மாற்றுப் பணிக்காக... அருகிலுள்ள மற்றொரு சித்த மருத்துவமனைக்கு, என்னுடைய இரு சக்கர வாகனத்தில் செல்வது வழக்கம்....
இது ஆடி மாதமாயிற்றே!! காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். காலையில் செல்லுகையில், எந்தவொரு பிரச்சனையில்லை. ஆனால், மாலையில் திரும்புகையில்(வடக்கிலிருந்து தெற்காக) தான் பிரச்சனை. நமது வண்டியை சற்று முறுக்கினால், நானும் காற்றோடு கற்றாக பறந்து விடுவனோ?!?!? என்ற பயம் வேறு!!!!
” ஆடி காத்துல அம்மியே பறக்கும்” ன்னு பழமொழியே இருக்கே!!! இதுல என்ன அதிசயம்.... ஆச்சரியம் இருக்குன்னு நீங்கள் கேட்கலாம்..
இந்த ஆடி காற்று... எதனால் அடிக்குது.. எப்படி அடிக்குது... யொசித்து பார்த்திருமா?? இதனை பற்றிய பூகோள அறிவை.... பள்ளிக்கூடங்களில் படித்தது தான்!!! ஆனால்... அந்த அறிவியலோடு.... நான்/நாம் இதுவரை ஒப்பிட்டு பார்த்ததில்லை.... (ஏட்டு சுரைக்காயோடு நின்றாயிற்று)
தென்மேற்று பருவகாற்று மே மாத இறுதியில் தொடங்கும்.... என்ற பத்திரிக்கை செய்தியோடு கடந்து சென்றிருப்போம்!!! தமிழ்நாட்டிற்கு தென்மேற்கு பருவகாற்று மழையை தருவதில்லை (கோயமுத்தூர், கன்னியகுமாரி தவிர) என்பதால் மறந்து விட்டோம் போலும்!!!
மே மாத இறுதியில்... கேரளா கடற்கரையில் நுழைந்து.. தமிழ்நாட்டின் வழியாக.. வடகிழக்கு மாநிலங்களை சென்றடையும்... பின்னர் திரும்பி... வடகிழக்கு பருவகாற்றாக தமிழகத்தில் நவம்பர், டிசம்பரில் மழை தரும் என்பது உபரி தகவல்...
நாம் மானப்பாடம் செய்தறிவு... மதிப்பெண்ணோடு முடிந்து விடுகிறது... வாழ்வியல் புரிதலுக்கு வெகு தொலைவில் நிற்கிறது போலும்!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment