Saturday, November 28, 2015

எது அழகு#2

கடற்கரையிலே
யாருமான வேளையிலே
யாருமற்ற மனநிலையோடு
காதலர்களை படைத்த
இறைவனின் படைப்பியல் அழகு!!!!

தாய் பசுவினை பார்த்து
’அம்மே’ என்றழைக்கும்
கன்றின் தமிழ் அழகு!!!!

மக்களின் அறியாமையை
தேர்தலில்
வாக்குகளாக மாற்றும்
அரசியல்வாதியின் தொழிலழகு!!!

எத்தகையான
வெறுப்புகளை தாண்டி
நோயாளியிற்கு
பணிவிடை செய்யும்
செவிலியின் கடமை அழகு!!!!

எளியவனின்
வயிற்று அக்கினியை அணைக்க
அண்ணமிடும்
தாயின் ஈகை அழகு!!!!

வயிற்று பிழைப்புக்காக
உடல் மூடமானாலும்
சுமை தூக்கும் தொழிலாளியின்
தன்னம்பிக்கை அழகு!!!!

பெற்ற உணவினை
மற்றவரும் பெற்றிட
கரையும் காகத்தின்

பகிர்தல் அழகு!!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment