Friday, September 2, 2016

தத்துவங்களும், அதன் பயன்களும்

தத்துவங்களை உருவாக்குபவர்களும், அதை சொல்பவர்களும் உலகில் அதிகம். அது போல், தத்துவத்தை கேட்டு ஆராதிப்பவர்களும் அதிகம். ஆனால், நடைமுறைப்படுவர்கள் வெகு சிலரே!!!!
பொதுவான தத்துவங்கள் என்பவை, நெருக்கடி காலங்களிலே பயன்படுபவை. ஆதலால், அதை உருவாக்கியவர்களுக்கு மட்டுமே அதிகம் பயன்படும்.
மாறாக, அதை வழிமொழிபவர்களுக்கு பெரும்பாலும் பயன்படுவதில்லை. அதையும் பள்ளி கால மனப்பாட செய்யுள் போல் நினைத்து கொள்கிறார்கள். ஆழ்மனத்திற்கு கொண்டு சென்று, சிந்திப்பதில்லை.
அத்தகைய மனித குண பகுத்தறிவு வராத வரை... அவை குப்பை தொட்டியில் இடப்பட்ட குப்பைகளே!!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment