Saturday, November 28, 2015

எது அழகு#3

“நான் அழகு” எனும் போது
உன்னில்
மனக்களிப்பை உண்டாக்கிய
நைய்யாடித்தனம் அழகு!!!

சுவையற்ற உணவானாலும்
சுவையான வாழ்க்கைக்காக
தலைவிக்காக
தலைவன் சொல்லும்
பொய் அழகு!!!

பெண்மையை கவர்வதற்காக
ஆண்மையின்
வெகுளித்தனமான
நாணம் அழகு!!!!

சுவையற்ற நகைக்காக
நகைச்சுவையென புன்னகைக்கும்
பெண்ணின்
வெகுளித்தனம் அழகு!!!!

மூத்தோர் முன்னிற்கையில்
ஆண்மையின்
அதிகார பேச்சிற்கு
பெண்மையின்
பொய்மையான பயம் அழகு!!!!

உள்ளத்தில்
ஊடல் இருந்தாலும்
புறத்தில்
கணவினை விட்டு கொடுக்காத
மனையாளின் அன்யோன்யம் அழகு!!!

குழவியின்
மழலை முகத்தை காண
பொறுக்க முடியாத பிரசவ வலியை
பொறுத்து கொள்ளும்

தாய்மை அழகு!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment