Saturday, November 28, 2015

எது அழகு#1

மார்கழி மாத பனியில்
நடுங்கும் ஜந்துகளுக்கு……..
ஞாயிறு தரும்
வெப்பம் அழகு!!!!!

சூரியன் தலை சாய்ந்து
கதிரவனை வரவேற்கும்
சூரியனின்
செங்கதிர்கள் அழகு!!!!!

முழுமுதிர் நிலவில்
காதலியின்
முக அழகினை காட்டும்
மதியின் ஒளியழகு!!!!!

தன் குஞ்சுகளிடம்
இரை தேட
விடைபெற்று செல்லும் பறவையின்
கிச்சுக்குரல் பேச்சழகு!!!!

தாயை தேடி
தவழ்ந்து வரும்
சின்ன குழந்தையாம்
ஆற்றின் வேகம் அழகு!!!!

எங்களுக்காக
உங்களுக்கு சண்டையிட்டு
கண்ணீர் சிந்தும்
மின்னல் ஒளி அழகு!!!

இனப்பெருக்கத்திற்காக
மதுவை சிந்தி
வண்ணத்துப்பூச்சியினை வரவழைக்கும்
மலரின் வண்ணம் அழகு!!!!

இதழோடு
இதழ் சேர துடிக்கும்
சூரியகாந்தி பூவின்
பகலவனின் மீதான

மோகம் அழகு!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


No comments:

Post a Comment