Friday, December 25, 2015

கிரிக்கெட்டும் போலி பெண்ணடிமைவாதியும்

கிரிக்கெட்டில் இந்தியா வென்றால், கேட்பன் தோனியையோ அல்லது கங்குலியையோ புகழ்ந்து தள்ளுவோம்... அதற்கு பின்னால் உழைத்த பேட்ஸ்மேனையோ அல்லது பவுலரையோ நினைத்து பார்க்க மறந்து விடுவோம். அதை போல்...

தோற்றால், தோனி அல்லது கங்குலியை மட்டுமே விமர்சிப்போம். அதற்கு பின்னால் இருந்தவர்களை, நமக்கு வசதியாக மறந்து விடுவோம்.....
இதே மனநிலை, எல்லா நிலைகளிலும், எல்லா காலங்களிலும் நீக்கமற நிறைந்தே இருக்கிறது. அதற்கு சமீப கால உதாரணம் சிம்புவின் பீப் பாடல்!!!! நிர்பயா பாலியல் தொல்லையும்!!!

வேத காலம் தொடங்கி, இன்று வரை பெண்களின் மீதான வன்முறைகளின் வடிவங்கள் மாறுகிறதே தவிர தன்மைகள் மாறவில்லை.

ஒர் தமிழ் பதத்திற்காக, சிம்புவை மட்டும் குற்றவாளி கூண்டில் நிறுத்துவது, நான் பெண்ணடிமைத்தனத்திற்கு ஏதிரானவன் என்ற போலித்தனத்தை தவிர வேறு எதுவும் இல்லை!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

No comments:

Post a Comment