முன்குறிப்பு:
பிக்பாஸ் பிடிக்காதவர்கள், டேக் டைவஜன் எடுத்து கொள்ளலலாம்.
பிக்பாஸ் 1 அளவிற்கு,
பிக்பாஸ் 2 வெற்றி பெறவில்லை. போன வருடம் பிக்பாஸின் இறுதியில் எழுதிய கருத்துரை!!!
///// தமிழில்
முதல் பாகம் அளவிற்கு, அடுத்தடுத்த பாகங்கள் வெற்றியடையுமா??? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே!!!!
முதற்பாகத்தை பார்த்த பிறகு, நிகழ்ச்சிக்கு வர தயங்குவார்கள் அல்லது அப்படியே வந்தாலும்,
பிக்பாஸ் வீட்டில் நடிக்க ஆரம்பித்து விடுவார்கள்!!! போட்டியாளர்களிடையே சண்டை மூட்ட
பிக்பாஸ் நிறைய கஷ்டப்பட வேண்டி இருக்கலாம்!!! பொறுத்திருந்து பார்க்கலாம்!!!/////
தன்னுடைய பெயர்
கெட்டு விடுமோ என்ற காரணத்தினால், அனைவரும் safe game விளையாடினார்கள். வெளியுலகத்திற்காக
நடித்தார்கள் என்றால் மிகையாது!!! நாம் பொது வாழ்விற்கு நடிக்காத நடிப்பு என்ன????
இது ஒர் வணிக நிகழ்ச்சி!!
இதில் அறமெல்லாம் எதிர்பாக்க கூடாது. அவர்களுக்கு வணிகமே முக்கியம்!!! ஐஸ்வர்யாவினை
வெளியேற்றாமல் வைத்திருந்தது அது தான் காரணம்!!! ஆனால், ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேலும்
அறம் தவறும் பட்சத்தில், அந்த வணிகத்தின் மீது நம்பிக்கையில்லாத நிலை ஏற்படும். அந்த
நிலை பிக்பாஸ் 2 விற்கு ஏற்பட்டது. “ நான் நேர்மையானவன்” என்று நிருபீக்க,
இறுதி போட்டியிற்காக ஒட்டுகள், update செய்து வெளியிட்டது.
மேலும் இதுவும்
கலை வடிவத்தின் அடுத்த நிலை தான் !!!! இது தனிமனிதனின் உரிமைகள்/சுயம் சார்ந்ததாக இருந்தாலும்,
அந்நிகழ்ச்சியில் ஒப்பு கொள்ளும் போதே…. அந்த தனி மனித சுதந்திரம் ஒடுக்கப்படுகின்றது!!!
இதை பார்ப்பதால்… என்ன நன்மை ஏற்பட
போகிறது என்றால்,….. தனிமனித புரிதல் சார்ந்ததே என்பேன்!!! பள்ளி கல்லூரிக்கு சென்று,
நல்லவை கற்று கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன். ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது.
எந்தவொரு சாதனமும், அதனை முழுமையாக உபயோகப்படுத்த தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! ஒரு
சினிமாவிற்கு செல்கிறோம் என்ன கிடைக்கிறது… ஒரு அக மகிழ்ச்சி மட்டுமே!!! ஆனால், பிக்பாஸ்
நிகழ்ச்சியில் இன்னொரு வக்கிரம் நிறைந்திருக்கிறது. அடுத்தவனின் அந்தரத்தை தெரிந்து
கொள்ளும் ஆர்வம்!!! இதுவும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின்
வெற்றிக்கும், மனித வாழ்வியல் வெற்றிக்கும் வித்தியாசங்கள் இருக்கவே செய்கின்றன. நிஜ
வாழ்க்கையில் சில போலி தனங்களோடு தான் வாழ்ந்தாக வேண்டும். முழு போலித்தனமே… சிறப்பாக வழிக்கு
எடுத்துகாட்டாக கூட காட்டப்படும். ஆனால், பிக்பாஸில் பைத்தியகாரனாக இருக்கும் ஐஸ்வர்யா,
ரன்னர் அப் வரை கொண்டு செல்வார்கள். Diplomatic செயல்படுவது என்பது பிக்பாஸில் தோல்வியை
தரும். ஆனால் நிஜ வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
ஐஸ்வர்யா, மகத்,
மும்தாஜ், பொன்னம்பலம், நித்யா போன்ற சிற்சில பிரச்சனைகள் வைத்து, பிக்பாஸினை ஒட்டினார்கள்.
பிரச்சனைகளே பிக்பாஸ் வெற்றிக்கு ஆதாரங்கள்!!!
நிகழ்ச்சியின்
தொகுப்பாளராக கமலின் பணி சிறப்பானது என்பேன்!!! சொல்லப்போனால், இவர் இல்லாமல் இருந்தால்,
நிகழ்ச்சி தோல்வியை சந்திக்க கூட வாய்ப்புள்ளது!!! அறிவுரைகள், வாழ்க்கை புரிதல்கள்,
சினிமாவின் நினைவுகள் என அனைத்து நிலைகளிலும் செவ்வானே பணியாற்றினார்.
பிக்பாஸின் பிம்பங்கள்
அனைத்தும் உண்மை என்று நினைக்க வேண்டாம். பல நேரங்களில், அடுத்தவர்களின் எதிர்மறை பிம்பம்…. இன்னொருவரை நல்லவராக
எடுத்துரைக்கிறது. அதில் ஒவியா, மும்தாஜ் போன்றவர்களை சொல்லலாம். சிலர் எப்போதும் நல்லவர்களாக
வலம் வருவார்கள். அது ரித்விகாவை சொல்லலாம்.
எனக்கு எந்தளவில்,
பிக்பாஸ் உபயோகம் என்றால், மனித உணர்வுகள், உணர்வு சார்ந்தவை உளவியல் ரீதியாக புரிந்து
கொள்ள உபயோகமாக இருந்தது!!!!
நாம் எப்போது கருத்தியலோடு
மட்டுமே பயணிக்க
இயலாது. வாழ்க்கை
போரடிக்க ஆரம்பிக்க விடும். இது மாதிரியான ஒன்றுமில்லாத விஷயங்களை சேர்த்தே பயணிக்க
வேண்டும்.
முக்கியமாக……எழுத்தாளர் சுரேஷ்
கண்ணன், பிக்பாஸ் 2 பற்றி, முடிந்தவரை நடுநிலையோடு எழுதினார். அவருக்கு வாழ்த்துகள்!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment