Wednesday, August 3, 2016

கபாலி படமும், உணர்ச்சி குவியல் மறைவும்

கபாலி படம் பார்த்த பெரும்பாலனோர், சொன்ன விஷயம் இது தான்!!!! இரண்டாவது பாதியில், மனைவியை தேடுவதில், அதிகம் நேரம் எடுத்து கொண்டார் ரஜினி... அது போர் அடிப்பது போல் இருந்தது.
இவ்வாறு போர் அடிப்பது போன்றதொரு மன நிகழ்விற்கு உண்மையான காரணம் படமா?? அல்லது நம்முடைய மனநிலையா?? நம்முடைய மனநிலையே, முதன்மை காரணமென்பேன்.
இதே மாதிரியான சோக நிகழ்வுகளை, மனம் நெகிழ பார்த்த தருணங்கள் பல உண்டு. ஆனால், மனம் என்னவோ.... அந்த சோகத்தை கூட குறைந்து கொள்ள விழைகிறது. அதன் வெளிப்பாடு... இத்தகைய கூச்சல்களின் வெளிப்பாடு....
நவீன சமூக வளர்ச்சியின் குறியீடாக.... உணர்ச்சி ததும்பல்களை குறைக்கவே எண்ணுகிறது. அன்பு, சோகம், காதல், காமம், பாசம், நட்பு போன்ற அக உணர்ச்சிகள் மனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது. அதில் நாமும் அகப்பட்டு கொண்டோம்... அவ்வளவு தான் !!!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment