Friday, July 31, 2015

மரமும் உணர்வுகளும்

இந்த இரண்டு படங்களை பாருங்கள். ஒன்றில், தென்னை மரமும் மாமரமும் ஒரு இடத்தில் உற்பத்தியாகி வெவ்வேறு திசையை நோக்கி வருகிறது. மற்றொன்று, ஒரே நேர்கோட்டில் வைக்கப்பட்டவை. ஆனால், அதுவும் வெவ்வேறு திசையை நோக்கியே பயணிக்கிறது.
இதற்கு காரணம் என்ன??? சூரிய ஒளியை நோக்கிய சார்பசைவு இயக்கம்(phototrphism) ஆகும். 

தாவரங்கள், ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர இயலாது. ஆனால் ஒளி, நீர், புவியீர்ப்பு விசை போன்றவற்றை நோக்கி தாவரத்தின் பாகங்கள் அசையும். நீரினை நோக்கி செல்வது(hydrotrophism) மற்றும் புவியீர்ப்பு விசையை நோக்கி செல்வது(geotrophism) போன்றவை வேர்களுக்கு உள்ள குணங்கள்.

பொதுவாக நம் மனதில் தாவரங்களுக்கு உயிர் இல்லை என்ற எண்ணத்திலே இருப்போம். ஆனால் தாவரங்கள் ஒரறிவு உடையவை. அதாவது உறக்க அவத்தை உடையவை என தத்துவ நூல்கள் கூறுகிறார். உணர்ச்சியை உணர்ந்து செயல்படுபவை. இதானல் தான் தொட்டாற்சிணுங்கியும் சுருங்கிறது. இதற்கு எடுத்து காட்டுகளாகத்தான் ஒளி, நீரினை நோக்கி இயங்குகிறது.

இந்த கருத்தினை, இந்திய தாவரவியல் அறிஞர் சி.போஸ் அவர்கள், சிஸ்மோகிராப் என்ற கருவியின் மூலம் நிருபித்தார். சங்க கால நூலாகிய தொல்காப்பியத்தில்,
புல்லும் மரமும் ஒன்றறி வதுவே
பிறவும் உளவும் அக்கிளை பிறப்பே
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனோடு நாவே
என்று குறிப்பிட படுகிறது.

இதனால் தான், வீரசைவர்கள் மரங்களில் இருந்து கனிகளை பறிக்கமால், வீழ்ந்த பழங்களை உண்கின்றனர். சமண சமயமும் தாவரங்கள் உற்பட்ட அனைத்திற்கு உயிர் உண்டு என குறிப்பிடுகிறது.

தாவரங்களினை உலகில் உள்ள உயிர்களில் ஒன்றாகவே கருதுவோம். அவற்றை வெட்டுவது, கொலை குற்றமாகவே கருதுவோம். அப்துல் கலாமின் கனவினை நினைவாக்க, மரத்தினை நட்டு, நாமும் வளர்ப்போம்.

இயற்கையோடு இணைந்து வாழ்வோம்!!!
இல்லையேல்....
இயற்கை நம்மை தனித்து அனுப்பி விடும்....
மேல் உலகத்திற்கு....

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

No comments:

Post a Comment