Thursday, December 31, 2015

பயணங்களும் வாழ்க்கை பயணங்களும்

மாம்பலம் இரயில் நிலையம்..

தாம்பரம் செல்லக் கூடிய மின்சார ரயில் ப்ளாட்பாரத்தை வந்தடைந்தது. காலியான இருக்கைகளில் அமர, படிக்கட்டுகளில் கவனம் செலுத்தி பயணிகள் ஏற முயற்சி செய்தனர். ஆனால் படிக்கட்டுகளில் அருகிலேயே, ஒருவர் கால்நீட்டி உறங்கி கொண்டிருக்கிறார். தூக்க மாத்திரை கொடுத்தால் கூட, நாம்மால் அப்படி தூங்க இயலாது என்று நினைக்கிறேன். அவரின் உடலினை தாண்டி, எதோ ஒட்ட பந்தயத்தில் உலக சாதனை புரிந்த்து போல், இருக்கைகள் நிரப்பப்படுகின்றன. இவையெல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விடுகின்றன.

இவனுக்கு அறிவு இருக்கா??? முட்ட பயலா…. பீப்….பீப்பீப் …” என்றெல்லாம் மனத்திற்குள் தீட்டி கொண்டே, அவரவர் இருக்கையை ஆக்கிரமிப்பு செய்திருக்க வேண்டும். எனக்கும் முதலில் கோபம் வந்தது உண்மை என்றாலும், பிறகு  அந்த நபரினை செய்கை எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. இந்த மாதிரியான ஆச்சரியமான பல விஷயங்களை , வாழ்க்கையில் பயணங்கள் வழியே பெற்று கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் ரூசி பார்ப்பது தான் கிடையாது.

பழங்கால நடைப்பயணம் முதல் இன்றைய செவ்வாய் கிரகம் பயணம், ஏதேனும் ஒர் வகையான உள களிப்பை தாண்டி, அனுபவத்தையும், அறிவினையும், பண்பினையும் தந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அவற்றில் சில மட்டுமே, நங்கூரமாய் மனதில் பதிகிறது. மற்றவையெல்லாம் காலை நேர பனி போல் நொடி பொழுதில் மறைகிறது.

பேருந்திகளிலும் புகை வண்டியிலும் காதில் கெண்ட் செட்டை மாட்டி, பாடல் கேட்டு ரசிப்பவர்களும், செல்போனை உலகமாக கருதுபவர்களும்  தான், இன்றைய உலகில் அதிகம். அதை தாண்டி, புற உலகில் வாழ்க்கையை தேடுபவர்கள் வெகு சிலரே.

பொருளாதாரம் சார்ந்து வாழும் சமூக நிலையில், பயணங்களை பொருளீட்டுதல் அடிப்படையில் களம் கண்பது இயற்கையே. ஆனால், அதை தாண்டி, வாழ்வியலை செம்மைப்படுத்துவதற்கான பாடமாக எடுத்து கொள்பவர்கள் சிலரே. அந்த படிப்பினை சதுரகிரி மலைப்பயணம், எனக்கு தந்தது என்றால் மிகையல்ல. (http://adakonjamnillupa.blogspot.in/2014/11/blog-post_65.html )

வாழ்வியல் தத்துவங்களை புரிந்து கொள்வதற்கு புத்தகங்கள் மட்டுமல்லாது, வெளி உலக தேடுதலும் முக்கியம். அதில் பயணமும் ஒன்று. “ நடிப்பு என்பது காசு கொடுத்து கற்று கொள்வதல்ல…. வெளியே நிறைய கொட்டி கிடக்கு… நாம தான் தேவையான அளவு எடுத்துகணும் “ என்று நடிகர் சந்தானம் ,ஜெய்யிடம் சொல்வார். அதை போல், பயணங்களிலிருந்து பெற்று கொள்ள கூடிய வாழ்வியல் புரிதல் தனி மனிதனை பொறுத்தது.


பயணங்கள் ஆத்மார்த்தமானவை: அலுவலகங்களிலும், இல்லங்களிலும் மனதை திறந்து யோசிப்பதற்கு நேரம் இருப்பதில்லை. பயணங்களிலாவது, சிறிது நேரம் மனதினை திறந்து வையுங்களேன்!!!!  

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார் 

No comments:

Post a Comment