எதிர் எதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்கும் என்ற விதி, காந்தத்திற்கு
மட்டுமல்ல. மனித வாழ்வியலிலும், ஆண்- பெண் ஈர்ப்பை போலவே உள்ளது. இன கவர்ச்சி என்ற
பெயரில் ஹார்மோன்கள் செய்யும் அற்புதங்கள் அதிகம். ” காதல் ” என்ற
வார்த்தை கூட போதை தருவதாக அமைந்து விட்டதில் ஆச்சரியம் ஏதுவுமில்லை.
காதலை எது தீர்மானிக்கிறது??? என்ற கேள்வி, நம்முள்
எப்போதும் ஒலித்து கொண்டிருக்கிறது. ” ஹார்மோன் ” என்று
ஒற்றை வரியில் அறிவியல் பதில் சொன்னாலும், அதன்
தாண்டி சில விஷயங்களை ஆராய்வோம்.
பெண்ணின் மீதான ஒரு ஆணின் காதலை முன்னிலைப்படுத்துவதாக, பெரும்பாலும்
பெண்ணின் உடல் அழகு அமைகிறது. அந்த காதலை நிலைநிறுத்தப்பட்டு அடுத்த நிலைக்கு
எடுத்து செல்வதற்கு, பல்வேறு காரணங்களை கூறலாம். ” பெண்ணாவள்
அழகு தேவதை “ என்ற காப்பிய காலத்து அளவுகோல்களே, இன்று
வரை ஆணின் காதலுக்கு முதற்காரணமாகிறது.
” ஆணிற்கு வீரமே அழகு ” என்ற அளவுகோல் பன்னெடும் காலமாக சமூகத்தில் உலாவி
வருகிறது. தன்னிடம் இல்லாத ஒன்றை நோக்கிய மனதின் பயணம், பெண்ணிற்கு
அழகு என்ற அளவுகோலினால், ஆணினால் ஈர்க்கப்படுகிறது.
அதே சமயத்தில், பெண்ணின் காதலை
தலைகீழாகவே உள்ளது. பெண்ணடிமை சமுதாயத்தில், பெண்ணுக்கு
அழகு முக்கியமில்லை. அதை தாண்டிய, தன்னுடைய சுய பாதுகாப்பே முக்கியம் என்று பெண்
எண்ணுகிறாள். அதற்கான ஆணையே தேடுகிறாள் (பொருளாதார பாதுகாப்பு சேர்த்து). ” ஆணின்
வீரமே அழகு ” என்ற
சமூக அளவுகோல், பெண்ணிற்கு ஈர்க்கப்படுகிறது.
காதலை வெளிப்படுத்துவதற்கான ஆணின் சமூக சுதந்திரம், பெண்ணிற்கு
நிச்சயம் இல்லை. சுய பாதுகாப்பு என்ற பெண்ணின் அளவுகோலை ஆராய்வதற்கு காலம்
தேவைப்படுகிறது. அதனால் தான், பெண் காதலை ஏற்று கொள்வதற்கு தாமதம் ஆகிறது. ஆனால், ஆணிற்கு
உடலழகை ஆராய்வதற்கு, நிமிட நேர புன்னகை போதும்.
எனவே காதலீப்பீர்!!!
ஆண்-பெண் இன கவர்ச்சி மட்டுமே காதல் அல்ல
உள பூர்வமான காதலை,,,
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment