Thursday, October 11, 2018

கார்பரேட்டும், வெகுஜன புரிதலும்


” வெள்ளைக்காரன்னா பொய் சொல்ல மாட்டான் “ மாதிரியான கருத்தாக்கங்கள் மனித சமூகத்தில் அதிகம். படிக்காதவர்களை போன்று படித்தவர்களிடம் அதிகம். இன்னும் சொல்ல போனால், பகுத்தறிவு பேசுபவர்களிடம் கூட அதிகமாக இருக்கும். எ.கா. ” பெரியார் சொன்ன சரியாத்தான் இருக்கும்

சரி... விஷயத்திற்கு வருவோம்!! அதில் கார்ப்ரேட் என்றாலே தப்பு தான்!!! என்கிற புரிதல்.... இந்த உலகத்தில், 100 சதவீதம் சரியான விஷயம் உண்டா???? நிச்சயமாக கிடையாது. சில விஷயங்களை காலம் நல்லவையாக காட்டும். அவ்வளவு தான்!!!!

1900 களில் முதலாளித்துவ(கார்பரேட்) பொருளாதாரம் சிறந்தது என்பது போன்று தோற்றமளித்தது. 1930 ஆண்டுகளில், முதலாளித்துவம் பொருளாதாரம் விழுச்சியடைந்தது. 1940 களில் பொதுவுடமை பொருளாதாரம் சிறந்ததாக தோன்றியது. இன்றைய சூழ்நிலையில்..... முழு பொதுவுடைமை நாடு என்று எதுவுமில்லை.

கார்பரேட் என்பது நல்ல கருத்தாக்கம் என்று நிச்சயமாக சொல்ல முடியாது. அதே சமயத்தில் முழு மோசம் என்று கூற்றும் தவறு. இன்று செல்போன் விலை குறைவிற்கும், அதில் குறைவான செலவில் பேசும் ஜியோ நெட்வெர்க்க்கும் கர்பரேட்டின் பிரதிபலனே!!!

இன்னும் சொல்ல போனால்....நாம் தொடங்குகின்ற சிறிய கடைகள் கூட,கர்பரேட்டின் மினியேச்சர் தான்!!! உங்களுடைய வருமானத்தை.... அனைத்தும் தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுக்கிறார்களா?? என்ன!! நிச்சயம் கிடையாது. மனதளவில் அனைவரும் முதலாளிகளே!!! அம்பானி 100 கொடி சம்பாதிக்கிறார் என்றால், நாம் 1000 ரூபாய் சாம்பாதிக்கிறோம்... அவ்வளவு தான் வித்தியாசம்!!!!

உடனே!!! நாம் கார்ப்ரேட் ஆதரவாளன் என்று முத்திரை குத்தி விடாதீர்கள்... இவ்வுலகம் கார்பரேட்டால் ஆனது. அதில் வாழும் மனித மனம்... கார்பரேட் மனத்தினால் தான் ஆனது!!! ” கார்பரேட்டினை எதிர்த்தால்.... நம்மை நல்லவனாக உலகம் ஏற்கும் ” என்று போலி கற்பிதங்கள் எதற்கு???

கடைசியாக ஒன்று தான்..... கார்பரேட்டினால், இந்தந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்று நீங்கள் சொல்லலாம். நானும் அதை மறுக்க போவதில்லை!!! கார்பரேட் என்பது நன்மை தீமை கலந்த கருத்தாக்கம் தான் !!! அதில் தீமை மட்டுமே கிடையாது என்பது என்னுடைய புரிதல்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Tuesday, October 9, 2018

குழந்தை வளர்ப்பும் கட்டுபாடுகளும்


ஒய்வு பெற்ற அரசு ஊழியரிடம் இருந்து போன்!!! அவருடைய பேரனுக்கு உடல்நிலை சரியில்லை என்று அழைத்திருந்தார். பிரச்சனைகளை பற்றி… .அவர் ஆரம்பித்து வைக்க, அவருடைய மகன் முடித்து வைத்தார்!!! நீண்ட உரையாடல்!! சுருக்கி தருகிறேன்.

அவருடைய பேரனுக்கு மூன்று வயதாகிறது. பிரிகேஜிக்கு சென்று கொண்டிருக்கிறான். சரியாக சாப்பிடுவதில்லை!!! கோபம் அதிகமாக வருகிறது!!! கோபம் வந்தால் சுவற்றில் மூட்டி கொள்கிறான் அல்லது வீட்டில் உள்ள பொருளை உடைத்து விடுகிறான்என்பது அவனது பிரச்சனையின் சாரம்…..

வருமானதிற்காக…. கிராமத்தினை வீட்டு வெளியேறி, நகரத்தில் குடியேறி இருக்கிறார்கள். கணவன் மனைவி, மகன் என மூன்று பேரை தவிர வேறு யாருமில்லை!!! செல்ல மகன்எது கேட்டாலும் வங்கி தரும் பெற்றோர்கள்!! தாத்தாவும் பாட்டியும்!!! சுற்றுபுறத்தாருடன் அதிகமாக பழக்கம் இல்லை!!! புட்டிய வீட்டிற்குள்ளே அடைப்பட்டு கிடக்கிறான்!!! “ இது தான் அவர்களுடைய சூழ்நிலை!!!

ஆங்கில மருத்துவம் பார்த்திருக்கார்கள்!! இது ஒரு பிரச்சனையில்லை என்று சொல்லியிருக்கிறார்…. ஹோமியோபதியும் பார்த்து இருக்கிறார்கள்!! சிறிதளவு முன்னேற்றம் இருக்கிறது. அடுத்தது தான்எனக்காக அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. “

தினமும் 4-6 வரைக்கும் பெரிய சாக்லேட் சாப்பிடுகிறான். ஆதலால், உடலிற்கு தேவையான சக்தி முழுவதும், சாக்லேட்டின் மூலம் கிடைத்து விடுகிறது. அதை தாண்டி பசிக்கும் போது, பூரி கேட்டு சாப்பிட்டு விடுகிறான். அதை தாண்டி எப்படி பசிக்கும்????……

வீட்டுக்குள் அடைப்பட்டு கிடக்கிறான். வீட்டிற்கு வெளியே சென்று விளையாட ஆசைப்படுகிறான்; அனுமதி மறுக்கப்படுகிறது. அதனை கோபமாக வெளிப்படுத்துகிறான்; பொருட்களை உடைக்கிறான்;
சுவற்றில் முட்டி கொள்கிறான். ஆனால் பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்ததும், பிரச்சனையின் தன்மை சற்று குறைகிறது; அவனை வீட்டினை அடைப்பட்ட சூழ்நிலையை விட்டு விலகி, அருகில் உள்ள குழந்தைகளுடன் விளையாட ஆரம்பித்தாலே, அவனுடைய பிரச்சனை குறைந்து விடும்இது தான் தீர்வாக, அவருக்கு முன் வைத்தேன்!!!

--------------------------------------------------

இன்றைய சூழ்நிலையில்மேற்கண்ட பிரச்சனை என்பது ஒரு சாம்பிள்!!! இது போல்ஆயிரம் குழந்தைகளை தினமும் பார்க்க இயலும்.

நம்முடைய குழந்தை பருவ காலத்தை போல்இன்றைய குழந்தைகளின் காலத்தை எடுத்து கொள்ள கூடாது!! அவர்களினை மனதினை புரிந்து கொள்ளுங்கள்!!!! அவர்களின் உணர்வுகளுக்கு இடம் கொடுக்க வேண்டும்!!! அதற்காககெட்ட விஷயங்களுக்காக வளைந்து கொடுக்காதீர்கள்!!!

மேற்கண்ட நிகழ்விலும், ஒரு நகை முரண் உள்ளது. அவனுடைய சாக்லேட் வாங்கி கொடுப்பதில், அதீத சுதந்திரமும், அருகிலுள்ள குழந்தைகளுடன் விளையாடுவதில், அதீத கட்டுபாடும் விதிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் கட்டுபாடுகளும்சில இடங்களிலும் சுதந்திரமும் அளிக்கப்பட வேண்டும். அதன் எல்லைகளை வரையறுக்க தெரிந்திருக்க வேண்டும். அந்த புரிதல் பெற்றொருக்கு தெரிந்திருக்க வேண்டும். அதனை கண்டறிவதில் உள்ள சவால்களை முழுமையாக ஏற்று கொள்கிறேன்.

ஒரு வளமாக சமுதாயம் உருவாக்கம் என்பது இன்றைய குழந்தைகளின் வாழ்வியலை கட்டமைப்பதிலேயே உள்ளது.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Tuesday, October 2, 2018

பிக்பாஸ்_2


முன்குறிப்பு: பிக்பாஸ் பிடிக்காதவர்கள், டேக் டைவஜன் எடுத்து கொள்ளலலாம்.

பிக்பாஸ் 1 அளவிற்கு, பிக்பாஸ் 2 வெற்றி பெறவில்லை. போன வருடம் பிக்பாஸின் இறுதியில் எழுதிய கருத்துரை!!!

///// தமிழில் முதல் பாகம் அளவிற்கு, அடுத்தடுத்த பாகங்கள் வெற்றியடையுமா??? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே!!!! முதற்பாகத்தை பார்த்த பிறகு, நிகழ்ச்சிக்கு வர தயங்குவார்கள் அல்லது அப்படியே வந்தாலும், பிக்பாஸ் வீட்டில் நடிக்க ஆரம்பித்து விடுவார்கள்!!! போட்டியாளர்களிடையே சண்டை மூட்ட பிக்பாஸ் நிறைய கஷ்டப்பட வேண்டி இருக்கலாம்!!! பொறுத்திருந்து பார்க்கலாம்!!!/////

தன்னுடைய பெயர் கெட்டு விடுமோ என்ற காரணத்தினால், அனைவரும் safe game விளையாடினார்கள். வெளியுலகத்திற்காக நடித்தார்கள் என்றால் மிகையாது!!! நாம் பொது வாழ்விற்கு நடிக்காத நடிப்பு என்ன????

இது ஒர் வணிக நிகழ்ச்சி!! இதில் அறமெல்லாம் எதிர்பாக்க கூடாது. அவர்களுக்கு வணிகமே முக்கியம்!!! ஐஸ்வர்யாவினை வெளியேற்றாமல் வைத்திருந்தது அது தான் காரணம்!!! ஆனால், ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேலும் அறம் தவறும் பட்சத்தில், அந்த வணிகத்தின் மீது நம்பிக்கையில்லாத நிலை ஏற்படும். அந்த நிலை பிக்பாஸ் 2 விற்கு ஏற்பட்டது. “ நான் நேர்மையானவன் என்று நிருபீக்க, இறுதி போட்டியிற்காக ஒட்டுகள், update செய்து வெளியிட்டது.

மேலும் இதுவும் கலை வடிவத்தின் அடுத்த நிலை தான் !!!! இது தனிமனிதனின் உரிமைகள்/சுயம் சார்ந்ததாக இருந்தாலும், அந்நிகழ்ச்சியில் ஒப்பு கொள்ளும் போதே. அந்த தனி மனித சுதந்திரம் ஒடுக்கப்படுகின்றது!!!

இதை பார்ப்பதால் என்ன நன்மை ஏற்பட போகிறது என்றால்,….. தனிமனித புரிதல் சார்ந்ததே என்பேன்!!! பள்ளி கல்லூரிக்கு சென்று, நல்லவை கற்று கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன். ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது. எந்தவொரு சாதனமும், அதனை முழுமையாக உபயோகப்படுத்த தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! ஒரு சினிமாவிற்கு செல்கிறோம் என்ன கிடைக்கிறது ஒரு அக மகிழ்ச்சி மட்டுமே!!! ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்னொரு வக்கிரம் நிறைந்திருக்கிறது. அடுத்தவனின் அந்தரத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வம்!!! இதுவும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கும், மனித வாழ்வியல் வெற்றிக்கும் வித்தியாசங்கள் இருக்கவே செய்கின்றன. நிஜ வாழ்க்கையில் சில போலி தனங்களோடு தான் வாழ்ந்தாக வேண்டும். முழு போலித்தனமே சிறப்பாக வழிக்கு எடுத்துகாட்டாக கூட காட்டப்படும். ஆனால், பிக்பாஸில் பைத்தியகாரனாக இருக்கும் ஐஸ்வர்யா, ரன்னர் அப் வரை கொண்டு செல்வார்கள். Diplomatic செயல்படுவது என்பது பிக்பாஸில் தோல்வியை தரும். ஆனால் நிஜ வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

ஐஸ்வர்யா, மகத், மும்தாஜ், பொன்னம்பலம், நித்யா போன்ற சிற்சில பிரச்சனைகள் வைத்து, பிக்பாஸினை ஒட்டினார்கள். பிரச்சனைகளே பிக்பாஸ் வெற்றிக்கு ஆதாரங்கள்!!!

நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமலின் பணி சிறப்பானது என்பேன்!!! சொல்லப்போனால், இவர் இல்லாமல் இருந்தால், நிகழ்ச்சி தோல்வியை சந்திக்க கூட வாய்ப்புள்ளது!!! அறிவுரைகள், வாழ்க்கை புரிதல்கள், சினிமாவின் நினைவுகள் என அனைத்து நிலைகளிலும் செவ்வானே பணியாற்றினார்.

பிக்பாஸின் பிம்பங்கள் அனைத்தும் உண்மை என்று நினைக்க வேண்டாம். பல நேரங்களில், அடுத்தவர்களின் எதிர்மறை பிம்பம். இன்னொருவரை நல்லவராக எடுத்துரைக்கிறது. அதில் ஒவியா, மும்தாஜ் போன்றவர்களை சொல்லலாம். சிலர் எப்போதும் நல்லவர்களாக வலம் வருவார்கள். அது ரித்விகாவை சொல்லலாம்.

எனக்கு எந்தளவில், பிக்பாஸ் உபயோகம் என்றால், மனித உணர்வுகள், உணர்வு சார்ந்தவை உளவியல் ரீதியாக புரிந்து கொள்ள உபயோகமாக இருந்தது!!!!

நாம் எப்போது கருத்தியலோடு மட்டுமே பயணிக்க
இயலாது. வாழ்க்கை போரடிக்க ஆரம்பிக்க விடும். இது மாதிரியான ஒன்றுமில்லாத விஷயங்களை சேர்த்தே பயணிக்க வேண்டும்.

முக்கியமாக……எழுத்தாளர் சுரேஷ் கண்ணன், பிக்பாஸ் 2 பற்றி, முடிந்தவரை நடுநிலையோடு எழுதினார். அவருக்கு வாழ்த்துகள்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்