Thursday, August 25, 2016

ஒலிம்பிக் போட்டியும், நமது மனநிலையும்

ஒலிம்பிக் போட்டிகள் முடிந்து, இரண்டு நாட்களாகி விட்டது. இன்னும் ஒரு வாரம் கடந்தால், ஒலிம்பிக் போட்டியை பற்றியே மறந்து விடுவார்கள். TNPL வந்துவிட்டதால், சென்னை, மதுரை, கோவை என்று பேச ஆரம்பித்து விடுவார்கள். அதனால், நான் நினைத்த செய்தியை... இப்போதே சொல்லி விடுகிறேன்.
ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க வேட்டை பற்றிய விவாதம் என்பது மிகப்பெரியது. அதனை தாண்டிய, நமது மனநிலை பற்றியே செய்தியே.... இது!!!!
பிவிசிந்து, தீபா, சாக்ஸி மாலிக் போன்றவர்களின் திறமையை புகழ்பாடும் நாம்...... அபிநவ் பித்ரா, ஜீது ராய் மற்றும் போபண்ணா-சானியா போன்றோரின் திறமையை... ஏன் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
பிவிசிந்து, தீபா, சாக்ஸி போன்றவர்களின் திறமையின் மீது எள்ளவும் ஐயமில்லை. அதே போல், அவர்களை சிறுமைப்படுத்தும் நோக்கிலும் எழுதவில்லை.
அபிநவ் பித்ரா நூலிழையில் வெண்கலத்தை தவறவிட்டவர்(4 வது இடம்). சானியா- போபண்ணா ஜோடி வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் தான் தோல்வியடைந்தனர், ஜீது ராயும்... இறுதி போட்டியில் 8 ம் இடம் பிடித்தார்.
நடுநிசியில் தீபாவின் இறுதி போட்டியை கண்டவர்களில் எத்தனை பேர்..... அபிநவ் பிந்தராவின் இறுதி போட்டியை பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை. அதே போல் போபண்ணா- சானியாவின் வெண்கல பதக்கத்திற்கான போட்டியை பார்த்திருப்பார்களோ!?!?!?
இதற்கெல்லாம் காரணமாக... இரண்டு விடயங்கள் இருக்கலாம் என்று தோன்றுகிறது.
1. பிவிசிந்து, தீபா, சாக்ஸி மாலிக் போன்றவர்கள்.... இந்த ஒலிம்பிக்கின் மூலம் திறமையானவர் என்ற வெளியுலக புரிதல் ஏற்பட்டது. அதனால்.. அவர்களுடைய ஒவ்வொரு வெற்றிப்படியும் பெரிதாக தெரிந்தது. பெரிதாக பேசப்பட்டது. ஆனால், அபிநவ் பித்ரா, ஜீது ராய் மற்றும் போபண்ணா-சானியா போன்றவர்கள், ஏற்கனவே திறமையானவர்கள் என்ற புரிதல் இருந்தது. அவர்களின் வெற்றி பெரிதாக பேசப்படவில்லை.
2. எதிர் பாலின கவர்ச்சி/போலி பெண்ணியம்....
மேற்கண்டவர்கள் மட்டுமல்லாது..... அனைத்து வீரர்களும் திறமையானவர்களே... காலமும் சூழ்நிலையும் சிலருக்கு வெற்றியையும், சிலருக்கு தோல்வியாகவும் அமைந்து விடுகிறது.. அதீத புகழ்ச்சியும், அதீத அவநம்பிக்கையும் நல்லதல்ல...

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment