Tuesday, August 29, 2017

பிக்பாஸ் ஒவியாவும், சமூக உளவியலும்


ஒவியா வெளியேற்றத்திற்கு பிறகு, பிக்பாஸ் மீதான மோகம் குறைந்திருப்பதாக முகநூல் முழுவதும் ஒரே புலம்பல்!!!! நான் பெரும்பாலும் பிக்பாஸ் பார்ப்பதில்லை என்பதால், அதன் உண்மை எந்தளவிற்கு என்று தெரியவில்லை!!! ஆனால் பிக்பாஸில் ஒவியாவின் எதிரணியை சேர்ந்த காய்த்ரி, ஜிலி, சக்தி மற்றும் ஆர்த்தி அனைவரும் வெளியேற்றப்பட்டதால், கலையிழந்தும் காணப்படலாம்!!!

மறுபடியும் ஒவியா நிகழ்ச்சிக்குள் உட்புகுந்தால், இன்னும் நிகழ்ச்சி விறுவிறுப்படையலாம் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்!!! என்னை பொறுத்த வரை, அது தேவையில்லாத செயல் என்றே தோன்றுகிறது!!!

கில்லி, தனி ஒருவன் மற்றும் பட்சா ஆகிய படங்களின் வெற்றிக்கு அந்தந்த படங்களின் ஹீரோவினை விட, வில்லன்களுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் காரணம் என்பேன்!!! மேற்கண்ட அனைத்திலும்…… ஹீரோவின் பிம்பம், வில்லனின் வீழ்ச்சியாகவே சித்தரிக்கப்பட்டிருக்கும்.

ஒருவரை ஹீரோவாக சித்தரிப்பதற்கு, அவனுடைய நற்செயல்களை தாண்டி, கெட்ட செயல்களை அழிப்பவனே நல்லவன் என்ற புரிதல், சமூகத்தில் அழமாக பதிந்த உண்மை!!! அதனால் தான், பல படங்களில், ஒரு வில்லனை தாண்டி, இரண்டு மூன்று வில்லன்கள் இருக்கின்றனர்!!!!

இத்தகைய புரிதல் சினிமாவிற்கு மட்டுமல்ல!!! மனித வாழ்க்கை முறையிலும் அப்படியே புரிந்து கொள்ளப்படுகிறது!!! .கா.. காதலுக்கு வரையறை சொல்ல சொன்னால், “ பணத்தை எதிர்ப்பார்க்காத, அழகை எதிர்பார்க்காதஎன்று வரையறை சொல்ல ஆரம்பிப்பமோ தவிர, ” பாசம் கொண்ட, உயிரை விடத் துணிகின்றஎன்று நேர்மறை எண்ணங்களை கொண்டு வரையறை சொல்ல மாட்டோம்!!!

இத்தகைய புரிதல் நிலையிலேஒவியாவின் நற்பண்பு சித்தரிக்கப்பட்டிருக்கிறது!!! ஒவியாவின் எதிரணியை சேர்ந்த காய்த்ரி, சக்தி, ஜிலி மற்றும் ஆர்த்தி போன்றவர்கள் செய்த கெட்ட செயல்களை தட்டி கேட்டதாலோ அல்லது அதற்கு வளைந்து கொடுக்காதாலோ, ஒட்டு மொத்த குடும்பத்தின் புறக்கணிப்பினாலோ, ஒவியாவின் நற்பண்பு பிம்பம் வெளிக்கொணரப்படுகிறது!!!

மேலும், இன்னும் இரண்டு வாரங்களுக்கு, ஒவியா பிக்பாஸ் வீட்டில் இருந்தால், ஒவியாவின் பிம்பம் எளிதாக உடைக்கப்பட்டிருக்கலாம்!!! ஒவியா வீட்டில் உள்ளவர்களிடம் ஒத்துழையாமை உண்டாக்காதது என்பது, நமக்குள் உள்ள ஒவியாவின் பிம்பத்தை உடைத்து இருக்கும்!!! இனிப்பின் சுவை திகட்டுவதற்கு முன்னரே ஒவியாவின் வெளியேறி விட்டதால், ஒவியாவின் மீதான திகட்டுதல் நமக்கு வரவில்லை!!! அவ்வளவு தான்!!!

பிக்பாஸின் விறுவிறுப்பிற்கு, சக உறுப்பினர்களுக்கு இடையே உள்ள சண்டையே முதற்காரணம்!!! ஒவியா மட்டுமே திரும்ப அழைக்கப்பட்டால், அங்கு சண்டை போடுவதற்கு ஆள் இல்லை என்பதால், மறுபடியும் மந்த நிலையே தவிர, வேறொன்றும் நடவாது!!!

சரிமறுபடியும் வில்லிகளை அழைக்கலாம் என்றாலும், வெளியுலக மக்களின் உணர்வுகளை நன்கு புரிந்திருப்பார்கள்!!! ஆதலால், சண்டை ஏற்பட வாய்ப்பும் இல்லை!!! சற்று ஆழமாய் சிந்தித்து பார்த்தால், அடுத்தவர்களுக்கு இடையேயான சண்டை, நமக்கு சுவரசியத்தை தருகிறது என்றால், நம்முடைய மன வன்மத்தை புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் !!!!

மறுபடியும் சொல்கிறேன்!!! கெட்டவர்கள் இருப்பதால் மட்டுமே, பல பேர் நல்லவராக தெரிகிறார். தோல்வியடைந்தவர்கள் இருப்பதால் தான், வெற்றியாளர் உண்டாகின்றனர்!!! ஒன்றை புரிந்து கொள்வதற்கும் ஒப்பிடுதல் என்பது முக்கிய கருவி!!! ஆனால், அந்த ஒப்பிடல் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதிலே முரண் நகை இருக்கிறது!!!

பிக்பாஸ் , ஒவியா போன்றவையெல்லாம், சமூகத்தின் தேவையா என்று ஆரம்பித்து விடாதீர்கள்!!! எவையெல்லாம் முக்கியத்துவம் இல்லையோ, அதனை நோக்கி ஒடுவதே நம்முடைய வழக்கமாகி விட்டதால், இதுவும் தேவையே!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


Friday, August 25, 2017

விநாயகரும் சில குழப்பங்களும்


சில மாற்றங்களை புரிந்து கொள்வதில் பல சிக்கல்கள் உள்ளது. அதில் ஒன்று தான், விநாயக சதுர்த்தி சார்ந்த கலாச்சர மாற்றம் !!!

சுமார் 7-8 நூற்றண்டில் ஆட்சி செய்த பல்லவ மன்னனின் தளபதியாக இருந்த பரஞ்சோதி முனிவர் ,சாளுக்கிய மன்னனிடமிருந்து தென்தமிழகத்திற்கு விநாயகர் வழிபாட்டை கொண்டுவந்தார் என்பது வரலாற்று செய்தி!!!

அதே சமயத்தில், பிள்ளையார்பட்டியின் தல வரலாற்றை எடுத்து , மேற்கண்ட வரலாற்று செய்தியோடு ஒப்பிட்டு பார்க்கும் போது, சில ,முரணாக தகவல்களே வருகின்றன!!!

பிள்ளையார்பட்டி கோவில் அமைப்பு முறை என்பது குடைவரை கோவில் வகையை சார்ந்தது!!! மேலும் கல்வெட்டு ஆய்வுகளின் படி, மேற்கண்ட பரஞ்சோதி முனிவர் கொண்டுவருவதற்கு முன்னரே, விநாயகர் வழிபாடு இருந்ததாக கூறப்படுகிறது!!!

சிவனின் இரு புதல்வர்களாக இருக்கும் முருகன் மற்றும் விநாயகர் ஆகியோரில், முருகன் சார்ந்த வழிபாடு, தமிழகத்தில் பற்றற்று அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது. அந்த அளவிற்கு விநாயகர் வழிபாட்டு முறை என்பது சற்று குறைவே!!! அதில் சிறியளவு மாற்றமும் நடைபெறுகிறது!!! முருகன் தமிழ் கடவுளாகவே அனைத்தும் இடங்களில் புரிந்து கொள்ளப்படுகிறது.

மேலும் நூல்களின் கடவுள் வாழ்த்தும், ஹோமங்களின் விநாயக வழிபாடுகள் பரவி காணப்படுவதும் முரண்பாட்டின் எச்சமாகவே தெரிகிறது !!!

வரலாற்றை புரட்டி பார்க்கையில், பல குழப்பங்கள் இருக்கையால், சம கால நிகழ்வை மட்டும், ஒப்பிட்டு பார்க்கும் போது, சில கலாச்சார மாற்றங்கள் நீக்கமற நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளலலாம்.

எனக்கு தெரிந்த வரை………. கடந்த பத்து வருடங்களை ஒப்பிடும் போது, விநாயக சதுர்த்தி சார்ந்த கொண்ட்டாட்டங்கள் அதிகமாகி வருகிறது என்பது நிதர்சனம்!!! இத்தகைய மாறுதலை, நல்லதாக எடுத்து கொள்வதா?? அல்லது கெட்டதாக எடுத்து கொள்வதா?? என்றும் புரியவில்லை!!!!!

தற்போது பின்பற்றப்படும் பல்வேறு தெய்வம் சார்ந்த சடங்குகளில், மற்றைய சமூகத்திடமிருந்து பெற்றவைகளே ஏராளம்!!! இவ்வாறாக சமூகம் உள்வாங்குவதை சரியா தவறா என்ற புரிதல் கூட, காலத்தினால் மட்டுமே தீரமானிக்கப்படும்.

இத்தகைய மாற்றங்களை, மதம் சார்ந்து மட்டும் புரிந்து கொள்வதில்லை எனக்கு உடன்பாடில்லை!!! நவீன பொருளாதார விழிமியங்களையும் இணைத்தே பார்க்க வேண்டும் !!!!
கொண்ட்டாட்டங்கள் சார்ந்த மனநிலை உள்ள மக்களை, நவீன பொருளாதார கூறுகள் எளிதாக உள்வாங்கி கொண்டுள்ளது என்பேன்!!!

திராவிட மண்ணில்………… மதம் சார்ந்த, கலாச்சாரம் சார்ந்த இத்தைகைய மாற்றங்களை நல்லவையா/கெட்டவையா என்பதை காலத்தின் பிடியிலே விட்டு விட்டு வேடிக்கை பார்ப்பதே, கலாச்சாரத்தை முழுமையாக உள்வாங்கியவனின் புரிதலாக இருக்கும்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


Wednesday, August 16, 2017

வடகிழக்கு பருவ மழை- நோய் தடுப்பு முறைகள்


வடகிழக்கு பருவ மழையின் தொடக்கத்தினால், கோயமுத்தூர் மற்றும் கன்னியகுமாரி சார்ந்த பகுதிகளில், மழை பெய்ய தொடங்கியுள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும், வெப்ப சலனத்தினாலும் மேலடுக்கு சுழற்சியினாலும், அங்கங்கே மழை பெய்து வருகிறது. இந்த பருவ கால மாற்றத்தினால், காய்ச்சல், சளி போன்ற மழை கால நோய்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம். அதிலும் வைரஸ் காய்ச்சல் அதிகமாக வாய்ப்புள்ளது. இந்நோய்களை, வந்த பின் காப்பதை விட, வரும் முன் காப்பதே சிறந்தது;

#காக்கும்_முறைகள்

எந்த குடிநீரையும் காய்ச்சி, வடிகட்டி வைத்து குடிக்க வேண்டும்.

தண்ணீர் தொட்டிகளை மாதம் இருமுறை சுத்தம் செய்யுங்கள்.

சமையலறை மற்றும் கழிப்பறை போன்றவற்றை தினமும் சுத்தம் செய்வது அவசியம்.

சுற்றுபுறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். காலி பாட்டில்கள், காலி டப்பாக்கள், உடைந்த பானைகள், பழைய டயர் போன்ற தண்ணீர் தேங்க கூடிய பொருட்களை அகற்ற வேண்டும். தண்ணீர் தேங்குவதை தவிர்த்தாலே, கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்கலாம்.

சாப்பிடும் முன்னர், கைகளை நன்றாக கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும்.

எளிதாக சீரணமாகும் உணவு பொருட்களை உண்ண வேண்டும். மூன்று வேளைகளும் நேரம் தவறாமல் உணவு எடுத்து கொள்ள வேண்டும். நொறுக்கி தீனிகளை குறைக்கவும்.

உணவு சமைக்கும் போது, இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி பொருட்களாக, மிளகு, மஞ்சள், இஞ்சி, பூண்டு, வெங்காயம் போன்ற அஞ்சறை பெட்டி உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும்.

காய்ச்சல் மற்றும் சளி போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்கு, அனைத்தும் அரசு சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

#நிலவேம்பு_குடிநீர்

5 கிராம் சூரணத்தை, 200 மிலிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். சுமார் 50 மிலிட்டர் வரும் வரை சுண்ட வைக்க வேண்டும்.

நிலவேம்பு குடிநீர் என்பது மொத்தம் ஒன்பது மருந்துகளின் கூட்டு சேர்க்கை. நிலவேம்பு, சுக்கு, மிளகு, வெட்டிவேர், விலாமிச்சு வேர், பற்படாகம், பேய்புடல், சந்தனம் மற்றும் கோரைக்கிழங்கு என 9 மருந்துகள் சேர்ந்தது!!!

குழந்தைகள்- 10 வயது வரை - 10 மிலி-15 மிலி வரை,
11-20 வயது வரை – 20 முதல் 25 மிலி வரை
அதற்கு மேல் - 50 முதல் 60 மிலி வரை

முன்னெச்சரிக்கை நடவெடிக்கையாக, 3-5 நாட்கள்
தினமும் உட்கொள்ளலலாம்.

#நோய்_வந்த_பிறகு

நிலவேம்பு குடிநீர் 3- 4 வேளைகள், மேற்கண்ட அளவுகளின் படி குடிக்கலாம். இரத்த தட்டுகள் குறைவாக இருப்பின், பப்பாளி இலைச்சாறு, அன்னாசி பழம், ஆடாதோடை மணப்பாகு சேர்த்து கொள்ளலலாம். (உரிய மருத்துவ ஆசோசனைக்கு பிறகு).

எந்த சுரம் மற்றும் காய்ச்சலையும் அலட்சியம் செய்யாதீர்கள். அருகில் உள்ள அரசு மருத்துவமனை / அரசு ஆரம்ப சுதாகார நிலையத்திற்கு செல்லுங்கள். மருந்து கடைகளில் மருந்துகளை வாங்கி உட்கொள்ளாதீர்கள்.

போலி மருத்துவர்களை அணுகாதீர்கள். முறையாக படித்த மருத்துவரையே அணுகுங்கள்.

நோய் தீவிர தன்மையை பொறுத்து, தேவைப்படின் உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெறுங்கள்.
குறைந்தபட்சமாக 3 நாட்கள் மேலும், சுரம் இருப்பின் இரத்த பரிசோதனை அவசியம்.

திட உணவுகளை தவிர்த்து, திரவ உணவுகளை எடுத்து கொள்ளலலாம். ஒய்வும், உறக்கமும் அவசியம்.

மரு. பெ. இரமேஷ் குமார்,
சித்த மருத்துவ அலுவலர்
அரசு மருத்துவமனை
வேதாரண்யம்


Monday, August 14, 2017

பப்பாளி மரமும் முதுமை நிலையும்


காலையிலே கண் விழித்து வானத்தை நிமிர்ந்து பார்க்கையில், கரும் மேகம் சூழ, அழகாய் காட்சியளித்தது!!! சற்று தலை தாழ்த்தி, பூமியை நோக்கி வருகையில், ஒரு பப்பாளி மரத்தின் முதுமை காட்சி சற்று கவலை கொள்ள வைத்தது!!!

சுமார் 30 அடி உயரமுள்ள பப்பாளி மரத்தின் நுனி கொழுந்து காய்ந்த நிலையில், மற்ற இலைகள் காய்ந்து சறுகாக இருந்தது. சுமார் 200-400 பழங்களை எங்களுக்கு கொடுத்திருக்கும்!!! பழங்களின் காம்புகள் பறித்த தண்டுகள் கூட, காயம் பதிந்த மனித உடலாக தெரிந்தது!!! இக்காட்சியெல்லாம், வீட்டு திண்ணையில் காலனுக்கு காத்திருக்கும் பாட்டியின் வேதனையை ஒத்ததாக தெரிந்தது!!!

சுமார் 4-5 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்திருந்தாலும், அதனுடைய வலுவினை தாண்டி, எத்தனை பழங்களை மனிதர்களுக்கு வழங்கி விட்டு, எதிர்காலம் தழைக்க பல ஆயிரம் விதைக்களை கூட தந்து, சில பப்பாளி கன்றுகளை கூட , தன்னுடைய வேரடியில் முளைக்க வைத்திருக்கிறது!!!

தன் பிள்ளைகளுக்காக, ஆயிரமாயிரம் தியாங்களை செய்து, நடக்கவொட்டா வயதில் கூட, வேப்பங்காய் பொறுக்கி பேரங்களுக்கு பிஸ்கட்டை வாங்கி தந்தாலும், உறையாடுவதற்கு வழியில்லாமலும் விரும்பிய உணவுகளுக்கு வழியில்லாமலும், காலனை விழி வைத்து காத்திருக்கும் பாட்டிகளை, முதிர்ந்த பப்பாளி மரத்தின் முதுநிலைக்கு ஒப்பிடுதல் தவறில்லை!!!

சுயநலம் நிறைந்த மக்கள் வாழும் பூமியில், பொதுமக்களுக்கு நலமாய் வாழ்ந்த பப்பாளி மரத்தின் இறப்பு நிலைக்கு வருந்துவதில் தவறில்லை!!! மனம் வெம்பி கண்ணீர் சிந்துவதில் பிழையில்லை!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Tuesday, August 8, 2017

சீனா- இரு புத்தகங்கள்- வெவ்வேறு கோணங்கள்


சமீபத்தில் படித்த இரு நூல்கள், சீனா தேசத்தை பற்றியவை!! ஒன்று சுபஸ்ரீ மோகன் எழுதிய சீனா அண்ணன் தேசம். மற்றொன்று சின்ரன் எழுதிய சீனா பெண்களின் சொல்லப்படாத கதை.

இரண்டும் நாணயத்தின் இரு பக்கங்களை போல், நேர் எதிரான இரு பக்கங்களை சொல்ல கூடியது. ஒன்றும் சீனாவின் பெருமைகளையும், மற்றொன்று சீனா பெண்களின் சொல்லான துயர பக்கங்களை கூறுவது!!!

சுபஸ்ரீ மோகன் அவர்கள், தன்னுடைய கணவனுடன் வேலை நிமித்தமாக சீனாவில் நிரந்தமாக தங்கும் போது, அவர் கண்ட விஷயங்களை எடுத்தியம்புகிறார். அதை படிக்கும் போது, நம் மனதில் உள்ள சீனா பிம்பத்தை எளிதாக உடைக்கிறார்.

பண்பாடு சார்ந்த நிறைய விஷயங்கள், தொடர்ந்து கடைபிடிக்கப்படுவது, நமக்கு ஆச்சரியம் அளிப்பதாகவே உள்ளது. பல இடங்களில், மூடநம்பிக்கையை விட்டு வெளிவராதது ஆச்சரியமே!!!

முதியோர்களுக்கு மரியாதையும், மக்களின் நேர்மை தன்மையும், ஒழுங்கும் இன்னும் இருப்பது முக்கியமாக கற்று கொள்ள வேண்டிய விஷயம்!!!

உலக நாடுகளின் பார்வையில், சீனா இன்னும் இரும்பு நாடாக காட்சியளிக்கிறது. அங்கு நடக்கும் பல்வேறு நிகழ்வு எளிதாக மறைக்கப்படுகிறது. ஊடக சுதந்திரம் அரசின் கட்டுபாட்டில் தான் இயங்குகிறது. அதனை தாண்டிய, சீனாவின் வளர்ச்சி வியக்கும் அளவிற்கு உள்ளது.

பொதுவுடமை கொள்கையை ஏற்று கொண்டு செயல்படும் நாடாக இருந்தாலும், கால ஒட்டத்திற்கு ஏற்ப உலகமாயமாக்கலையும் உள்வாங்கி கொண்டுள்ளது. அவ்வளர்ச்சி தொழிற்துறை மற்றும் விவசாய துறையை மட்டுமே முன்னிறுத்தியது!!! இப்போதும் தான் சேவை துறையில் காலடி எடுத்து வைக்கிறது.

சீனா வானொலி ஒன்றில், பணிபுரியும் சின்ரனின் அனுபவங்கள் முற்றிலும் வேறுமாறானவை!!! இந்த புத்தகம் வெளிவந்த போது, அரசின் அடக்குமுறைகளால், சீனாவினை விட்டு வெளியேறி, லண்டனில் தஞ்சமடைந்தார்.

அவருடைய வானொலி நிகழ்ச்சிக்காக, சுமார் 10 ஆண்டுகள் பயணம் செய்து, பெண்களின் நிலைமை படம் பிடித்து காட்டுகிறது. பெரும்பாலான இடங்களில், நம் மனம் வெம்பி கண்ணீர் சிந்துவதை தடுக்க முடியவில்லை!!!

பொதுவுடைமை கொள்கை என்ற பெயரில் நடக்கும் அநியாயங்களை, தோலுரித்து காட்டுகிறார். முழுமையான அடக்குமுறை குறித்த தகவல் இல்லையென்றாலும், பல இடங்களில், அத்தகைய அடக்கு முறையை பற்றி தொட்டு செல்கிறார்.

ஆணாதிக்க மனநிலை உலகமெங்கும் ஒரே மாதிரி தான் உள்ளது!!! பெண்கள் படும் கஷ்டங்களுக்கு எல்லையில்லை போலும்!!! பாலியல் வன்முறை, பெண் சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் என பெண்களின் துன்ப எல்லைகளை கடந்து சென்றிருக்கிறார்.

மேற்கண்ட இரு நூல்களை படித்து முடித்த பின்னர், சீனாவின் வளர்ச்சியை குறித்து, அதன் அரசியல், சமூக, மற்றும் பொருளாதார பிண்ணனியை தெரிந்து கொள்ள ஆர்வம் வந்து விட்டது!!! சீனா சிவப்பு தேசம் என்ற புத்தகம் உள்ளது!!! இதை தாண்டி, சீனா தேசத்தை புத்தகம் இருந்தால் கூறுங்கள் நண்பர்களே!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்