நேற்றைய தினம்... உறவினர் ஒருவரோடு பேசி கொண்டிருந்தேன். நீண்ட நேர உரையாடல் எனலாம். பேசி கொண்டிருக்கும் போது, அவர் சொன்ன விஷயத்திற்கு... என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கையறு நிலையில் நின்றேன்.
அப்படி என்ன தான் சொன்னாரு????....” பத்து வருடத்திற்கு முன் டிவிஎஸ் 50 பைக்கை 18,000 ரூபாயிற்கு வாங்கினேன். அப்போது ஒரு பவுன் 15000 ரூபாய் இருந்துது..... அந்த பைக்கை, இப்போது விற்றால் 4000 ரூபாயிற்கு கூட வாங்க மாட்றாங்க!!!! ஆனால்... ஒரு பவுன் நகையை, இப்போது விற்றாலும்... 25000 ரூபாய் வரும்...”
“ அப்ப பைக் வாங்குறது நல்லதா?? இல்ல... ஒரு பவுன் நகை வாங்கி வைத்திருப்பது நல்லதா???” என்றார்.
நான், அவருக்கு என்ன பதில் சொல்வது???
நான், அவருக்கு என்ன பதில் சொல்வது???
இந்த நிகழ்வை கேட்டவுடன்... அவர் மீது எளன பார்வை வந்திருக்கலாம்!?!?!?. நீங்கள்... இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப யோசிக்கிறீர்கள்... ஆனால்... அவரது பார்வை... மூப்பது நாற்பது ஆண்டுகளுக்கு பின்னால் இருக்கிறது... அவ்வளவு தான் வித்தியாசம்!!!!!
அவரது சிறு வயதில் பட்ட கஷ்டங்களும், வேதனைகளும் மனதில் தொக்கி நிற்பதால் மனம் மாற மறுக்கிறது. உங்களது அப்பா/ தாத்தாவிடம் கேட்டு பாருங்கள். அவர்களது சிறு வயது பருவம் துன்ப கடலிலே ஆழ்ந்திருக்கும்....
பொன், மண் போன்றவற்றை எதிர்கால தேவைக்காக பயன்படுத்தினர். பொழுது போக்கிற்காக செலவு செய்ய தயங்குவார்கள். உடலிழைப்பை பயன்படுத்த தயங்க மாட்டார்கள்.
தொழிற்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு, சேவை துறையின் வளர்ச்சியினால், சேமிப்பு பொருளாதாரத்திலிருந்து... நுகர்வு பொருளாதாரத்தினை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறோம்(நம்மை அறியாமல்).
பழமையை தூக்கி எறிவதற்கு முன்னால், சிறிது யோசித்து பார்த்து தூக்கி ஏறியுங்கள்!!! அதில் உங்களுக்கு தேவையானவை நிறைய இருக்கலாம்!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment