Thursday, November 26, 2015

ஈழம்- கவிதை

பலிக்கூடம்
ஆம்….. பலிக்கூடம் தான் அது
உறுப்புகளை பிரித்தறிய முடியாமல்
ஓன்றாகவே கொத்துகின்றன
பருந்துகளும் காகங்களும்…..

பொட்டல் காடுகளில்
தினம் தினம் தீபாவளி
நரகசுரனை
கொன்றதற்காக அல்ல….
ஈன தமிழனின்
இன படுகொலைக்காக…….

தாயின் மார்பு கூட
குருதியாகவே சிந்துகிறது
குழவிக்கு…….

காமனின் பார்வையில்
விரயம் ஆகாத
விவாகங்கள் தினந்தோறும்……


ராவணின்
காம மயக்கத்திற்கு
இலங்கையை அழித்த
அனுமானின் தீப்பொறி
இன்றும்

அழித்து கொண்டிருக்கிறது……..
(ஈழம் இறுதி கட்ட போரின் போது எழுதியது)

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment