இறையன்பு அவர்கள், கடந்த வார புதிய தலைமுறையில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். ஒரு இனிப்பை உண்ணும் போது, சுவையின் அருமை தெரியும். ஆனால்... அதையே அளவுக்கு அதிகமாக உண்ணும் போது, இனிப்பு சுவையின் மீதே வெறுப்பு வந்து விடும். அதனால்..... திகட்டுவதற்கு முன்னரே நிறுத்தி விடுவது நல்லது.
அது போல் தான்.... வாழ்க்கையின் ஒவ்வொரு தருணங்களும் அமைகின்றன. அதை புரிந்து கொள்ளாமல், ”எனக்கு அந்த விஷயத்தின் மீது வெறுப்பு வந்து விட்டது” என்று புலம்பி கொண்டிருப்போம்.
(பணிக்கு பிறகு ஒய்வும், படத்திற்கு இடைவெளி போன்ற செயல்களெல்லாம், இவ்வெற்றிடத்தை நிரப்புகின்றன)
(பணிக்கு பிறகு ஒய்வும், படத்திற்கு இடைவெளி போன்ற செயல்களெல்லாம், இவ்வெற்றிடத்தை நிரப்புகின்றன)
வாழ்க்கையில், வேறொரு பரிணாமமாக.... இச்செயல்கள் காட்சியளிக்கிறது. தலைமுறை இடைவெளி என்பது 20-30 வருடங்கள் ஆகும். ஒரு குறிப்பிட்ட தலைமுறையில் வெற்றியாக கருதப்பட்ட ஒரு செயல்... அடுத்த தலைமுறையில்..... வீழ்ச்சியின் குறியிடாக இருக்கும்.
அதாவது முந்தைய தலைமுறையில்... சிறந்த நடிகராக கருதப்பட்ட சிவாஜி,,,,, அடுத்த தலைமுறையில் அதீத நடிப்பென விமர்சனம் செய்யப்படுகிறது. என்னுடைய அப்பா தலைமுறையில்... ரஜினி நடித்தால் வெற்றி என்ற நிலை மாறி, இன்றைய நிலையில், ரஜினியின் வெற்றியும் கேள்விக்குறி தான்!!!
கிரிக்கெட்டு வாழ்க்கையில், கங்குலியின் ஆரம்ப காலம் ரம்மியமானது... ஆனால், இறுதிக்கட்டம் கொஞ்சம் மோசமாக அமைந்தது. இதில் டிராவிட், சச்சின், தோனி போன்றோரும் விதிவிலக்கல்ல.....
மேற்கண்ட நிகழ்வில் மூலம், நாம் அறியவேண்டியது என்னவென்றால், நாம் வெற்றியாளராக இருக்கும் போது, அத்துறையில் இருந்து ஒய்வை அறிவித்து கொள்வது நல்லது... விட்டுவிட்டால்... சமூகத்தினால் அத்துறையாலே புறக்கணிப்படுவர்..... அச்செயலை காலம் செவ்வெனே செய்து விடும்...
அப்படியோரு தருணம்... .நா. முத்துக்குமாருக்கு அமைய வேண்டாமென... இறைவன் நினைத்து விட்டார் போலும்??? முன்னரே.... தன்னோடு அழைத்து கொண்டார்!!!!!!
-----------------------------------------------------------------------------
நா.முத்துகுமாரின் ஆன்ம சாந்தியடைய இறைவனை வேண்டி கொள்கிறேன்.
நா.முத்துகுமாரின் ஆன்ம சாந்தியடைய இறைவனை வேண்டி கொள்கிறேன்.
No comments:
Post a Comment