Thursday, October 11, 2018

கார்பரேட்டும், வெகுஜன புரிதலும்


” வெள்ளைக்காரன்னா பொய் சொல்ல மாட்டான் “ மாதிரியான கருத்தாக்கங்கள் மனித சமூகத்தில் அதிகம். படிக்காதவர்களை போன்று படித்தவர்களிடம் அதிகம். இன்னும் சொல்ல போனால், பகுத்தறிவு பேசுபவர்களிடம் கூட அதிகமாக இருக்கும். எ.கா. ” பெரியார் சொன்ன சரியாத்தான் இருக்கும்

சரி... விஷயத்திற்கு வருவோம்!! அதில் கார்ப்ரேட் என்றாலே தப்பு தான்!!! என்கிற புரிதல்.... இந்த உலகத்தில், 100 சதவீதம் சரியான விஷயம் உண்டா???? நிச்சயமாக கிடையாது. சில விஷயங்களை காலம் நல்லவையாக காட்டும். அவ்வளவு தான்!!!!

1900 களில் முதலாளித்துவ(கார்பரேட்) பொருளாதாரம் சிறந்தது என்பது போன்று தோற்றமளித்தது. 1930 ஆண்டுகளில், முதலாளித்துவம் பொருளாதாரம் விழுச்சியடைந்தது. 1940 களில் பொதுவுடமை பொருளாதாரம் சிறந்ததாக தோன்றியது. இன்றைய சூழ்நிலையில்..... முழு பொதுவுடைமை நாடு என்று எதுவுமில்லை.

கார்பரேட் என்பது நல்ல கருத்தாக்கம் என்று நிச்சயமாக சொல்ல முடியாது. அதே சமயத்தில் முழு மோசம் என்று கூற்றும் தவறு. இன்று செல்போன் விலை குறைவிற்கும், அதில் குறைவான செலவில் பேசும் ஜியோ நெட்வெர்க்க்கும் கர்பரேட்டின் பிரதிபலனே!!!

இன்னும் சொல்ல போனால்....நாம் தொடங்குகின்ற சிறிய கடைகள் கூட,கர்பரேட்டின் மினியேச்சர் தான்!!! உங்களுடைய வருமானத்தை.... அனைத்தும் தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுக்கிறார்களா?? என்ன!! நிச்சயம் கிடையாது. மனதளவில் அனைவரும் முதலாளிகளே!!! அம்பானி 100 கொடி சம்பாதிக்கிறார் என்றால், நாம் 1000 ரூபாய் சாம்பாதிக்கிறோம்... அவ்வளவு தான் வித்தியாசம்!!!!

உடனே!!! நாம் கார்ப்ரேட் ஆதரவாளன் என்று முத்திரை குத்தி விடாதீர்கள்... இவ்வுலகம் கார்பரேட்டால் ஆனது. அதில் வாழும் மனித மனம்... கார்பரேட் மனத்தினால் தான் ஆனது!!! ” கார்பரேட்டினை எதிர்த்தால்.... நம்மை நல்லவனாக உலகம் ஏற்கும் ” என்று போலி கற்பிதங்கள் எதற்கு???

கடைசியாக ஒன்று தான்..... கார்பரேட்டினால், இந்தந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்று நீங்கள் சொல்லலாம். நானும் அதை மறுக்க போவதில்லை!!! கார்பரேட் என்பது நன்மை தீமை கலந்த கருத்தாக்கம் தான் !!! அதில் தீமை மட்டுமே கிடையாது என்பது என்னுடைய புரிதல்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment