நேற்று, சென்னை மற்றும் ராஜஸ்தான் ஆகிய
இரண்டும் அணிகளும் இரண்டு ஆண்டுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டி
ஆரம்பிக்கப்பட்ட போது, அதன் பணம் சார்ந்த அரசியல் பற்றி சொன்ன
போது யாரும் ஏற்று கொள்ளவில்லை. இப்போதும், அதே மனநிலையில் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.
தோனி இல்லாத ஐபிஎல்லை நினைத்து கூட
பார்க்க முடியாது என்கிறார் கவாஸ்கர். எந்தவொரு பெரிய விளையாட்டு வீரர்களும், இதைப்
பற்றி வாயை திறக்க மறுக்கிறார்கள்.
ஒவ்வொரு சராசரி கிரிக்கெட் ரசிகரும், தோனி
வேற அணியில் சேர்ந்து விளையாட வாய்ப்பிருக்கிறதா? சென்னை அணியை வேறொரு நிறுவனம் வாங்கி, நடத்த
முடியுமா??? என்ற கோணத்தில் யோசிக்க ஆரம்பித்து
விட்டனர்.
பெரிய அளவில் குற்றம் நடந்திருக்கிறது.
ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனும், பெரிய அளவில் ஏமாற்றப்பட்டிருக்கிறான்
என்ற புரிதல் இல்லாமல், குற்றம் புரிந்தவரை தூக்கி வைத்து
கொண்டாடுவது, என்ன மனநிலையோ????
சானியா மிர்சாவும், லியாண்டர்
பெயர்ஸும் விம்பிள்டன் போட்டியில் ஜெயித்த சந்தோஷத்தை விட, தோனி
ஐபிஎல்லில் விளையாட முடியாது, சென்னை அணி அடுத்த ஐபிஎல்லில் விளையாட
முடியாது என்பதையே பெரிய வருத்தமான செய்தியாக எடுத்து கொள்கிறார்கள். நம் எதனை நோக்கி
பயணித்து கொண்டிருக்கிறோம். குற்றம் செய்தவரை பாராட்ட சென்று
கொண்டிருக்கிறோம்..இதே நிலையில் போனால், குற்றம் செய்தவரை தோளில் தூக்கி வைத்து
கொண்டாடும் நேரம் வந்து விடும் போலும்..
உங்களில் ஒருவன்
‘உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment