Friday, May 29, 2020

அச்சு ஊடகம் - காட்சி ஊடகம்

புதிய தலைமுறை இதழின் நீண்ட நாள் வாசகன் நான்!!! முதுநிலை மருத்துவ படிப்பு முதல்…. புதிய தலைமுறை இதழை வாசிக்க ஆரம்பித்தேன்!!! வெகுஜான வார இதழ் என்ற அடையாளத்தில் (சினிமா, கதை …. ) இருந்து மாறிசமூக பிரச்சனைகளை பேசும் இதழாக வலம் வந்து கொண்டிருந்தது!!! சமூகத்தின் மீதான தாகம்இதழை வெகுவாக என்னுள் ஈர்த்தது என்பதில் மிகையில்லை!!!

ஒரு வருடத்திற்கான சந்தா இதழினைமொத்தமாக செலுத்திதபால் வழியாக பெறுவது வழக்கம்!!! அந்த காலத்தில்…….. ஒளி வடிவமாக (தொலைக்காட்சி ஊடகம்) பெரிதாக வளர்ச்சி அடையும் இல்லை!!! அது போல் இணையம் சார்ந்த தொலைபேசியும் பெரியளவு வளர்ச்சி பெறவில்லை. ஆதலால்.. .அச்சு ஊடகம் மட்டும்சமூக பார்வை சார்ந்த வெற்றிடத்தை நிரப்பியது!!

கல்லூரி முடித்து….. கிளினிக்கிலும் இதழை வாசிக்கும் பழக்கம் தொடர்ந்தது!! ” கழுதை தேய்ந்து கட்டெறும்பானகதையை போல்இதழை படிக்கும் ஆர்வம் வெகுவாக குறைந்தது கொண்டே வந்தது!!! கடைசியாகபடிக்காமல் அலமாரியில் இருந்த இதழ்கள் எண்ணிக்கை அதிகமானது!!! கடந்த ஆண்டு வாங்குவதை நிறுத்தி விட்டேன்!!!கடந்த பத்தாண்டில்….. எனது சிற்றிதழ் வாசிப்பு குறித்த சிறுகதை சுருக்கம்!!!

கடந்த பத்தாண்டில் தொழிற்நுட்பம் சார்ந்த சமூக முன்னேற்றத்தையும் சேர்த்து பார்க்க வேண்டும்!!!! எளிய வாசிப்பாளாக…… சமூக புரிதலுக்கான ஊடகமாக புதிய தலைமுறை இதழ் ஆரம்பத்தில் இருந்தது.

ஆனால் காலங்கள் செல்ல….. முகநூல் பெரிய வீச்சினை அறிவுசார் பாதையில் ஏற்படுத்தியது!!! வெட்டி பேச்சுகள் ஆயிரம் இருந்தாலும்…. கருத்துசார் பதிவுகளை தேடி படிக்கலலேன்!!! அதோடு ஒளி-ஒலி ஊடக வருகையும்( செய்தி தொலைகாட்சி)/இணையம்இன்னும் அறிவு பாதையை விசாலமாக்கியது!!!

அடுத்த விஷயமாகயூடியூப் சேனல்களில் வருகை…. அடுத்த கட்ட நான்கு கால் பாய்ச்சல்!! இவ்வாறு அறிவு தாகத்தை நிரப்பும் களமாக…. நவீனத்துவ ஊடகங்கள் மாறின!!! அதே சமயத்தில் …… புதிய தலைமுறை வரும் கட்டுரைகள்பெரும்பாலும் முகநூலில் பேசப்பட்ட/ தொலைகாட்சியில் பேசிய விஷயங்களாக இருக்கவே செய்தன!!!!

சுடச்சுடஒரு விஷயத்தினை தெரிந்து கொள்ள இணையமே நல்ல வாய்ப்பினை தரும் போது.. .அடுத்த வாரம் வர இருக்கின்ற இதழினை படிக்கும் ஆர்வம் வெகுவாக குறைந்து போனது!!!

நிற்க…….

கொரனா வைரஸிற்கு பிறகு ….. ஆனந்த விகடன் இதழில் நடக்கும் ஆள் குறைப்பு விஷயத்தினைஇதே புரிதலோடு பார்க்க விரும்புகிறேன்!!! ஒரு வெகுஜான இதழின் இடத்தைஇன்றைய ஒளி ஊடகங்களும் இணைய ஊடகங்களும் பிடித்து கொள்கின்றன!!! அதனை தாண்டி ஈர்க்கும் தன்மை.. .அச்சு ஊடகத்திற்கு தேவையாக உள்ளது!!!

ஒரு செய்தி தொலை காட்சியில் பணிபுரியும் பத்திரிக்கையாளரை தாண்டிய திறமைஅச்சு ஊடக பத்திரியாளருக்கு தேவையாக உள்ளது!!!

செய்தி தொலைகாட்சியில்.. ஒளி கலவையில் கருத்து பெரிதாக எடுத்து கொள்ளப்படுவதில்லை!!! ஆனால்…. அச்சு ஊடகத்தில் சொற் சுவை…. கருத்து சுவை அதிகமாக தேவைப்படுகிறது!!! மேலும் படிப்பதற்கு சலிப்பு கூட ஏற்படுகிறது!!! (ஏன்இந்த பதிவை கூடஎழுத்தாக இல்லாமல்ஒளி-ஒலியாக இருந்தால் பார்ப்பவர்கள் அதிகமாக இருப்பார்.. )

திரையரங்கங்களினை தாண்டி திரைப்படங்கள் ஒடிடி தளங்களுக்கு செல்வது போல…… அச்சு ஊடகத்தின் இடத்தை….. ஒளி/இணைய ஊடகங்கள் பிடித்து விட்டன!! இந்த சமூக மாற்றத்தை ஏற்று கொண்டு.. .அதற்கேற்றாற் போல்அச்சு ஊடகம் தகவமைப்பினை மாற்றுவது மிக முக்கியம்!!!

உலகம் மிக வேகமாக உருண்டோடி கொண்டிருக்கிறது!! அதனை உணரவில்லை யென்றால்நாம் மிதிபடுவது நிச்சயம்!!!

 

உங்களில் ஒருவன்

உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

 


Sunday, May 17, 2020

வேதாரண்யம் - பொருளாதார நிலை

உங்க ஊர்ல... எங்க பார்த்தாலும் மாடி விடா இருக்கு... உங்க ஊர்ல உள்ளவங்க எல்லாரும் பணக்காரங்க சார்... “ என்றார் சென்னையை சேர்ந்த மருத்துவர்.

உங்க ஊரு இவ்வளவு பசுமையா இருக்கு.. கஜா புயல் வந்த மாதிரியே தெரியல... “ என்றார் நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர்.

இவர்கள் சொல்வதில் உண்மையில்லாமல் இல்லை!!! வேதாரண்யமும் அதன் சுற்றுப்புறமும் பொருளாதார வளம் நிறைந்த பகுதியே!! காவிரியின் கடைமடை பகுதியாக இருந்தாலும் காவிரி நீர் வராததால்..... விவசாயத்தை பெரிதாக நம்பி இருக்கவில்லை!!!

பெரும்பாலும் வெளிநாட்டு வருமானத்தை சார்ந்தது; குறிப்பிட்ட அளவு அரசு ஊழியர்களையும் கொண்டது; சென்னை மற்றும் கோயமுத்தூர் வேலைக்கு செல்லும் நபர்கள் மூலமும் வருமானமும் உண்டு உப்பளம், மல்லிகைப்பூ, புகையிலை, மீன் பிடித்தல், இறால் பண்ணை என பல்வகை தொழில்களையும் சார்ந்தது உள்ளது!!!

இதனையெல்லாம் தாண்டி.... விவசாயமும் நடைபெறும்!!! ஆனால் 20-30 சதவீத மக்கள் மட்டுமே விவசாயத்தை முக்கியமான வருமானமாக கொண்டவர்கள். மற்றவர்களுக்கு விவசாயம் உபரி வருமானம்!!! அதிலும் கஜா புயல் ஏற்படுத்திய தாக்கம் ஏராளம்!! தென்னை, மா, புளி, முந்திரி, சவுக்கு, காய்கறிகள் என உபரி விவசாய வருவாய் அதிகம்.

சுமார் 50- 60 சதவீத மக்கள் மாடி வீடுகளில் வசிக்கிறது. கூரை வேய்ந்த வீடுகள் எண்ணிக்கை... மற்ற பகுதிகளினை ஒப்பிடும் போது... குறைவு தான்!!! (சுமார் 20-40 சதவீதம் இருக்கலாம்)

வளர்ச்சி ஏற்ப ஹார்டுவேர்ஸ், உணவகங்கள், தங்கும் விடுதி, மளிகை கடைகள் என அனைத்திலும் வளர்ந்து வருகிறது. மேலும் சிறிய கடைத்தெருவில் கூட சூப்பர் மார்க்கெட்களும் அதிகமாகி வருகின்றது. இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களும் அதிகமாகி வருகிறது.

அத்தியாவசிய பொருட்களை தாண்டி...வசதியை ஏற்படுத்தும் பொருட்களின் நுகர்வும் அதிகமாகி கொண்டு வந்தது. இது முக்கியமான வளர்ச்சியின் அறிகுறி!!!

கஜா புயலுக்கு பின்.. நீண்ட கால விவசாய உபரி வருமானத்தில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது!!! கொரோனா வைரஸ் வெளிநாடு மூலம் வரும் வருமானத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன். இது வருங்காலத்தில் வேதாரண்யம் சார்ந்த பகுதியின் வளர்ச்சியின் பெரும்பாதிப்பை ஏற்படுத்தலாம்!!!

தமிழகத்தின் ஒரு மூலைப்பகுதி..... கடலோர பகுதியில் இருப்பிடமான வேதாரண்யத்தில் தொழில் சார்ந்த வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை!!!! அதற்கேற்ப வருமானத்தை சிறப்பாக பயன்படுத்துவது தனிமனித வளர்ச்சிக்கு சிறந்ததாக அமையலாம்!!!

காத்திருப்போம்.... காலம் பதில் அளிக்கலாம்!!!

 

உங்களில் ஒருவன்

உங்களை போல் ஒருவன்

வேதை குமார்