Tuesday, August 9, 2016

எழுத்தாளர்களும் எழுத்து வகையும்

தான் சொல்ல வந்த கருத்தை.... இலக்கண நெறியோடும், எதுகை மோனையோடும்..... வாசிப்பவற்கு சுவராசியம் வரும் அளவிற்கு எழுதுவது ஒரு வகை. தொடக்க கால எழுத்தாளர்கள், பெரும்பலோனோர்.. இவ்வகையினரே!!!!
கருத்தின் செறிவு குறைவாக இருக்கும். இலக்கண தன்மையும், மொழி புலமையும் மிகுந்திருக்கும்.
இன்றைய நிலையிலும், இவ்வகையினர் அதிகம் எனலாம். மக்களின் எதிர்ப்பார்ப்பத்திற்கு ஏற்ப, எழுத்தை வடிவமைப்பவர்கள்.
இவர்களை தாண்டி... இன்னொரு வகையினர் இருக்கின்றனர். கருத்து செறிவு அதிகமாக இருக்கும். எழுத்து புலமை மற்றும் இலக்கண செறிவு குறைவாக இருக்கும். இவ்வகையான எழுத்துகளை... மக்கள் குறைவாக விரும்புவதால்...... இத்தகைய எழுத்தாளர்களின் எண்ணிக்கையும் குறைவு. இவர்களிடமிருந்தே... திறனாய்வு கட்டுரைகள் வெளிப்படும்.
இரண்டாவது வகையினர், மிக்குறைவாக இருப்பதால்.... இந்திய எழுத்துகள் மீதான, வெளிநாட்டினரின் மதிப்பு குறைவாக உள்ளது.
இந்திய எழுத்துகளில், கருத்து செறிவு மிக்க எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகமாக வேண்டும்.

உங்களில் ஒருவன்’
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment