வியாபரம் களை கட்ட தொடங்கி விட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரைஒரு மாதமாக இருந்த வியாபரம், இப்போது ஒரு வாரத்திற்குள் சுருங்கி வந்து விட்டது. அதனால், அனைத்தும் கடைகளும் தள்ளுபடிகளையும், இலவசங்களையும் அள்ளி தெளிக்கின்றன!!!! இவையெல்லாம் வியாபர உத்தி என்ற பெயரில், பெரும்பாலும் நுகர்வோரை சுரண்டுவதாக அமைகிறது என்பது மட்டும் உண்மை. அவற்றில் சில

#முதல்_வகை

தீபாவளி, பொங்கல் மற்றும் ஆடி மாதங்களில், அனைத்தும் வணிக நிறுவனங்களும் தள்ளுபடி அறிவிப்பது வாடிக்கையாகி விட்டது. அது 10 சதவீதம் முதல் 50-60 சதவீதம் வரை நீளலாம்.

இலாபத்தில் குறைத்து கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். பண்டிகை காலங்களில் அதிகமாக விற்பனை நடப்பதால், குறைந்த லாப சதவீதமாக இருந்தாலும், நல்ல லாபம் கிடைத்து விடும். மேலும் வாடிக்கையாளர்களுக்கு லாபம் என்பதால், இருவருமே பயன் அடைகிறார்கள்.

#இரண்டாவது_வகை

5000 ரூபாய் மேல் பொருட்கள்/துணிகள்/ சுவிட்கள் வாங்குவோருக்கு சிறப்பு பரிசு. இப்படியாக 1000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரை, நீங்கள் வாங்கும் அளவுக்கு ஏற்ப, பல சிறப்பு பரிசுகளை அறிவிக்கின்றனர். சிறப்பு பரிசு அறிவிப்பதன் மூலம் பொது மக்களை, அதிக பொருட்களை வாங்க வைக்கலாம் என்ற நம்பிக்கை. பொதுமக்களும், மேற்கண்ட மனநிலையை விட்டு வெளிவரவில்லை என்பதும் உண்மை.

இதில் இரு வகையான வியாபர உத்திகள் கையாள படலாம். ஒன்று பொருளின் விலையை உயர்த்தி, அந்த லாபத்தை வைத்து சிறப்பு பரிசுகளை கொடுத்து விடலாம். மற்றொன்று அவர்களின் லாப சதவீத்தை குறைத்து, சிறப்பு பரிசு வழங்கலாம். இந்த சிறப்பு பரிசு முறையிலும், வியாபரிகளுக்கும் நுகர்வோருக்கும் லாபமே தவிர நட்டமில்லை.

#மூன்றாவது_வகை:

இதுவும் ஒரு வகையான சிறப்பு பரிசு திட்டமே!!. ஆனால் சற்று வித்தியாசமானது. பெரிய நிறுவனங்களில், இந்நடைமுறை உள்ளது. சிறப்பு பரிசாகநுகர்வோரில் சிலருக்கு மட்டும், அதிக விலையுள்ள பரிசை வழங்குவது. முதல் பரிசாக கார். இரண்டாவது பரிசாக பைக் என ஆறுதல் பரிசாக வாட்ச் என்று பட்டியல் நீளும். 1 லட்சம் வாடிக்கையாளர் என்று வைத்து கொண்டால், அதில் அதிகபட்சமாக 50 பேர் வரைக்கும் மட்டுமே பரிசு கிடைக்கும்.

இதிலும் இருவகையான வியாபர உத்தி கையாளப்படலாம். ஒன்று லாப சதவீதம் குறைவு. மற்றொன்று பொருளின் விலையை ஏற்றி, அதன் மூலம் சிறப்பு பரிசுகளை வழங்குவது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது வகைக்கு பெரிய வித்தியாசமில்லை என்றாலும், மூன்றாவது வகையினரேஅதிகமாக சுரண்டப்படுகின்றனர். ஒவ்வொரு வாடிக்கையாளரிடம் குறிப்பிட்ட பணத்தை பெற்று, அதனை ஒரு சிலருக்கு மட்டுமே மொத்தமாக வழங்குவதற்கு ஒப்பானது. இது ஒர் வகையான லாட்டரி சிட்டிற்கே ஒப்பானது; மறைமுக சுரண்டல் எனலாம்.

மேற்கண்ட அனைத்திலும், வியாபரம் என்ற பெயரில், ஆசையை தூண்டி பணம் பெற முயல்கின்றன. பணம் பெறுவதே வியாபரத்தின் முதன்மை நோக்கம் என்றாலும், அடுத்தவரை ஏமாற்றுவதற்கு(?) வியாபர உத்தி என்ற அடைமொழியில் அமர்ந்து கொள்கிறமோ என்ற கேள்வியும் எழுகிறது. நவீன பொருளாதார உலகம்இதனையே மறைமுகமாக மக்களிடையே புகுத்தி வருகிறது.

சரி.. மேற்கண்ட அனைத்திற்கும் வியாபரிகளையே குறை சொல்வதை விடுத்து, பொதுமக்களாகிய நாம்,,,, என்றாவது யோசித்து பார்த்து இருப்போமா??? படிக்காதவர் மட்டுமல்லபடித்தவரும் இலவசத்திற்கு அடிமையாகி தானே நிற்கிறோம்!!

ஒவ்வொரு மனிதனுக்கு ஆசை உண்டு. பணத்தின் மீதும்!! பொருளின் மீதும்!!! அதை பெறவேஒவ்வொருவரும் முயன்று கொண்டிருக்கிறோம். வியாபரிகள், தாங்களின் வியாபரத்தின் மூலம் பணம் பெறுகின்றனர். அதே போல், நாம் வேறொரு இடத்தில் மற்றவரை ஏமாற்றி கொண்டிருப்போம்.. அவ்வளவு தான் வித்தியாசம்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Wednesday, October 19, 2016

கடவுள் புரிதல்

கடவுளை பற்றிய புரிதலில்... .கொஞ்சம் ஆழமாய் பகுத்தறிவின் வழியே சிந்தித்து பார்த்தால், கடைசியில் கடவுளே இல்லை என்றே நினைக்க தோன்றுகிறது.

ஆனால்... அப்படியாக கருத்தியலில் மனதை நிலை நிறுத்தி கொள்வதிலும்... இருவகையான பிரச்சனைகளை உணர்கிறேன்.

1. தன்னை விட மேலானவன் இல்லையென்பதால், ”நான்என்ற போதையும், தன்னை கட்டுபடுத்த யாருமில்லை என்ற அதிகார போதையும் கொள்ள வாய்ப்பு உள்ளது என்று தோன்றுகிறது.

2. எனக்கொரு பிரச்சனை வரும் போது, அந்த நேரத்தில் கை காட்டுவதற்கும், சாய்ந்து கொள்வதற்கும் ஒருவர் தேவைப்படுவார். அத்தகைய பாதுகாப்பு நிலையையும், நான் இழந்து விடுவேன் என்ற பயமும் உள்ளது,

மேற்கண்ட இரு பிரச்சனைகளையும் கையாளும் அளவிற்கு மனம் பக்குவம் பெற்று விட்டால்... வரும் காலங்களில் கடவுள் இல்லை என்ற வாதத்தை நோக்கி பயணிக்கலாம்.

ஆனால்... அந்த நிலையை அடையாத வரை... நான் கடவுள் உண்டு நிலையோடு பயணிப்பது நல்லதென்று கருதுகிறேன்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Monday, October 17, 2016

நீயா நானா- சமூகவியல் மாற்றங்கள்

நேற்றைய தினம், விஜய் டிவியின் நீயா நானா விவாதம்..... சமூக மாற்றத்தின் முக்கியமான நிகழ்வை ஏதிரொலித்தது எனலாம்.

இத்தகைய விவாதம் தேவை தானா? என்ற கேள்வியே, என்னுள் முதலில் எழுந்தது. ஆனால், சற்று ஆழமாய் சிந்திக்கும் போது, தேவை தான் என்று தெரிந்தது.

விவாதம்... இரு முக்கிய புள்ளிகளை, தொட்டு சென்றது எனலாம். 1. மத்திய/கீழ்த்தட்டு வர்க்கம்,... மேல்தட்டு நிலையை அடைவதற்கு, ஆண்களுக்கு அழகு தேவைப்படுகிறது. 2. ஆண்களும் மேக்கப் போட்டு அழகாக தெரிவது, சமூக மாற்றத்தின் முக்கியமான நிகழ்வாக எடுத்து கொள்ளலாம்.

முகத்தை பளபளக்கும் கீரிம், பேஸ் வாஷ் கீரிம், செண்ட் வகைகள், வண்ண வேஷ்டி வகைகள்... இப்படியாக, ஆண்களுக்கான அழகு சாதன பொருட்களை பற்றிய விளம்பரங்கள் அதிகமாக வருவது, இதன் பிண்ணனியே!!!!

திருமண விவாகரங்களிலும்.. இந்நிலை பிரதிபலிக்கிறது.
காலம் காலமாய், ஆண்களின் குணங்களாய் கருதப்பட்ட அதிகாரமும், பொருளாதாரமும்....கால மாற்றினால் பெண்களினால் எடுத்து கொள்ளப்படுவதை போல... பெண்களின் குணமாய் இருந்த அழகும்... இப்போது ஆண்களாலும் எடுத்து கொள்ளப்படுகிறது. அவ்வளவே!!!

ஆண்களின் உடைகளாக கருதப்பட்ட பல்வகை ஆடைகள்(ஜீன்ஸ்), பெண்களால் பயன்படுத்தப்பட ஆரம்பிக்கும்..... ஆண்களுக்கும் சில மனநிலை குழப்பங்கள் ஏற்பட்டன. அப்பெண்ணினை ஆணின் அடையாகமாகவே கண்டான்.... அதன் நீட்சியாக, மேக்கப் போடும் ஆணினை, பெண்ணின் அடையாளமாகவே பெண் கண்கிறாள். இச்சமூக மாற்றினை இருபாலினரும் ஏற்று கொள்ளத்தான் வேண்டும்.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்