”பெண் கல்வியே, பெண்ணடிமைத்தனம் விடுப்பட்டு விடுதலை
அடைவதற்கான வழி ” என்றார்
பெரியார். அந்த போராட்டம், இன்றைய
நிலையில் பெரிதளவு மாற்றத்தை ஏற்படுத்து இருக்கிறது எனலாம். கல்வியினால்
வேலைவாய்ப்பு பெற்று, சமூக மற்றும்
பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்து இருக்கிறது. இந்திரா நூயி, அருந்ததி பட்டசாரியா, உஷா சங்குவான் போன்ற பெண்கள் அதிகாரத்தின்
உயர்நிலையில் இருக்கின்றனர். செபி கூட, கம்பெனிகளில்
பெண் இயக்குனர்கள் நியமனத்தை கட்டாயப்படுத்தி உள்ளது.
கல்வி மற்றும்
வேலைவாய்ப்பு பெற்றதன் மூலம், பெண்ணடிமைத்தனம்
நீக்கப்பட்டு விட்டது என்று கூப்பாடு போட முடியாது. சிறிதளவு பொருளாதார மற்றும்
சமூக சுதந்திரத்தை மட்டுமே தந்திருக்கிறது. முழு சுதந்திரத்திற்கு, சில காலம் கடந்து போக வேண்டியுள்ளது. இன்றைய
நிலையில் வேலைக்கு போகிற பெண்கள், அதற்காக
அதிகளவு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது.
பெண்கள் வேலைக்கு
செல்கிறார். அதனால், பெண்களுக்கு
முழு பொருளாதார சுதந்திரம் கிடைத்து விட்டது என்று சொல்ல முடியவில்லை. இன்றும்
பொருளாதார விஷயத்தில் ஆண்களை சார்ந்த நடக்க வேண்டி உள்ளது என்பதை நீயா நானா
நிகழ்ச்சி தெளிவுப்படுத்தியது.
மேற்கண்டதை
விவாதிப்பதற்கு முன்னர், சில விஷயங்களை
ஆய்வோம். இந்திய சமுதாய கட்டமைப்பில், ஆண்கள்
வருமானம் ஈட்டுபவர்களும், பெண்கள்
வீட்டை நிர்வாகிப்பவர்களும் உள்ளனர். இதனால் தான், ஆண்களின் மீதான பொறுப்பு பெரிதாக
பேசப்பட்டது (அது ஒரு வித மன அழுத்தமும் கூட). இதனால் தான், ஆண்கள்
எப்போதும் பொருளாதார நிலை சார்ந்தே யோசிக்க வைக்க வேண்டிய அவசியம்
ஏற்பட்டது.
ஆனால், பெண்களின்
மனநிலை, பொருளாதாரம்
சாராதாகவே இருந்தது.
அப்படிப்பட்ட
நிலையில், இன்றைய
நிலையில் பொருளாதார சுதந்திரமும் கேள்விக்குறியாகவே உள்ளது. விலைவாசி உயர்வு என்ற
காரணத்தினால் , இருவரின்
சம்பளமும் குடும்ப செலவுகளுக்கு பயன்படுகிறது என்கிற வாதம் முன்வைக்கப்படுகிறது.
இதனைத் தாண்டி நம்முடைய தேவைகளை அதிகரித்து கொண்டோம் என்பதை மறுக்க இயலாது.
பெண்களின்
கல்வியை வைத்து நடக்கும் பொருளாதார சுரண்டலையும் சொல்ல வேண்டிய சொல்ல வேண்டிய
அவசியமாக உள்ளது, பெரும்பாலான தனியார்
பள்ளி மற்றும் கல்லூரிகளில், பெண்களே
பணியமர்த்தப்பட்டு, குறைந்த
சம்பளம் வழங்கப்படுகிறது.
பெண்கள்
வேலைக்கு செல்லுவதால், அதற்கு இணையான
கணவனை தேடவே, இந்த சமுதாயம்
வலியுறுத்துகிறது. அப்படிப்பட்ட நிலையில், ஏற்கனவே உள்ள கணவன் சம்பளத்துடன் கூடுதலாகவே, பல நேரங்களில் அமைகிறது. மாறாக, ஒரு குடும்பத்தின் பொருளாதார நிலையினை
முற்றிலும் தங்குவதாக அமையவில்லை. இதனால், சமூக பொருளாதார ஏற்ற தாழ்வு அதிகரிக்குமே
தவிர, சமூகத்தில்
பொருளாதார நிலைக்கு வித்திடாது.
எப்படிப்பட்டதாய்
அமையினும், பெண் கல்வி
சமூகத்தில் பெரியதோரு மாற்றத்தை ஏற்படுத்தும். அதற்கு சில காலம் காத்திருக்க
வேண்டும். (அதற்கு பிறகு, ஆண்
அடிமைத்தனம் போராட்டம் ஆரம்பிக்கும்- வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ்)
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||||||
|||||||||||உங்களை போல் ஒருவன்|||||
||||||||||||||||||||வேதை குமார் |||||||||||
No comments:
Post a Comment